Antibiotics in chicken are making humans drug resistant: study கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம். இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. தேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல்…
Read Moreகாஸாவில் இறந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை…!
Gaza doctors save baby from her dead mother’s womb காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தரைமட்டமான கட்டிடத்தில் சிக்கி பலியான 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இதனால் அந்த குழந்தை பிறக்கும் முன்பே தாயை இழந்த பரிதாபம் நடந்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய காஸாவில் உள்ள தேர் அல் பலாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு வீடு தரை மட்டமானதில் அதில் வசித்து வந்த ஷைமா அல் ஷேக் கனான்(23) என்ற 8 மாத கர்ப்பிணி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது உடல் தேர் அல் பலாலாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை…
Read More8 நிமிடத்தில் 14 கி.மீ., தூரத்தைக் கடந்த இதயம்
Heart passed 14 Km distance within 8 minutes வங்கி பெண் ஊழியரின் மூளைச்சாவு நிலையை அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளுல்ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது. சென்னை மணப்பாக்கத்தில் இருந்து, அவரது இதயத்தை, 8 நிமிடங்களில்,14 கி.மீ., தூரத்தைக்கடந்து, முகப்பேருக்குகொண்டுச்செல்லப்பட்டது. மூளைச்சாவு நிலை: எப்சிபா, வயது 22, இவர் சென்னை பாடியைச் சேர்ந்த,தனியார் வங்கி ஊழியர். இவர், உதயம் தியேட்டர் அருகே, கடந்தஜூலை, 27ம் தேதி மாலை, விபத்தில் சிக்கி, பலத்த காயம் அடைந்து, சென்னை, ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையும்பலனின்றி, மூளைச்சாவு நிலையை அடைந்தார்.இதையடுத்து, அவரின்குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை, தானம் அளித்தனர். இதையடுத்து, அறுவைச் சிகிச்சை ‘மியாட்’ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, நடந்தது. இதில், இதயம், கண்கள்,சிறுநீரகங்கள், மற்றும் கல்லீரல் என, ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது.…
Read Moreபிஹாரில் நெடுஞ்சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த வர்கல் மீது லாரி ஏறியதில் 12 பேர் பலி
Tanker collides with bus carrying pilgrims in Bihar, 12 dead பீகாரில் தேசிய நெடுஞ்சாலையோரம் படுத்திருந்த பக்தர்கள் மீது கண்டெய்னர் லாரி ஏறிய விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாகப் பலியானார்கள். படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் ஜோஷி என்பவர் ஆண்டுதோறும் இம்மாதம் பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தனி பேருந்தில் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆன்மீக சுற்றுலா திருப்திகரமாக முடிந்த நிலையில், இன்று அதிகாலையில் அவுரங்காபாத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் முப்பா சில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட டெல்லி – கொல்கத்தா தேசிய…
Read Moreமத்திய அரசு ஊழியர்கள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
Central Government employees are ordered to submit New Property List ‘அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், புதிய சொத்து விவர பட்டியலை,செப்டம்பர், 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம். அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: லோக்பால் சட்டத்தின்படி, தங்களின் சொத்துகளும்கடன்களும்குறித்த விவரங்களை, அனைத்துமத்திய அரசு ஊழியர்களும்சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆகவே, அனைத்து அரசு ஊழியர்களும், தங்களது அசையும் சொத்துகள்,அசையா சொத்துகள்,கடன்கள் மற்றும் டிபாசிட்கள் பற்றியவிவரங்களை, ஆகஸ்ட், 1ம் தேதி,2014 நிலவரத்தின்படி, சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே இதனைசமர்ப்பித்தவர்களும், மாற்றி அமைக்கப்பட்ட புதியவிவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாடு முழுவதும்மத்திய அரசு ஊழியர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் குரூப் ஏ, பி, சி என 50 லட்சம் கணக்கில் உள்ளனர். இந்த சொத்து விவரங்களை,அவர்கள் அனைவரும்சமர்ப்பிக்க வேண்டும். ஆன் – லைன் மூலம், ஐ.ஏ.எஸ்.,…
Read Moreதமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்
Sathish from Tamilnadu has won Gold Medal in Commonwealth Games தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின், எடைப்பிரிவில் 77 கி.கி., பளுதுாக்குதலில்,தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்கத்தைவென்று அசத்தினார். காமன்வெல்த் விளையாட்டு,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவிலிருந்து,சதீஸ் சிவலிங்கம் மற்றும்ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தகுதிச்சுற்றில் அசத்தி பைனலுக்கு முன்னேறினர். இதில் தமிழகத்தை சேர்ந்த,சதீஸ் சிவலிங்கம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும்’ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கி.கி., மற்றும் அதிகபட்சமாக 179 கி.கி., வரை ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் துாக்கினார். ஆக, சிவலிங்கம் ஒட்டுமொத்தம் 328 கி.கி., வரை துாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். சக வீரரானரவி,ஒட்டுமொத்தமாக 317 கி.கி., வரை துாக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். Sathish from Tamilnadu has won…
Read Moreஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது
An Android app that turns your phone into a mosquito repellent ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. உலகம் மொத்தமும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று சிலர் புலம்புகிறார்கள். மேலும் அதில் இருந்து கிளம்பும் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இந்த புகை சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. தற்போது அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள “Mosquito Repellent” என்ற…
Read Moreஇளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம்
232 Teeth were removed from young man இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம் பொதுவாக, பெரியவர்கள் என்றால் 32 பற்களும், குழந்தைகள் என்றால் 24 பற்களும் இருக்கும் என்பது இயற்கை நியதி. ஆனால், ஒரு இளைஞனின் வாயில் இருந்து, இதற்கு மாறாக, 232 பற்களை, டாக்டர்கள் நீக்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் வசிப்பவர், ஆஷிக் கவாய், வயது 17. மும்பையில் உள்ள, ஜே.ஜே., மருத்துவமனைக்கு முகம் முழுவதும் வீங்கிய நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன் வந்தார் ஆஷிக். டாக்டர்கள், ஆஷிக்கை பரிசோதித்த பின்னர், அவரை பல் டாக்டரிடம் அனுப்பினர். அங்கு பல் டாக்டர், ஆஷிக்கை பரிசோதித்து அளவுக்கும் அதிகமாக கடைவாய் பல் பெரியதாக உள்ளதால், முகம் வீங்கியுள்ளது. எனவே, அந்தப் பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்றும் கூறினார்.…
Read Moreஅதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம்
Watching TV can cause death sooner அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம் சமீபத்திய ஆய்வில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறப்பார்கள் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் டிவி பார்ப்பதால் உண்டாகும்பாதிப்புக்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் அளிக்கும் ஒவ்வொரு பொருளும் நம்உடல் நிலையைகடுமையாகபாதிக்கும்என்பதில் டிவி மட்டும் விதிவிலக்கில்லை. அனைவரும் பொழுதுபோக்காக நினைத்து விரும்பிப் பார்க்கும் டிவி, எந்த அளவுக்கு உடல்நிலையை பாதிக்கும் என்பதைபற்றிசமீபத்தில் ஆய்வு நடந்தது. மனிதர்களின் உடல்நிலையிலும்,வாழ்விலும், டிவி ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்தது. இத்தகையஆய்வுகளின் மூலம், டிவியைஅதிகம் பார்த்தால் மனிதனின் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சிகரமானத்தகவல் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு அறிக்கையில்,25 வயதிற்கு மேற்பட்டவர்கள்டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை குறைக்கிறது என தெரிவித்துள்ளனர்.டிவியைப்படுத்துக் கொண்டே பார்க்கும் பழக்கம் உள்ளதால்,பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை…
Read Moreகார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை
15th Anniversary of Kargil War கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை இன்று கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. ராணுவ தளபதி பிக்ராம்சிங்,பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை முன்னிட்டு ஜம்மு- காஷ்மீர்,திராஸ் பகுதியில் மலர்வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார். ராணுவத்தின் சவால்களை சந்திக்கும் சக்தி: அஞ்சலிக்கு பின்பு, தளபதி நிருபர்களிடம் பின்வருமாரு கூறினார், “வீரமிக்க வீரர்கள்உயிர் நீத்த திராஸ் பகுதியில் இன்று அஞ்சலி செலுத்திகிறோம். நமது ராணுவத்தினர் நாட்டின் இறையாண்மையை காக்கும்அனைத்துவிததகுதிகளும் பெற்றுள்ளளனர். நமது ராணுவம்எந்த நிலைமையையும் சவால்களையும் சந்திக்கும் சக்தியையும்,எதற்கும், எப்போதும் தயார் நிலையிலும்இருக்கின்றது. தற்போதைய மத்திய அரசு, இன்னும் ஆயுதங்களைப்பெருக்கி,ராணுவத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.” 1999ம் ஆண்டு படுதோல்வியடைந்த பாகிஸ்தான்: இமயமலையிலுள்ள கார்கில்…
Read More

