மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை

Baby born after brain dead mother kept alive for three months மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை : ஹங்கேரியில் ஒரு மூளைச்சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை நவீன மருத்துவ முன்னேற்றத்தால் சுமார் 92 நாட்கள் வயிற்றிலே வளர்த்து பிரசவிக்கச் செய்து ஹங்கேரி நாட்டு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பொதுவாக விபத்து மற்றும் சில உடல் நலக் கோளாறுகளினால் மூளைச்சாவு அடைபவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளைக் கொண்டு பாதிக்கப் பட்ட 7 பேரின் வாழ்க்கையை ஒளியூட்டலாம் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திடீர் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தகுந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளித்து…

Read More

மரத்தை மணம் முடித்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்

environmental activist married a tree in Argentina சராசரியாக ஓர் மனிதன் நாள் ஒன்றுக்கு 3 சிலிண்டர்களின் அளவு ஆக்ஸிஜனை சுவாசம் செய்கிறான். தற்சமயம் ஓர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை ருபாய் 700/- ., 3 சிலிண்டர் விலை ருபாய் 2100/-. ஓர்  வருடத்திற்கு ருபாய் 7,66,000/- க்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் ஓர்  மனிதனின் சராசரி ஆயுட்காலம் 65 வருடம் எனில் ரூபாய் 5 கோடிக்கு மேல் போகிறது., இப்படி விலை உயர்ந்த, மதிப்பு கூடுதலான  சுவாச காற்றை உயிரினங்களுக்காக இலவசமாக பச்சை மரங்கள் தருகின்றன. ஆக நாம் மரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் மரங்கள் இயற்கை மனித இனத்திற்கும் என்னய்யா உயிர் இனங்களுக்கும் தந்த பொக்கிஷம் என்பதையும் மனிதர்கள் உணரும் விதத்தில் ஓர் புதிய முயற்சியை எடுத்தார் பெரு…

Read More

இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…

Read More

நடுவானில் திறந்த விமான கதவுகள் பயணிகள் உயிர் தப்பினர்

ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று காலை சவூதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான நிலைய என்ஜினியர்கள் கதவு சரி செய்தனர். இதையடுத்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டது. இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்…

Read More

உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பிரேஸ்லெட்

A Thermoelectric Bracelet To Maintain a Comfortable Body Temperature இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று…

Read More

நெஞ்சுவலி என்றாலே மாரடைப்பா ??. தவறான கணிப்பு

Heart disease health centre நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்பு தான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய…

Read More

பேஸ்புக்கில் இணையதள பெண்கள் பாதுகாப்பு கமிட்டி

Women Protection committe has been formed to save FB women from misusing their profile images இப்பவும் தமிழகத்தில் சங்க காலம் தான் நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எல்லாவற்றிற்கும் சங்கம் வந்து விட்டது. அந்தவகையில் லேட்டஸ்டாக உருப்படியான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. அதுதான் இணையதள பெண்கள் பாதுகாப்புக் குழு.  பேஸ்புக் பக்கங்களில் பெண்களின் புரபைல் படங்களையும் அவர்கள் போடும் படங்களையும் தவறாக பயன்படுத்துவோரைத் தட்டிக் கேட்கும் குழுவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் படங்களை வக்கிரமாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தக் குழுவை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ள பகிர்வு… உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம். இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு…

Read More

துபாய் உடல் எடையை குறைவாக்கும் போட்டி: முதல் பரிசு வென்ற சிரிய நாட்டவருக்கு 63 கிராம் தங்க பரிசு

Weight reducing contest organized by DUBAI municipality : Ahmad al-Sheikh a 27 year old Syrian architect got the first prize worth of 10048 dirhams – 63 grams of gold by losing 26 kilograms .   அரபு நாடான துபாயில் உடல் எடையை வேகமாக குறைத்து காட்டியவர்களுக்கு தங்க பரிசு கொடுக்கப்பட்டது. இந்த உடல் எடை குறைப்பு போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற சிரிய நாட்டை சேர்ந்தவருக்கு 63 கிராம் தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டது. மக்களிடையே குண்டான தன்மைக்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த உடல் எடையை குறைத்து காட்டும் போட்டி ஒன்றை துபாய் நகர சபை ஏற்பாடு செய்து நடத்தியது. அந்த போட்டியில் ஜெயிப்பவ்ரகளுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை…

Read More

கண்களில் நீர் வரவழைக்காத வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை

American agricultural Scientists have developed a new type of onions which will not make the eyes to produce tears கண்ணில் நீர் வர வைக்காத நவீன புதிய ரக வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த நவீன புதிய ரக வெங்காயத்தை உரிக்கும் பொழுது ஒரு சொட்டு நீர் கூட கண்களிலிருந்து வரது என கூறபடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வருவதற்கு காரணம், அதில் உள்ள அதீதமான புரோட்டீன் சத்து தான். எனினும் புதிய ரக நவீன வெங்காயத்தில் இந்த புரோட்டீன் சத்து அளவு மிக குறைவான அளவில் இருக்கும், ஆகவே கண்ணீர் வராது என கூறபடுகிறது. இந்த கண்ணீரில்லா வெங்காயத்தை பயன்படுத்தினால், இதயநோய்களும் குணமாகும் என பேசப்படுகிறது. எடை குறைந்து இந்த வெங்காயம் குறித்து…

Read More

பிரிட்டிஷ் விமான நிறுவனம் பிரெஞ்சு இளைஞர் பயணிக்க அனுமதி மறுப்பு

Heavy fat French youth stopped in Chicago airport by British airways officials saying that he is too heavy to travel in aircraft ஒன்றரை வருடத்திற்கு முன் பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞன் தனது பெற்றோர்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக   அமெரிக்கா வந்தார்கள். 20 வயதுடைய கெவினுக்கு உடலில் உண்டான  ஹார்மோன் பிரச்சினை காரணமாக உடல் கனமாகி சுமார் 500 பவுண்டு எடையோடு இருந்தார். இந்த காரணத்திற்காக மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா வந்த கெவின் மேயோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சை முடிவுக்கு வந்த பின் அவர்கள் தங்கள் நாடான பிரான்சிற்கு திரும்பிச் செல்ல மீண்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். எனினும் விமான நிலையத்திற்கு பயணத்தேதியன்று வந்த…

Read More