பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.

Madras High court asks commissioner of police to consider plea against Egmore Inspector of Police by Traffic Ramasamy

பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து. சென்னை: சென்னை உயர் நீதி மன்றத்தில், டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். எனினும், அதே இடத்தில் மீண்டும் அதே பேனர்களை வைத்திருக்கின்றனர். இது பற்றி காவல்துறையினரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. ஆதலால், எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். எனினும் அதன் மீது எந்தஒரு நடவடிக்கை எடுக்க பட வில்லை. ஆகவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’…

Read More

ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு

Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed  for lawyers : Madras High Court

Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed for lawyers : Madras High Court ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதே நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் தேதி அவ்வழக்கறிஞர்களை கைதுசெய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. “மக்களே அதிகாரம்” வழக்கறிஞர்கள் ஹரி ராகவன் மற்றும் வஞ்சிநாதன் இருவரும் மதுரை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் “மக்களே அதிகாரம்” என்ற இயக்கத்தின் செயலாளர்களாகும். போலீசார் அவர்களுக்கு எதிராக பத்து வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி திரு ஜி.ஆர். ஸ்வாமிநாதன் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு…

Read More

PIL Petition filed in HC seeking Community certificate for Brahmin community

அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம் சென்னை:சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்தார் . அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் தர ஏழை குடும்பத்தை கண்டுபுடிப்பதில் தவறு நடப்பதாகவும் மற்றும் தேர்தலுக்காக தான் இந்த பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் நிதியுதவி தொடா்பான அரசாணையில் 9 போ் கொண்ட குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 7 போ் கொண்ட குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பத்திாிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில் இந்த நிதியை பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள சமூகங்களின் பட்டியலில் பிராமணர்களை சேர்க்கவும், அவர்களுக்கு சமுதாய சான்றிதழ்களை வழங்கவும் ஒரு வேண்டுகோள் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குட்ஹோஸ் ஆகியோரின் தலைமையிலான பெஞ்ச் முன் வந்த பொதுநல வழக்கை நீதிபதி ஹுலவிதி ஜி.ரமேஷ் விசாரிக்க உத்தரவிட்டார். ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று மனுதாரர் கூறியுள்ளார். சமுதாய சான்றிதழ்களை பிற சமூகங்களுக்கு வழங்கியபோது, ​​அவர்கள் ஏன் பிராமண சமூகத்தின் விஷயத்தில் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் படி பிராமணர்கள் சமூகம் என வகைப்படுத்தப்படாமலும், அவர்களுக்கு சமுதாய சான்றிதழ்கள் எழும் என்பதையும் தகவல் அறியும்…

Read More

கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்….

Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்…. மாணவனை பள்ளியை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு.. சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்து இருக்கும் மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 500 க்கும் கூடுதலான மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கணினி ஆசிரியராக புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சார்ந்த திருமதி.லட்சுமி (வயது 36) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நேற்று மாலை கணினி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கணினியை திடீரென புகுந்து அணைத்து விட்டான். இதனால் மாணவன் ஆகாஷை…

Read More

சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி…

Read More

சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலி

Two killed as portion of old building collapses in Chennai சென்னை பாரிமுனையில் பலசரக்குக் கிடங்கின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி நேரில் ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னை பாரிமுனை மலையபெருமாள் கோயில் தெருவில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான பலசரக்குக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலசரக்குக் கடை ஊழியர் ராஜா (50), அருகிலுள்ள தேங்காய் கடையைச் சேர்ந்த சுபாஷ் (24), குமார் (50) ஆகிய மூவரும் இருந்தனர். அப்போது அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் மதில் சுவர் திடீரென சரிந்து, கிடங்கின் மேற்கூரை மீது விழுந்தது. இதில், இடிபாடுகளில் மூவரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல்…

Read More

சீருடையுடன் ஊர்வலம் சென்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது

RSS workers arrested across Tamil Nadu ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடையை மீறி சீருடை அணிந்து ஊர்வலம் செல்ல முயன்றதால் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000 ஆவது ஆண்டு தொடக்க விழா, ஆர்.எஸ்.எஸ்., தொடங்கியதன் 90ஆவது ஆண்டு, விவேகானந்தரின் 159 ஆவது பிறந்த நாள், மற்றும் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், திருவண்ணாமலை காமராஜர் சிலை பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரண்டனர். பின்னர், தொண்டர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து ஊர்வலத்துக்குத் தயாராகினர். அப்போது, பாதுகாப்புக்காக வந்திருந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்க உங்களுக்கு அனுமதி இல்லை…

Read More

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்ட விரோதம் : உச்சநீதி மன்றம் தீர்ப்பு..

No Caste based census : Supreme court Judgement புதுடெல்லி, நவம்பர் : 07– சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்டவிரோதமானது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஓர் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிய ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்தபட வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்று சென்னை உயர் நீதி மன்றம் சாதிய வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதி மன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதி…

Read More

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஆய்வு குழு: சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

Sagayam, an IAS officer as a special commissioner to probe the mining irregularities ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து கனிமவள முறைகேடு குறித்த அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக பிரபல சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாரயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.சோமையாஜி, அந்த அரசாணையைத் தாக்கல் செய்தார். மேலும் அவர், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.இராஜாராமன், சகாயம் நியமனம் மதுரை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் வகையில் உள்ளது என்றும், தமிழகம் முழுவதும் நடைபெற்ற கனிம முறைகேடுகளை…

Read More

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…

Read More