Chennai doctor’s wife robbed at gunpoint சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள், 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை…
Read MoreCategory: சென்னை சிறகுகள்
தமிழ்நாடு காவல் துறைக்கு புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குனர் : திரு.அசோக் குமார் நியமனம்.. Tamilnadu new DGP Mr.Ashok Kumar.
Tamilnadu new DGP – Mr.Ashok Kumar. தமிழ் நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குநராக உளவுத்துறை டி.ஜி.பி.யாக இருந்த திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையினுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கே.ராமானுஜம் நவம்பர் மாதம் 4-ம் தேதியோடு பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி, அந்தப் பணிக்கு தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றிய திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் திரு.மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்துள்ளார். இதனிடையே மேலும், ஓய்வு பெறும் டி.ஜி.பி. திரு.ராமானுஜத்தை தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமித்து உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். புதிய டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.அசோக் குமார், ஹரியாணா…
Read Moreஸ்ரீபெரும்புதூர் நோக்கியா அலைபேசிச்தொழிற்சாலை மூடல்.. : Sriperumbudur Nokia Factory closed
Sriperumbudur Nokia Factory closed ஸ்ரீபெரும்புதூரில் பெங்களூர் நெடுஞ்சாலையில் பிரபலமாக இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதைநயடுத்து, அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்களுக்கு திரும்பவும் வேலை வழங்க வேண்டும் என கோரி தொழிற்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை வரும் நவம்பர் மாதம் முதல் தேதியான சனிக்கிழமை முதல் மூடப்படுவதாக நோக்கியா நிர்வாகம் முன்பே தெரிவித்திருந்தது. அதன்படி, 01/11/2014 – சனிக்கிழமை முதல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், தொழிற்சாலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்து வந்த 2000…
Read Moreதமிழகத்தில் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது : – மத்திய இணையமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன்
BJP minister Pon.Radha Krishnan said today that NDA alliance in tamilnadu is very strong enough and this will successfully continue in 2016 Tamilnadu assembly election. சென்னை : – தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்தின் பிறந்த நாளையோட்டி வாழ்த்து தெரிவிக்க, மத்திய இணை அமைசசர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு சென்றார்கள். அதன் பின், வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியில் வந்த, மத்திய இணை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி சார்பாகவும், பா.ஜ.க. சார்பாகவும், தனிப்பட்ட என் சார்பாகவும் தே.மு.தி.கத்தின் தலைவர் திரு.விஜயகாந்தை நேரில் சந்தித்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன் என கூறினார்.…
Read Moreதிருவள்ளுவர் மாவட்டத்தில் சுற்றுச்சுவர் விழுந்த விபத்தில் தனது உயிரை கொடுத்து மகனை காப்பாற்றிய கொத்தனார்
tiruvallur wall collapse my father sacrificed his life to save me son interview திருவள்ளூர் மாவட்டம் உப்பரப்பாளையம் என்ற இடத்தில் நடந்த குடோன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரு கொத்தனார் தனது மகன் மீது விழுந்து அவரது உயிரைக் காத்து தான் இறந்துள்ள உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. அலாமதி அருகேயுள்ள உப்பரபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 2 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கிடங்குகளின் அருகே புதிதாக மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணியில் ஆந்திரா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவரையொட்டி குடிசை வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இதில் குடும்பம், குடும்பமாக தொழிலாளர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சுற்றுச்சுவர் இடிந்து குடிசை வீடுகளில்…
Read Moreஉலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Students in India has increased world wide said a Statistical research உலகளவிலாவியபுள்ளி விவரஆய்வொன்று இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித் வருவதாக தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா உலக அளவில் முதலிடத்திலிருப்பதுஅனைவருக்கும் தெரிந்து. அதே சமயம் ஆய்வு அறிக்கையொன்றில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 315 மில்லியன்என வெளியாகியுள்ளது. இதுகிட்டதட்ட அமெரிக்காவின் மக்கள் தொகையான 318 மில்லியனைநெருங்குகிறது. மேலும் ஆய்வில்,சீனா மாணவர்களின் எண்ணிக்கை 252 மில்லியன்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாஉலகளவில் மாணவர்களின் எண்ணிக்கையில்நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பகுதிநேர தொழில் செய்யும் மாணவர்கள் மேலும் இந்தியாவில் பகுதிநேர தொழில் செய்யும் மாணவர்களின் எண்ணி்க்கை 9.5மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் ஆறு மாதத்திற்கு மேல் எவரும் ஒரேதொழிலில் நீட்டித்திருப்பதி்ல்லை எனவும் தெரிய வந்துள்ளது. கல்விக்கடன் மற்றும் குடும்பபொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் காரணத்தால் பணியில் ஈடுபடுவதாகவும், அவ்வாறுஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையில்…
Read More72 மணிநேரம் கழித்து இடிபாடுகளில் இருந்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி என் செருப்பு எங்கே
After 72 hours under rubble, man emerges asking for his slippers மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான். சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார். கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவர் சிக்கிய இடத்தில் மோப்ப நாய் குரைத்தது. இதையடுத்து மீட்பு பணியினர் அங்கு யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்தனர். அப்போது தான் அங்கு…
Read Moreசென்னையில் முப்பத்தி ஐந்து ஆயிரம் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்
thirty five thousand buildings chennai were constructed illegally சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் எவ்வித அனுமதியின்றி சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் போரூர் மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அக்கட்டிடத்தில் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருவதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே கட்டிட விபத்திற்கு இடி விழுந்தது தான் காரணம் என கட்டுமான நிறுவனம் கூறினாலும், ஏரி நிலத்தில் 11 மாடி கட்டியதே முக்கியக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக இடிந்த கட்டிடத்தில் அருகில் உள்ள மற்றொரு 11…
Read Moreஇந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Australian Research center has warned drought risk in India இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த ஆண்டு எல்-நினோ என்று அழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தின் காரணமாக இந்தியாவில்பருவமழை குறைந்து, கடும் வறட்சி ஏற்படும் அபாயமுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியவின்வானிலை மாற்றங்களை பசிபிக் கடலின் மேற்பரப்பின்வெப்பம் தான் தீர்மானிக்கிறது. இவ்வெப்ப நிலை சீராக இருந்தால்தான், இந்தியாவின் வானிலை நன்றாகஇருக்கும். இல்லையென்றால் கடும் வறட்சி, அல்லது அதிக மழை பொழிவு உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பருவநிலை,மேற்கு பசிபிக் கடலோரபகுதியின்வெப்ப நிலைமற்றும் கடல் அழுத்தத்தையும்கணக்கிட்டு தான் கணிக்கப்படுகிறது. தள்ளிப்போகியுள்ள பருவமழை: இந்த ஆண்டு புவி வெப்பம் அதிகரித்துள்ளதால், எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு வழக்கத்திற்கு மாறாக வெப்பமாக உள்ளது. இந்தியாவில்,இந்த ஆண்டிற்க்கான…
Read Moreசென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரெளடி வெட்டிக் கொலை
Rowdy dies after attack in GRH சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரௌடி பொக்கை ரவி திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி என்ற பொக்கை ரவி (35). இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், நரம்பு தளர்ச்சி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த ரவி, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மூட நீக்கியல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரவி திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சாந்தகுமார், தமிழச்செல்வன் ஆகியோருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல், திடீரென பொக்கை ரவியை அரிவாளால்…
Read More