Parents have complained to upgrade Mugalivakkam Government School Standard to Higher Secondary School முகலிவாக்கத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தநடவடிக்கை எடுக்கவில்லை என்றுகல்வி அதிகாரிகளின் மீது, மாணவ, மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டு. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட முகலிவாக்கம், அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இதில்325 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.மாணவ, மாணவிகள் முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனந்தபுரம், குன்றத்துார் ஆகிய பகுதியில் இருந்து இங்கு படிக்க வருகின்றனர். நடவடிக்கை இல்லை : இங்கு 10ம் வகுப்பு முடிக்கும்மாணவர்கள், பிளஸ் 1 படிக்க, முகலிவாக்கத்திலிருந்து, போரூர், பரங்கிமலை, பாய்கடை ஆகிய பகுதிகளிலுள்ளஅரசு மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று படிக்கவேண்டியுள்ளது. இவை முகலிவாக்கத்திலிருந்து 3ல் இருந்து 5 கிலோ மீட்டர் தூரமாகும். அதலால் இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக…
Read MoreCategory: சென்னை சிறகுகள்
சென்னை போரூர் அருகே 11 மாடிக் கட்டிடம் இடிந்து பயங்கர விபத்து
Chennai Building Collapse: One Dead, 50 Feared Trapped சென்னையில் பெய்த திடீர் மழையில், போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். சென்னையில் இன்று மதியம் , திடீர் மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு என சில மணி நேரத்தில் சென்னை அல்லோகலப்பட்டது. இடிந்த விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், குறிப்பாக அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை, மீட்க கட்டட இடிபாடுகளில் உள்ள கம்பிகள் இடையூறாக கூறப்படுகிறது. இதனால் கம்பிகளை அகற்ற மீட்பு படையினர்…
Read Moreமோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?
Railway line between Avadi and Sriperumbudur – Will it get renewed in Modi’s Period? மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா? -என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள் பொதுமக்கள், பயணிகள் மற்றும் தொழில்நிறுவணங்கள். ஸ்ரீபெரும்புத்தூர், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் பல தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அமைந்துள்ளன. தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சாலைகள் வயலாக மட்டுமே அனுப்ப படுகிறது. இப்பொருட்கள் ரயில்களில் அனுப்ப வேண்டும் என்றால் சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை எடுத்துச்சென்று, பிறகு சரக்கு ரயில்களில் ஏற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அங்குள்ள தொழில் நிறுவனங்கள் இப்பொருட்களை ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்தே நேரடியாக எடுத்துச்செல்ல தனி ரயில் பாதை அமைத்து தருமாறு கோரிக்கையளித்தனர். ரூ. 600 கோடி செலவில் புதிய பாதை ரயில்வே நிர்வாகம்,…
Read Moreநூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்
நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர் Hundreds of Congress Men Paid Homage to late Prime Minister Rajiv Gandhi மே 23, 2014 அன்று காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பலர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவகத்தில் ஒன்று கூடி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் செயர்குழு தலைவர் திரு. B. S. ஞாணதெசிகன் மற்றும் அவரது தொண்டர்கள் ராஜீவ் காந்தி இறந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மற்றும் திரு. B. S. ஞாணதெசிகன் அவர்கள் மறைந்த இராணுவ அதிகாரியின் மனைவி திருமதி. இந்து ரெபிகா வர்கீஸ்க்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்கினார். திரு. B. S. ஞாணதெசிகனுடன் முன்னால் மத்திய அமைச்சர்கள் திரு. V.…
Read Moreஜூன் 19ஆம் தேதி சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
Auto drivers to go on strike on Thursday பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (ஜூன் 19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆட்டோ ஓட்டநர் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு), ஏஐடியுசி, விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள், குட்வில் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலர் பாலு கூறியது: எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். போலீஸôர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் வாகனங்கள் விடுக்கப்பட வேண்டும் என்பதோடு, மொத்தம் 3,400 ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூடுதல் கட்டண புகாரின் பேரில் வசூலிக்கப்பட்ட…
Read Moreசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,வைரம் பறிமுதல்
Gold and other valuables seized from 2 railway passengers சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்ல இருந்த பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விவரம்: ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு செல்வதற்காக வந்த வசுந்தராஜ் என்பவர் கொண்டு வந்த பையில், மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்கம், 400 கிராம் வைரம், 300 கிராம் பிளாட்டினம் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விசாரணை செய்தபோது, தான் ஒரு நகை விற்பனையாளர் என்றும், தங்கம், வைரம் ஆகியவற்றை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார். இருப்பினும்…
Read Moreசென்னையில் லேசான நில அதிர்வு : சென்னை வாசிகள் அச்சம்
Earthquake off Odisha sparks tremors, panic in Chennai வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் பல இடங்களில் பூமி அதிர்ந்தது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் வங்கக் கடலில் 10 கிமீ ஆழத்தில் புதன்கிழமை இரவு 9.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு, வட இந்தியா மற்றும் சென்னையில் சில இடங்களில் அதிர்வு உணரப்பட்டது. ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி…
Read Moreலஞ்சம் வாங்கிய கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது
Revenue inspector of Kelambakkam was arrested by Directorate of Vigilance & Anti-Corruption sleuths சென்னை,மே.21 காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்போரூர் ஒன்றியத்தில் பட்டிபுலம் எனும் ஊரை அடுத்து உள்ள புது இடையூர் குப்பம் எனும் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் சுமார் 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு (NOC) தடையில்லா சான்றிதழ் எனும் அனுமதிசான்றிதல் புதுப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஆய்வு நடத்தி பள்ளிக்கு அனுமதிச்சான்று வழங்கக்கோரி பள்ளிக்கூட நிர்வாகி கண்ணன் திருப்போரூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்து இருந்தார். இதுசம்பந்தமாக பள்ளிக்கட்டிடங்களை ஆய்வுசெய்து அறிக்கை வழங்கும்படி கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தாசில்தார் ஆறுமுகம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆய்வு செய்த மணிவண்ணன், அனுமதி சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்துவந்தார். இதுகுறித்து பள்ளிக்கூட நிர்வாகி…
Read Moreபத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை..
DMK Cadres : Journalists Attacked by DMK Cadres infront of DMK treasurer M K Stalin பத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை.. பத்திரிகை நிருபர்கள் திமுக தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக சார்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திமுக அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து, அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். அப்பொழுது பத்திரிகை நிருபர்கள் சிலர் மூ க ஸ்டாலின் மீது தவறான விமர்சனம் வைத்ததாக நினைத்துக்கொண்டு, திமுகவினர் சிலர் அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி திமுக அறிக்கையில் அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் சில ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆயினும், பத்திரிகை நிருபர்கள் மீது நடைபெற்ற…
Read Moreசென்னையில் வாக்கு எண்ணும் மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக மர்ம நபர் மிரட்டல்
bomb threat vote counting centres chennai சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 42 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் வாக்கு எண்ணுகையில் மையங்கள் உள்பட சென்னையில் 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். சென்னையில் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் இந்த 3 மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று…
Read More