சென்னை:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 35 பேர் விண்ணப்பித்தனர். அதில் பாலசுப்ரமணியன் மற்றும் கணேசன் ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். பிறகு இவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு சுப்பிரமணியனை துணைவேந்தராக நியமிக்க உத்தரவிட்டனர்.கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் , முறையான தேர்வு நடத்தி தகுதியான துணைவேந்தரை நியமனம் செய்ய கோரி கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு அண்மையில் நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தகுதியின் அடிப்படையிலேயே நியமனம் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
