நார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி

Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER, Sogn Fjordane county in Norway ஆஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில், பேருந்தை கடத்த முயற்சி செய்த சம்பவத்தில், 3 பேர் கொல்லபட்டார்கள். நார்வே நாட்டின் தலைநகரமான, ஆஸ்லோவில் இருந்து, சுற்றுலா தளமான, வால்ட்ரஸ் என்னும் பகுதிக்கு, சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய இந்த பேருந்தில் பயணித்த, சூடான் நாட்டு நபர் ஒருவன், பேருந்தை கடத்தும் நோக்கத்தில், ஓட்டுனரை குத்தி கொன்றான். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில், 19 வயது இளம் பெண் மற்றும் சுவீடன் நாட்டு பிரஜை (50 வயது) ஒருவரும் கொல்லப்பட்டனர். வழியில் காவல்…

Read More

குழந்தைகளுக்கு கணினி புரோகிராம் போதனை செய்யும் ரோபோ

Play-i – The New Generation Robots for Children to learn computer Programming   இந்த கணனி இணைய யுகத்தில், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் என்று எல்லாத்துறைகளையும் கணினி தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்று உலகத்தில் கணனி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளையும் பெரிய வளர்ச்சிக்கும் கொண்டு சென்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மாணவர்களின் மேற்படிப்புக்கு மட்டும் கணினி கல்வி உபயோகப்பட்டது. எனினும் தற்சமயம் செல் போன் தொலைபேசி, மற்றும் இதர இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே கணனிக் கல்வி அவசியம் தேவை படுகிறது. ஆகையால் சிறுவயதில் கம்ப்யுடரை பயன்படுத்த குழந்தைக்கு பெரியவர்கள் உதவி அவசியம் தேவைபடுகிறது. எந்த வயதுகளில் எந்த வகையான தொழில்நுட்ப முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எந்த வகையான நன்மைகளை தம் குழந்தைக்கு கொடுக்கும் என்பது…

Read More

தாய்லாந்தில் திருநங்கை உலக அழகு ராணி போட்டி: பிரேசில் அழகி தேர்வு

Brazilian Won Miss International Transgender Contest held at Thailand தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்த புகழ்பெற்ற திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் பிரேஸில் நாட்டை சார்ந்த திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுமார் 17 நாடுகளிலிருந்து 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். வருடாவருடம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இந்த திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய 17 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர். அவர்களது அறிவுக் கூர்மை, உடல் மற்றும் முக வசீகரம், ஆகியவையின்  அடிப்படையில் இந்த அழகு ராணி பட்டத்துக்கு…

Read More

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் புகுந்த வாலிபர் திடீர் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

Gunman aged 23 years shot the airport security officials in Los angeles international airport. His name is  Paul A Ciancia அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிரபல சர்வதேச விமான நிலைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 23 வயது வாலிபர் ஒருவர்  திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒரு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபாட்ட  23 வயதுடைய பவுல் அந்தோணியோ சியான்சியா என்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அவர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த கொலைவேறிசெயல் குற்றத்திற்கு மரண தண்டனை கிடைக்கும் என காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள்.  Gunman aged…

Read More

நைஜீரிய கிறிஸ்தவ தேவாலய விழா நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாப சாவு

roman catholic festival : 30 people were dead at Nigeria in a roman catholic festival stampede நைஜீரியாவினுடைய மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நிக்போர் நகரில் டொமினிக் கத்தோலிக கிறிஸ்தவ பாதிரியார்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கத்தோலிக கிறிஸ்தவ தேவாலயத்தில் இரவு முழுவதும் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) அனம்பரா மாகாண கவர்னர் விழாவில் பங்கேற்க அங்கு வந்தார். அப்பொழுது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 17 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயர வாய்ப்பு உண்டு என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாக புதிய நம்பத்தகுந்த…

Read More

தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் 'இசைப்பிரியா'வை கொன்ற புதிய அதிர்ச்சி வீடியோ!

New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader இலங்கை ராணுவம் இறுதிப் போரினில் தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ‘இசைப்பிரியா’வை கைது செய்து அதற்கு பின் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவரை கொன்றது  தொடர்பான புதிய ஓர் போர்க்குற்ற ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரால் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு அரைகுறை ஆடையுடன் கிடக்கும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. எனினும் ‘இசைப் பிரியா’ அந்த போரின் போது தான் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் கூறி வந்தது. இந்த நிலையில் இசைப்பிரியா இலங்கை ராணுவ வீரர்களால் உயிரோடு சிறைபிடிக்கப்பட்ட வீடியோ அதரம் ஒன்றை நேற்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. ஒரு கடற்கரையில்…

Read More

கத்தாரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சு திணறி பலி

4 Indians were dead of suffocation in Qatar while cleaning in a sewage manhole 4 Indians killed in manhole accident in Qatar கத்தாரில்  பாதாள சாக்கடை  சுத்தம் செய்த போது 4 இந்தியர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக செத்தனர். அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர்  பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தனர்.  இறங்கி சுத்தம் செய்த போது, திடீரென்று அவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது. இந்த மூச்சு திணறலில் 4 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக செத்தனர். பலியான 4 இந்தியர்களின் விபரம்: பலியானவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்: 1. இசாக் (வயது26), 2. பாசில் (வயது 30), 3. முனீர் ( வயது 20) 4. முகம்மது இறந்தவர்கள் அரபு…

Read More

சீனாவில் தலைக்குள் பாய்ந்த கத்தியோடு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அதிசயநபர்

 cool Man Walks into the Hospital with 10 Inch Knife Buried in his Skull in china   சீனாவில் தலைக்குள் 10 அங்குலம் பாய்ந்த கத்தியோடு ஒரு நபர் நடந்து வந்து சிகிச்சை பெற்று கொண்டது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சீனாவினுடைய வடகிழக்கில் இருக்கும் ஜீன் மாகாணத்தின் யான்ஜி எனும் இடத்தை சேர்ந்தவர் ஹோ லுங். கத்தியை வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இவர், எதிர்பாராத விதமாக இவருடைய நண்பர் இவரை விளையாட்டாக தள்ளிவிட அவருடைய கையில் இருந்த கத்தி ஹோலுங்கின் தலைகுள் பாய்ந்தது. இதை கண்ட நண்பர் தான் கொலை செய்துவிட்டதாக நினைத்து அலறியடித்துக்கொண்டு அவ்வீட்டைவிட்டு வெளியேறினார். கீழே விழிந்து மயக்க நலையில் இருந்த ஹோ லுங், நினைவு திரும்பியவுடன் தலையில் இருந்த கத்தியோடு தானே மருத்துவமனைக்கு…

Read More

இந்தோனசியாவில் பிரபலமாகிவரும் மலைப்பாம்பு மசாஜ்

Full Body Python Massage becoming very famous in Indonesia தற்போது இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜ் செய்துகொள்வது அந்த நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த  வரவேற்பை பெற்றுள்ளது. மலைப்பாம்பு மசாஜ் செய்துக்கொள்வோரின்  எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் இங்கு கூடுதலாகி வருகிறது. பெரும்பாலான சுற்றுலா தளங்களில் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதற்கென பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருக்கும் ஒரு மசாஜ் நிலையத்தில் சற்று வித்தியாசமான வகையில் வாடிக்கையாளர்களை கவர மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது. உடலின் மேல் மலைப்பாம்புகளை நகர விடப்பட்டு  மசாஜ் செய்யப்படும். இந்த பாம்பு மசாஜ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்குவதாக இந்த நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பாம்பு மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கூடியுள்ளது. ஏராளமான பயணிகளும் உள்ளூர்…

Read More

சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கும் விவாகரத்து

Increasing Divorce in China. About 41 percent of divorce in 6 months are done to avoid property tax 2013, கடந்த செப்டம்பர் மாதம் வரை சீனாவில் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண முறிவு செய்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரிலும் இந்த நிலையே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அங்கே  விதிக்கப்பட்டிருக்கும் கூடுதலான சொத்து வரி தான் காரணம் என கூறப்படுகிறது. சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒரு குடும்பத்துக்கு ஓர் குழந்தை எனும் திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அங்குள்ள மக்கள் ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆதலால், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் முற்றிலும் குறைந்து வருகிறது. அதனால், திருமணத்த்திற்கு பெண் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்த பிரச்சினை ஒரு பக்கம் இருக்கும் போது…

Read More