Gunman aged 23 years shot the airport security officials in Los angeles international airport. His name is Paul A Ciancia
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிரபல சர்வதேச விமான நிலைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 23 வயது வாலிபர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒரு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபாட்ட 23 வயதுடைய பவுல் அந்தோணியோ சியான்சியா என்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அவர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த கொலைவேறிசெயல் குற்றத்திற்கு மரண தண்டனை கிடைக்கும் என காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள்.