கேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !

கேரளாவில் ஏ.டி.ஜி.பி யாக பணிபுரியும் சுதேஷ் குமாரின் மகள் அவரது இல்லத்தில் ஆர்டலியாக பணிபுரியும் கவாஸ்கரைத் தாக்கியதைத் தொடர்ந்து போலீஸ் பட்டாலிய பொறுப்பிலிருந்து ஏ.டி.ஜி.பி விடுவிக்கப்பட்டார்.

Read More

கர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்

கர்ப்பிணி பெண் உஷா

திருவெறும்பூர் கர்ப்பிணி பெண் உஷா மரண சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் இருக்கும் சூலமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் திரு.ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (வயது 36). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய ராஜா தனது மனைவியை பரிசோதனைக்காக திருச்சியில் இருக்கும் ஓர் தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் இரவு சுமார் 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் வந்தார்கள். அப்பொழுது அங்கே பணியில்…

Read More

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

Karthi Chidamnaram INX media case

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 6ஆம் தேதி வரை சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தன் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். ஓயாமல் சோதனைகள் நடத்தி கண்ணியத்தைக் கெடுப்பதாக கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரமும் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு வழக்கு விசாரணை பற்றி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விபரம் : 2007-08ஆம் ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு…

Read More

PIL Petition filed in HC seeking Community certificate for Brahmin community

அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம் சென்னை:சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்தார் . அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் தர ஏழை குடும்பத்தை கண்டுபுடிப்பதில் தவறு நடப்பதாகவும் மற்றும் தேர்தலுக்காக தான் இந்த பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் நிதியுதவி தொடா்பான அரசாணையில் 9 போ் கொண்ட குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 7 போ் கொண்ட குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பத்திாிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில் இந்த நிதியை பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள சமூகங்களின் பட்டியலில் பிராமணர்களை சேர்க்கவும், அவர்களுக்கு சமுதாய சான்றிதழ்களை வழங்கவும் ஒரு வேண்டுகோள் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குட்ஹோஸ் ஆகியோரின் தலைமையிலான பெஞ்ச் முன் வந்த பொதுநல வழக்கை நீதிபதி ஹுலவிதி ஜி.ரமேஷ் விசாரிக்க உத்தரவிட்டார். ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று மனுதாரர் கூறியுள்ளார். சமுதாய சான்றிதழ்களை பிற சமூகங்களுக்கு வழங்கியபோது, ​​அவர்கள் ஏன் பிராமண சமூகத்தின் விஷயத்தில் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் படி பிராமணர்கள் சமூகம் என வகைப்படுத்தப்படாமலும், அவர்களுக்கு சமுதாய சான்றிதழ்கள் எழும் என்பதையும் தகவல் அறியும்…

Read More

கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்….

Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்…. மாணவனை பள்ளியை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு.. சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்து இருக்கும் மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 500 க்கும் கூடுதலான மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கணினி ஆசிரியராக புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சார்ந்த திருமதி.லட்சுமி (வயது 36) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நேற்று மாலை கணினி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கணினியை திடீரென புகுந்து அணைத்து விட்டான். இதனால் மாணவன் ஆகாஷை…

Read More

ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி செய்த வாலிபருக்கு கல்லூரி மாணவிகள் கையால் பெல்ட் அடி.

youth attacked by Eve tease victim college Girls in Haryana ஹரியானா மாநிலத்தில் ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி  செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட வாலிபரை கல்லூரி மாணவிகள் தாங்கள் அணிந்திருந்தப் பெல்டால் அடித்து உதைத்தனர். கல்லூரி முடித்து வீடு திரும்பும் வழியில், பஸ்ஸில் பயணம் செய்த சகோதரிகள் இருவரை, அதே பஸ்ஸில் பயணம் செய்த கொண்டிருந்த ஒரு வாலிபர் தொடர்ந்து கேலி  செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளார். அந்த வாலிபர் டீசிங் செய்வதை கண்டும் காணாதது போல் மற்ற பயணிகள் இருந்த போதிலும் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த சகோதரிகள் கேலி செய்த வாலிபரை கடுமையாக தாக்கினார்கள். இந்த கடும் தாக்குதலால் நிலைகுலைந்த ஈவ் டீசிங் செய்த வாலிபரை, பஸ்சின் கண்டக்டர் அருகே இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் தீவிர…

Read More

நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை – ஆடுகள் கொன்று குவிப்பு ….

more than 5,000 buffaloes, sheeps, goats and other Birds animals slaughtered in Nepal animal sacrifice ritual நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை-ஆடுகள் கொன்று குவிப்பு …. காட்மாண்டு, நவ. 29– நேபாள கால்நடை பலி திருவிழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன. நேபாள நாட்டின் பாரா மாவட்டத்தில் இருக்கும் பரியபூர் எனும் கிராமத்தில் கதிமாங் அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஓர் முறை மிகப்பெரிய கால்நடைகளை பலிகொடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கால்நடை பலி திருவிழா நேற்று துவங்கியது. 2 நாட்கள் மட்டும் நடக்கும் இந்த பலி திருவிழாவில் பல்லாயிரகணக்கான கால்நடைகள் பலியிடப்படுகின்றன. தலா ஓர் பன்றி, புறா, வாத்து, சேவல், எருமை போன்றவற்றை…

Read More

கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…

Kerala planned new Pambar : T N government moved to the Supreme Court seeking directions to restrain Kerala from proceeding with the construction of a dam with a storage capacity of two tmcft across river Pambar at Pattissery in Idukki district. புதுடெல்லி: கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் அமராவதி அணை 1958-ம் ஆண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும்…

Read More

இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…

Read More

சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி…

Read More