Tamilnadu Government small bus with ADMK Two leaves Symbol to be erased : M.K Stalin சிறிய பேருந்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் அதிமுக வின் இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டது என்னெவென்றால் : – முதல்-அமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்ற்று கொண்ட பின், அவரது அதிமுக கட்சியின் விளம்பரப்படுத்துவதற்காக ‘இரட்டை இலை‘ சின்னத்தை சிறிய பேருந்தில் பொறித்து அரசாங்க பணம் பெரும் தொகை செலவு செய்யப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி ரூ.7.70 கோடி செலவில்…
Read Moreஇந்திய செயற்கை கோள் "மங்கள்யான்" ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
India Mars mission : India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இந்தியாவின் இந்த முயற்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவானில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்பியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் நெற்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது. India Mars mission : India’s…
Read Moreமும்பை விமான நிலையத்தில் முன் அனுமதி கடிதம் பெறாத ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடம் பறிமுதல்
Miss Asia Pacific World 2013 Srishti Rana’s crown seized at Mumbai airport இந்த ஆண்டின் ஆசிய பசிபிக் அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய அழகியின் வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 30 ஆம் தேதி தென் கொரியாவில் இருக்கும் புஷன் நகரில் ஆசிய பசிபிக் அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 49 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். இதில் 21 வயது இந்தியா அழகி சிரிஷ்டி ராணா முதல் இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து அவருக்கு வைரங்கள பதித்தப்பட்ட கிரீடம் ஒன்றை கடந்த ஆண்டு இந்த அழகி போட்டியில் வென்ற ஹிமாங்கினி சிங் யாது சூட்டினார். மிகவும் சந்தோஷத்தோடு மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை வந்தடைந்த சிரிஷ்டி ராணாவிற்கு…
Read Moreஅமெரிக்காவில் முதியவர் ஒருவர் 100வது பிறந்த நாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம்
Riverside County man skydives on 100th birthday 100 வயதான ஒரு முதியவர் அமெரிக்காவில் தனது 100வது பிறந்த நாளில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாகசம் செய்து சாதனை படைத்துள்ளார். தென் கலிபோர்னியாவை சேர்ந்தவர் வெர்னான் மேனார்டு. நேற்று இவர் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். கார் வியாபாரியான இவர் இந்த 100 ஆண்டுகளில் உன் வாழ்வில் என்ன செய்ய விரும்பினாய் என இவரது நண்பர்கள் கேட்டதற்கு உற்சாகமாக பதிலளித்த முதிய இளைஞர் வெர்னான், தான் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் ஸ்கை டைவிங் செய்யவேண்டுமென்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதியவர் வெர்னானின் தனது பிறந்த நாளான நேற்று கலிபோர்னியாவில் இருக்கும் பெர்ரிஸ் நகரில் வானத்தில் பறந்த விமானத்தில் 13,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து…
Read Moreகோவில்பட்டியில் 5 பேர் கொண்ட கும்பலால் 2 பேர் வெட்டி கொலை
Two friends were hacked to death in Kovilpatti by a 5 member gang தென் தமிழ்நாட்டில் உள்ள பிரபல தொழில் நகரங்களில் ஒன்றான கோவில்பட்டியில், ஐந்து பேர் கொண்ட கும்பல் 2 நண்பர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடியது. பாலமுருகன் கோவில்பட்டியைச்சேர்ந்தவர். இவருடைய நண்பரின் பெயர் முருகன். பாலமுருகன் கோயில்பட்டி நகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த இரு நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து, அவர்கள் 5 பேரும் சேர்ந்து பாலமுருகனையும் முருகனையும், சரமாரியாக அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களைக்கொண்டு வெட்டிச்சாய்த்தனர். இந்த பயங்கர தாக்குதலில் இரு நண்பர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்கள். municipality staff and his friend were killed a…
Read Moreநார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி
Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER, Sogn Fjordane county in Norway ஆஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில், பேருந்தை கடத்த முயற்சி செய்த சம்பவத்தில், 3 பேர் கொல்லபட்டார்கள். நார்வே நாட்டின் தலைநகரமான, ஆஸ்லோவில் இருந்து, சுற்றுலா தளமான, வால்ட்ரஸ் என்னும் பகுதிக்கு, சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய இந்த பேருந்தில் பயணித்த, சூடான் நாட்டு நபர் ஒருவன், பேருந்தை கடத்தும் நோக்கத்தில், ஓட்டுனரை குத்தி கொன்றான். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில், 19 வயது இளம் பெண் மற்றும் சுவீடன் நாட்டு பிரஜை (50 வயது) ஒருவரும் கொல்லப்பட்டனர். வழியில் காவல்…
Read Moreசார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு ஆள்மாறாட்டதை தடுக்க புதிய திட்டம்
Photos taken in Register office in Chennai through Web camera to ovoid forgery : Chief minter jayalalitha order implemented சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு துறை ஆள்மாறாட்டத்தை தடுக்கும் நோக்கில் அங்கு புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் செய்யப்படும் பதிவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கவும் அதனால் பதிவு செய்பவர்கள் மனநிறைவு பெறவேண்டும் என்பதற்காகவும் பத்திரப்பதிவு துறை அலுவலக தினசரி நிகழ்வுகளை வீடியோ காமரா வழியாக கண்காணிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதற்காக, சுமார் 578 சார் பதிவாளர் அலுவகங்களிலும் 3 முகாம் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு நடக்கும் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப்-காமரா வழியாக புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் முறையாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கென “எல்காட்” நிறுவனம் இரண்டு கண்காணிப்பு…
Read Moreதீபாவளிக்கு மகளை அனுப்பாத மருமகனுக்கு அரிவாள் வெட்டு
Son in law attacked by Father in Law for not sending his daughter for celebrating Diwali festival in Thirunelveli district தீபாவளி திருநாளையொட்டி மகளை தன் வீட்டுக்கு அனுப்பாததால் அத்திரம் அடைந்த மாமனார் தனது மருமகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாம்பவர்வடகரையில் சன்னையன்பட்டி தெருவில் இருக்கும் தங்கசாமியின் மகன் சக்திவேல். இவர் அதே ஊரில் உள்ள தேரடி தெருவில் இருக்கும் இராமசாமி என்பவருடைய மகள் முத்துமாரியை திருமணம் செய்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி மகளையும், மருமகனையும் தன் வீட்டுக்கு அழைக்க இராமசாமி, சக்திவேல் இல்லத்திற்கு சென்றார். அங்கு சென்ற அவர், தம்பதிகளை தீபாவளிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவரது மாப்பிளையோ தான் வரமுடியாது என்றும் மனைவி முத்துமாரியையும் அனுப்பமுடியாது என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில்…
Read Moreகுழந்தைகளுக்கு கணினி புரோகிராம் போதனை செய்யும் ரோபோ
Play-i – The New Generation Robots for Children to learn computer Programming இந்த கணனி இணைய யுகத்தில், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் என்று எல்லாத்துறைகளையும் கணினி தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்று உலகத்தில் கணனி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளையும் பெரிய வளர்ச்சிக்கும் கொண்டு சென்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மாணவர்களின் மேற்படிப்புக்கு மட்டும் கணினி கல்வி உபயோகப்பட்டது. எனினும் தற்சமயம் செல் போன் தொலைபேசி, மற்றும் இதர இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே கணனிக் கல்வி அவசியம் தேவை படுகிறது. ஆகையால் சிறுவயதில் கம்ப்யுடரை பயன்படுத்த குழந்தைக்கு பெரியவர்கள் உதவி அவசியம் தேவைபடுகிறது. எந்த வயதுகளில் எந்த வகையான தொழில்நுட்ப முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எந்த வகையான நன்மைகளை தம் குழந்தைக்கு கொடுக்கும் என்பது…
Read Moreபயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் 27 வெடிகுண்டுகள் பறிமுதல்
NIA captured 27 Live Bombs in Jharkhand Lodge related to Patna Serial Powerful Bomb Blasts பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ.கவின் பொதுக்கூட்டம் நடைபெற இருந்த காந்தி மைதானத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் மீதமுள்ள 27 வெடிகுண்டுகளை தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர். பா ஜ க வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த காந்தி மைதானத்தில் பயங்கர குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புள்ள ஹைதர் அலி தங்கி இருந்த ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி ஹோட்டலில் தேசிய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நேற்று சோதனை…
Read More



