இந்திய செயற்கை கோள் "மங்கள்யான்" ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

India Mars mission : India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இந்தியாவின் இந்த முயற்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவானில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்பியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் நெற்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது. India Mars mission : India’s…

Read More