new amma restaurant : சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் 5 ரூபாயிலும், மதியம் 8 ரூபாயிலும் 2 வேலை வயிறார சாப்பிடுவதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அலுவலகம் செல்வோர்கூட அம்மா உணவகங்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். மே 30-ந்தேதி வரை 2 கோடியே 14 லட்சம் இட்லி விற்பனையாகி உள்ளது. பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி,…
Read MoreCategory: அரசியல் சிறகுகள்
தமிழ்த்தாய்க்கு சிலை, பிரபாகரன் படத்துக்கு தடை மனம் மாறிய முதல்வர், ஆவேசப்படும் சீமான், திருமாவளவன்
Tamil mother statue planned, prabhakaran pictures banned by tamilnadu government 2013வியாழன் 23 இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள். அந்த யுத்தத்தில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அஞ்சலி கூட்டம் நடத்துவது இந்த நாளில் தான். இந்தநாளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள் என அவரவர்களின் வலிமைக்கேற்ப அரசியல் கட்சிகளும், ஈழ ஆதரவு அமைப்புகளும் கடந்த 4 ஆண்டுகளாக நினைவேந்தல் கூட்டங்களை எழுச்சியாகவும் உணர்வு பூர்வமாகவும் தமிழகத்தில் நடத்தின. இந்த ஆண்டும் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் ஈழத்தமிழினத்திற்கான வீர வணக்கக் கூட்டத்தை 17-ந் தேதி நடத்தினார் வைகோ. இதில் பழ.…
Read Moreபாகிஸ்தானில் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த புதிய பிரதமர் நவாப் செரீப் திட்டம்
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற யூன் 2ம் திகதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என்று நவாஸ் செரீப் விரும்புகிறார். நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் ஜனாதிபதி ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார். தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற…
Read Moreசங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை
சங்கராபுரம், 2013.மே.17-சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் முனிசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளும் அடைக்கப்பட்டன. முனிசாமி சங்கராபுரம் பல்லவன் வங்கி சந்து பகுதியை சேர்ந்தவர். இவர் சங்கராபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் தற்சமயம் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வந்தார். மேலும் முனுசாமி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கச்சிராயப்பாளையம் பகுதியில் கேபிளும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனிசாமி சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே கட்சி அலுவலக கட்டிடம் கட்டி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் முனிசாமி கட்டிட பணியை பார்வையிட்டு கொண்டு இருந்தபோது காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து தாக்கினர். உடனே அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முனிசாமி ஓடினார், எனினும் அந்த கொலை கும்பல் முனிசாமியை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முனிசாமி தலை மற்றும்…
Read Moreஅசாமில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி மாநிலங்களவை தேர்தலில் மனு தாக்கல்
Manmohan Singh files Rajya Sabha nomination கவுகாத்தி 16 மே 2013: பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அசாமில் நேற்று மனு தாக்கல் செய்தார்.அசாம் மாநிலத்தில் மாநிலங்களவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய எம்.பி. பதவிக்காலம், வரும் ஜூன் 14ம் தேதியுடன் முடிகிறது. ஆகையால், பிரதமர் பொறுப்பு எற்ற இடம் உள்ளிட்ட காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவதற்கான மனுவை, அசாம் சட்டப்பேரவை செயலாளரிடம் நேற்று தாக்கல் செய்தார். அவர் நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் – கவுகாத்திக்கு வந்தார். மனு தாக்கலின் போது அவருடன் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புவனேஸ்வர் கலிதா, மாநில முதல்வர் தருண் கோகய், மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். அங்கு, பத்திரிகையாளர்களுக்கு புகைப்படம் எடுக்கவோ, செய்தி சேகரிக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து, சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதை சமாதானபடுத்தும்…
Read Moreசி.பி.ஐ-க்கு சுய அதிகாரம் தர அமைச்சரவை குழு ஆய்வு
Prime minister Manmohan singh appointed a committee for the independence of CBI and its functional autonomy உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு அரசியல் தலையீடு இல்லாத சுய அதிகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை குழு வை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் வி. நாராயண சாமி, பில் சிபல், மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுகிறார். முன்னதாக நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. Prime minister Manmohan singh appointed a committee for the…
Read Moreமோடி ஒரு சிறந்த நிர்வாகி: இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கருத்து.
Narayana Murthy praised Narendra Modi வதோதரா 14 மே 2013 : குஜராத் சென்றிருந்த இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி அம்மாநில முதல் அமைச்சர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒருசிறந்த நிர்வாகி என செய்தியாளர்களிடம் கூறினார்.. மேலும் அவர், முதல்வர் மோடி நம் நாட்டின் மிக சிறந்த நிர்வாகி எனவும், குஜராத் மாநிலத்தை வேகமான வளர்ச்சி யை நோக்கி கொண்டு செல்கிறார் என்றார். குஜராத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்த்த பின்னரே தாம் அவரது நிர்வாகத்திறமையினை தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். Narayana Murthy praised Narendra Modi Narayana murthy said that Gandhiji is his Role model. A gujarati is my role model and i am proud to get the award in Gujarat. Flats sale in Chennai Mogappair: Contact www.bestsquarefeet.com
Read Moreபேஸ்புக்கில் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலர் கைது
lawyer arrested fb comments against ex cm ஐதராபாத் : முன்னாள் ஆந்திர முதல்வரும் தற்போதைய தமிழக கவர்னருமான ரோசைய்யா மற்றும் எம்.எல்.ஏ., கிருஷ்ண மோகன் ஆகியோர் குறித்து பேஸ்புக்கில் அவதூறான கருத்தை பதிவு செய்தமைக்காக ஆந்திர வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு கும்பலுக்கும் ரோசைய்யாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் பேஸ்புக்கில் கருத்து பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனித உரிமை ஆர்வலர் மற்றும் மனித உரிமை அமைப்பின் மூத்த பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. A local court in Andhra Pradesh has remanded Lawyer for FB comments against ex-CM lawyer arrested fb comments against ex cm
Read Moreவன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும்:முதல்வர் எச்சரிக்கை
Jayalalithaa cautions ban PMK for violence வன்முறையில் இடுபாடும் கட்சியினரை கட்டுபடுத்தாவிட்டால் அந்த கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்ய அரசு தயங்காது என பா.ம.க வினருக்கு முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு – வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருவது குறித்து இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு: மரக்காணம் சம்பவம் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பா.ம.க அறிவித்த தொடர் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து போலீசார் ெரிவித்திருந்தும் சட்ட விரோதமாக கடந்த 30&ம் தேதி தடையை மீறி போராட்டத்தை நடத்த தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கூடியதால், ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க வினர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன தொழிலாளர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும்…
Read Moreதேமுதிக பேரணிக்குத் திருப்பூரில் தடை
dmdk tirupur meeting தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் உள்பட பல தொழில்கள் நலிவடைந்து வருவதாகவும், இந்த பாதிப்பினால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைவடைந்து வருவதாக கூறி, தே.மு.திக சார்பாக கண்டன பொதுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தே.மு.திக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரமாக திருப்பூர் இருப்பதால், பேரணி நடத்த தே.மு.திகவிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. dmdk tirupur meeting
Read More