22 of India’s 32 big cities face water crisis சமீபகாலமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான முக்கிய பெரும் நகரங்களில் அன்றாட குடிநீர் தண்ணீர் தேவை பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும்.ஏறக்குறைய இங்கு மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கின்ற தண்ணீர் அளவையும் கணக்கிட்டு பார்த்தால் 70 சதவீத பற்றாக்குறை இருந்து வருகிறது என்று தெரிய வருகிறது.. இந்தியாவில் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளில் தண்ணீரும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் தண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. அரசு அறிக்கையின்படி நாட்டின் முக்கியமான 32 நகரங்களில் 22 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன. கான்பூர், அசன்சோல், தன்பாத், மீரட்,…
Read Moreஇரும்பு ஏற்றுமதியில் முறைகேடு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ரயில்வேயில்
CAG unearths Rs 17,000 crore scam in railways :ரயில்வேயில், ஏற்றுமதிக்கான சரக்கு கட்டணம் வசூலித்ததில், பல்வேறு முறைகேடுகளை நடத்தி, 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி., ) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. மத்தியில் ஆளும், ஐ.மு., கூட்டணி அரசில், நாளுக்கு நாள் புது புது ஊழல் முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த தகவல்கள் வெளியாகி, பிரதமர் உட்பட மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.இவற்றுடன், ரயில்வேயில், அதிகாரம் மிக்க பதவியை பெற்றுத் தருவதாக கூறி, 90 லட்ச ரூபாய் , லஞ்சம் பெற்றவழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார்…
Read Moreஉத்திரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் கலவரத்தில் 12 பேர் பலி
UP: Situation tense in Muzaffarnagar as death toll climbs to 21, curfew imposed உ.பி. மாநில முஜாபர்நகர் வன்முறைப் பகுதிகளில் ராணுவம் நெற்று கொடி அணிவகுகுப்பு நடத்தியது. இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு 12 பேர் கொல்லப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் என்ற கிராமத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறக்கோரி ஒரு சமூகத்தினர் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்துக்கு பிறகு இரு சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். அப்போது புகைப்படக்காரர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இதே போல இந்த மோதலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் ராஜேஷ் வர்மா…
Read Moreஇளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என நினைத்து கைது
Bad week at Buckingham Palace: Prince Andrew mistaken for intruder இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 2–வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ (32). இவர் எலிசபெத்தின் 3–வது குழந்தை ஆவார். சம்பவத்தன்று காலை பக்கிங்காம் அரண்மனையின் தோட்டத்தில் ‘வாக்கிங்’ சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த லண்டன் மெட்ரோ பாலிட்டன் போலீசார் அவரை துப்பாக்கி முனையில் திடீரென கைது செய்தனர். இதனால் சுமார் அரை நிமிடம் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே, அவரும் சிறிது நேரம் தடுமாற்றம் அடைந்தார். இதற்கிடையே, துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரை சுட முயன்றபோது அரண்மனை காவலர்கள் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இவர் இளவரசர் ஆண்ட்ரூ என்று விளக்கினர். இதனால் துப்பாக்கி சூட்டில் இருந்து அவர் தப்பினார். அதை தொடர்ந்து…
Read Moreமதுரவாயல் அருகே காய்கறி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை
A Husband killsed his wife’s paramour near Chennai மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் பெயிண்டர். இவரது மனைவி புவனேஸ்வரி (27). இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தவர் சதீஷ் (27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடைக்கு வந்து சென்றபோது சதீஷ்– புவனேஷ்வரி இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதுபற்றி தெரிந்ததும் சக்திவேல், மனைவியையும், கள்ளக்காதலன் சதீசையும் கண்டித்தார். இதனால் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. பல நாட்கள் சக்திவேல் மனைவியுடன் கோபித்து கொண்டு வீட்டிற்கு வராமல் இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புவனேஷ்வரி, பக்கத்து…
Read Moreஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின் விமான தாக்குதல் 15 பேர் பலி
NATO strike, militant attack kills 15 in Afghanistan தாலிபாகளை குறிவைத்து நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டு இறுதிக்குள் நேட்டோ படையினர் வெளியேறவுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரிடம் விட்டுக்கொடுத்து வருகின்றனர். 90 சதவிகித ராணுவ நடவடிக்கைகளை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் பெரும்பாலான விமானத்தாக்குலை நேட்டோ படையினரே நடத்துவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் கிழக்கில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள குனாரில் தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை குறிவைத்து நேட்டோ படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் 10 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நேட்டோ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பொதுமக்கள் இறப்பு…
Read Moreடோக்கியோவில் நடக்க இருக்கிறது 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்
Tokyo wins bid to host 2020 Summer Olympics ஸ்விட்சர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆண்டு செயல்குழுக் கூட்டம் கடந்த வெள்ளியன்று துவங்கியது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தினை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் துருக்கியின் இஸ்தான்புல் நகரைத் தோற்கடித்து ஜப்பானின் டோக்கியோ நகரம் இந்த வாய்ப்பினைப் பெற்றது. வாக்கெடுப்புக்கான முதல் சுற்றில் கனடாவின் மாட்ரிட் நகரத்துடன் சரிசமமான வாக்குகளைப் பெற்ற இஸ்தான்புல், பின்னர் நடந்த விவாதத்தில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்குத் தகுதி பெற்றது. இதன்பின்னர் நடந்த தகுதிச் சுற்றில் இஸ்தான்புல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குவஸ் ரோக் அறிவித்தார். ரஷ்யாவின் செயின்ட்…
Read Moreவிஷம் வைத்து 41 யானைகள் கொலை ஜிம்பாப்வே நாட்டில்
Zimbabwe elephants poisoned by poachers in Hwange ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் புகழ்பெற்ற வாங் தேசியப்பூங்கா உள்ளது. கலஹாரி பாலைவனம் அருகே அமைந்துள்ள இப்பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மருத்துவ பயன்பாட்டிற்காக வேட்டையாளர்களால் விலங்குகளின் தந்தங்கள் மற்றும் கொம்புகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைடு விஷம் வைத்து கொல்லப்பட்டு அதன் தந்தங்களை கொள்ளையர்கள் வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்று பூங்காவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விசாரணையில், 5 வன விலங்கு வேட்டையாளர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். சயனைடு விஷத்தால் இறந்துபோன விலங்குகளின் உடலை தொடும் விலங்குகள் மற்றும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த…
Read More17 மாத குழந்தை 7வது மாடியிலிருந்து விழுந்த கவலைக்கிடம்
Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி பால்கனியிலிருந்து 17 மாத ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் குழந்தை இக்கட்டான இருந்தாலும், உயிர் பிழைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு சந்தேகப்படும்படியான காரணமெதுவும் தெரியவில்லை என்றும் ரொறொன்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தை நாற்காலியில் ஏறி பால்கனி கிராதியின் மேலாக விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடுமையான காயங்களுடன் சிறுவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளான். Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway A…
Read Moreராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற மகிழ்ச்சி: மன்மோகன் சிங்
Manmohan Singh is always ready to work under Rahul Gandhi leadership புதுடெல்லி: ராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மன்மோகன் சிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு சென்று நேற்று நாடு திரும்பினார். அவர் சிறப்பு விமானத்தில் அளித்த பேட்டி பின்வருமாறு :வரும் மக்களவை தேர்தலுக்கு பின், ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். இதற்கு நான் எப்போதுமே ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமையில் பனியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. அரசியலில் நிரந்தர பகைவர்களும் நண்பர்களும் இல்லை. ஒரு காலத்தில் மதிப்பு மிக்க உறுப்பினராக…
Read More



