ஒரு வருடமாக விக்கிக் கொண்டே இருக்கும் மனிதர்!

Hangover leaves Irishman with hiccups for 14 months 14 மாதங்களாக விடாத விக்கலால் அவஸ்தைப்பட்டு வருகிறார் டேனியல் என்ற நபர். அயர்லாந்தை சேர்ந்தவர் டேனியல் கிளவ்(வயது 37). இவர் கடந்த 2012ம் ஆண்டு மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார். அத்துடன் பீர் மற்றும் ஸ்பிரிட்டை ஆசை தீர குடித்து மகிழ்ந்துள்ளார். அப்போது திடீரென விக்கல் ஏற்பட்டது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேரம் ஆக ஆக 7 நொடிக்கு ஒருமுறை விக்கல் தொடர்ந்து வந்தது. இதனால் பீதி அடைந்தவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார். இருப்பினும் குணமாகவில்லை, தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருப்பதால் மூச்சுவிட முடியாமல், சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறாராம். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும், மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டும் குணமாகாமல் அவஸ்தைப்படுகிறாராம். இவருக்கு…

Read More

விண்வெளியில் இருந்து பேசிய முதல் ரோபோட்

Robo-astronaut Kirobo utters first words in space   விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட ரோபோட், தனது முதல் வார்த்தையை பதிவு செய்தது. ஜப்பானால் உருவாக்கப்பட்ட கிரோபோ என்ற ரோபோட், தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. அகன்ற கண்களுடன் பெரிய காதுகளையும் கொண்ட இந்த ரோபோட், விண்வெளியில் இருந்த படியே பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு காலை வணக்கம் தெரிவித்தது. இந்த ரோபோட்டின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஜப்பான் மொழியில் பேசத் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைவருக்கும் குட்மார்னிங், நான் தான் கிரோபோ, நான் தான் உலகின் முதல் விண்வெளி ரோபோட் வீரர் என்று தெரிவித்தது. இதற்கு முன்னதாக நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும்…

Read More

உலகில் மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு

Deep In The Pacific, Scientists Discover Biggest Volcano On Earth  உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பரப்பளவில் இங்கிலாந்து தீவுகளை அல்லது நியூமெக்சிகோ மாகாணத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் வருடங்களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக…

Read More

160 உடல்கள் 4 நாட்களில் உத்தர்காண்ட் மாநிலத்தில் கண்டெடுப்பு

Uttarakhand tragedy: Over 160 bodies found in four days   உத்தர்காண்ட் மாநிலத்தில் மேலும் 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களில் மட்டும் 160 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உத்தர்காண்ட் மாநிலத்தில் ஜூன் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளப் பெருக்கில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேரது நிலைமை என்னவென்று தெரியாமலேயே போனது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட கேதார்நாத் பள்ளத்தாக்கில் கொத்து கொத்தாக உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு 64 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டன. இந்த நிலையில் மேலும் கெளரிகுண்ட் மற்றும் ஹருர்சட்டி பகுதிகளில் இருந்து 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த உடல்களில் இருந்த ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு, டி.என்.ஏ.சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 166 உடல்கள்…

Read More

4 நாட்களில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் 32 சிசுக்கள் மரணம்

32 infants die at Kolkata hospital. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கொல்கத்தா அரசு மருத்துவமனையில், 32 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள பி.சி. ராய் மருத்துவமனை மாநிலத்திலேயே மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனை ஆகும். இங்கு கடந்த 4 நாட்களில் 32 சிசுக்கள் வரை மரணமடைந்துள்ளதான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் கவனக்குறைவு காரணமா அல்லது நவீன மருத்துவ வசதிகளின் குறைவு காரணமா என்பது பற்றி விசாரிக்க இரண்டு நபர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. ஆனால் குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனை மட்டுமே காரணம் அல்ல என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. மற்ற மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்படுகிற மிக மோசமான இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகளால் இந்த இறப்பு நிகழ்ந்துள்ளது என்று மருத்துவமனை…

Read More

இந்தியாவின் மிக சிறந்த பேஷன் டெக்னாலஜி பயிற்சி சென்னை மதுரவாயலில் தொடங்கியது…

Chennai Fashion Institute(1)

Best fashion technology course in chennai இந்தியாவின் மிக சிறந்த பேஷன் டெக்னாலஜி பயிற்சி  நிறுவனமான “என்.சி .எப்.டி ஹைட்ஸ்” தற்போது சென்னை மதுரவாயலில் அதன் கிளையை தொடங்கியுள்ளது. குறைந்த கட்டணத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி முறை மற்றும் புத்தகங்களுடன் சிறந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் இங்கே உங்களுக்கு வழங்கப்படுகிறது.ஒவ்வொருவருக்கும்  தனித்தனியாக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் தகுந்த ஆசிரியர்களால்  பயிற்றுவிக்கப்படுகிறது . உங்கள் வெற்றியே எங்கள் குறிக்கோள் ! Best fashion technology course in chennai India’s No1 Fashion Technology Training Institute “Chennai Fashion Institute” now starts its new branch in Chennai at Maduravoyal. They provide World Class Diploma and Certificate Courses in fashion designing with books at reasonable…

Read More

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை

Two Indian Americans shot dead in US, 1 held  அமெரிக்காவின் வடக்கு இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற 2 இந்தியர்கள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொலையான இருவரின் பெயர் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22) என்பதாகும். அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு இவர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கச் சென்றனர். அப்போது, முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களிர் ஒருவன் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் கொலையானவர்களின் உடல்களை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடிய போலீசார்…

Read More

பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட சிங்கள மந்திரவாதி பலி

Sri Lankan man dies in failed exorcism ritual இலங்கையில் வாழும் புத்த மதத்தினரில் பெரும்பாலானவர்கள் பேய், பிசாசு, பில்லி, சூனியம், சோதிடம் மற்றும் மாந்திரீகத்தில் அதிக நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்த வசந்தா பண்மாரா, பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர் தனது வீட்டில் பேய் புகுந்து விட்டதாக நினைத்து, அதனை விரட்ட வேண்டி மாஸி காஸ்ட்ரோ என்ற மந்திரவாதியை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த மந்திரவாதி, பூனை ஒன்றைக் கொன்று அதன் ரத்தத்தை வைத்து பூஜை செய்து விட்டு, பேயை வீட்டை விட்டு விரட்டி விட, திகிலான பூஜை ஒன்றை செய்யப் போவதாக சொல்லியிருக்கிறார். அதாவது தன்னை ஒரு குழியில் வைத்து, மேலே மண் போட்டு மூடி விடும்படியும், குழியினுள் இருந்து கொண்டே மந்திரம் ஓதி பேயை விரட்டி விட்டு,…

Read More

கேரள மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 13 பேர் பலி

13 killed in Kerala as speeding minibus overturns கேரள மாநிலத்தில் இன்று மினிபேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் சுமார் 40 பயணிகளுடன் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கூச்சலிட்டனர். இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் 12 பேர் இறந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 13 killed in Kerala as speeding minibus overturns The driver…

Read More

திரைக்கு வரும்முன்பே எதிர்க்கப்படும் விஸ்வரூபம்-2

muslim league opposes vishwaroopam 2 விஸ்வரூபம், கமல்ஹாசன் இயக்கி நடித்த திரை படம். இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சொல்லி அப்படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் தடை கோரின. அதையடுத்து தமிழக அரசு தலையிட்டு படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததோடு, சில காட்சிகளை கத்தரித்து வெளியிட அனுமதி கோரியது. அதேபோல், இப்போது கமல் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் -2 படத்திலும் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், கமல் தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லீம்களை காயப்படுத்தி வருகிறார் என்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், டாம் 999, மெட்ராஸ் கபே போன்ற படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன என்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு, விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாமல், சமூக ஒற்றுமையை…

Read More