பெங்களூர்:அக்டோபர் 27, 2018 ‘விஸ்மயா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் ‘மீடு’ ட்விட்டர் மூலமாக தெரிவித்தார். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை . பிறகு ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன். அதனால் ஸ்ருதி ஹரிஹரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு பதிவு…
Read MoreMonth: October 2018
வழக்கால் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நகை கடையில் கொள்ளை
கான்பூர் :அக்டோபர் 25, 2018 உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் தொழில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன் 2013 ம் ஆண்டு மே 30 ம் தேதியன்று மூடப்பட்டது .இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது.அந்த வழக்கை நீதிபதி சமரசம் செய்து தீர்ப்பு வழங்கினார்.இதனால் கடையை மீண்டும் திறக்க தீர்மானக்கப்பட்டது. இந்நிலையில் பூட்டப்பட்ட கடையை திறந்தவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நகைக்கடையில் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கடையில் இருந்த 10,000 காரட் வைரங்கள், 500 கிலோ வெள்ளி, 100 கிலோ தங்கம், 5000 காரட் மதிப்புடைய நகைகள், தொழில் தொடர்பான சில ஆவணங்களையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது . இதை பற்றி போலீசில்புகார் கொடுக்கப்பட்டது . இதை வழக்குப்பதிவு செய்த போலீஸ் விசாரித்து வருகின்றனர்.சம்மந்தப்பட்ட…
Read Moreமாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.
திருவண்ணாமலை:அக்டோபர் 22, 2018 ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கணக்கு ஆசிரியர் சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.பூஜை விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது .இதன் காரணத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு பள்ளியை முற்றுகையிட்டனர். வகுப்பறையில் ஆசிரியர் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் அந்த ஆசிரியரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார் . அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Read Moreகுரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி
பாக்பத்:அக்டோபர் 20, 2018 உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்(72).வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தார். அங்கு குரங்குகள் வசித்து வந்தது .இவரை பார்த்த அந்த குரங்குகள் செங்கற்களை வைத்து தாக்கியது .இதில் படுகாயமடைந்த தரம்பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு செய்ய கூறினார்கள் . ஆனால் குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை( எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய இயலாது என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் குடும்பத்தினர் காவல் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர்.
Read More500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்
கர்னூல்:அக்டோபர் 19, 2018 ராஜ்குமார்(33) என்பவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் .அவர் வழுக்கை ஆனால் விக் வைத்து பேஸ்புக்கில் பெண்களை ஏமாற்ற ஆரம்பித்தார் .தன்னை இளமையாக கட்டிக்கொண்டார் . அவர் பெண்களை கவரும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக்கில் போடுவது வழக்கம் .ஒவ்வொரு பெண்ணாக ராஜ்குமாரிடம் ஏமாற தொடங்கினார்கள்.பணக்கார வீட்டு பெண்களிலிருந்து உயரதிகாரிகளின் வீட்டு பெண்கள் வரை விட்டுவைக்கவில்லை. ஒரு துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை.அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுப்பது வழக்கம் . பிறகு அவர்களிடம் இருந்து பணம் அல்லது நகை வாங்க முயற்சிசெய்வார் , கிடைக்கவில்லை என்றால் அவர்களிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையதளங்களில் பரப்பி விடுவாராம். ராஜ்குமார் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பெண்ணால் பணத்தை தர முடியவில்லை ,அதனால் சம்பந்தப்பட்ட போட்டோவை இணையதளத்தில்…
Read Moreசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் தற்கொலை!
பெங்களூர்:அக்டோபர் 17, 2018 கபடி பயிற்சியாளராக இருந்த ருத்ரப்பா ஹோசாமனி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டது .பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் தான் இந்த ருத்ரப்பா ஹோசாமனி (59). உடை மாற்றும் அறைக்கு சென்று 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ருத்ரப்பாவை கடுமையாக தாக்கினர். பிறகு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.இதனால் அவமானம் தாளாமல் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Read Moreராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர்
கவுகாத்தி :அக்டோபர் 15, 2018 அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தாங்காரி என்ற இடத்தில் 1994ம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களை ராணுவத்தினர் சிலர் பிடித்து சென்று, பிறகு அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்பட்டது. அந்த இளைஞர்கள் உல்பா பயங்கரவாதிகள் என நினைத்து பிடித்துச் சென்றதாக ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக இந்த போலி என்கவுன்டரை நடத்தியதாக அஸ்ஸாம் கனபரிஷத் கட்சி போராடி வந்தது.இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராணுவத்தை சேர்த்த மேஜர் ஜெனரல் ஏ.கே. லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ மற்றும்ஆர் எஸ் சிபிரன், கேப்டன் பொறுப்பில் இருந்த திலீப் சிங், ஜெகதியோ சிங் , நாயக் பொறுப்பில் இருந்த அல்பிந்தர் சிங் மற்றும்…
Read More2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது
அலிகார்:அக்டோபர் 13, 2018 உ.பி.யில் உள்ள பல்கலைக்கழத்தில் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது .நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் காஷமீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி மனான் பஷீர் வானி என்பவன் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.அந்த இறந்த பயங்கரவாதியை காஷ்மீர் விடுதலைக்காக போராடிய தியாகி என கூறி இரங்கல் கூட்டம் நடத்திய 2 காஷ்மீர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது .அலிகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் அலிகார் பல்கலைக்கழத்தில் விசாரணை நடத்தி இரங்கல் கூட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த வாஷிம் அயூப் மாலிக், அப்துல் மிர் என்ற 2 மாணவர்கள் மீது தேசதுரோகம் (IPC 124 /A) வழக்குப்பதிவு…
Read Moreஅதிர்ச்சித் தகவல்:பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது
புதுடில்லி :அக்டோபர் 13, 2018 பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின் விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Read Moreசிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண் !அதிர்ச்சியடைந்த தாய்…பாய்ந்தது போக்ஸோ
நொய்டா: அக்டோபர் 11, 2018 நொய்டா பக்கத்தில் சப்ரவுலா என்கிற கிராமத்தில் ஒரு பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி அந்த பெண் பாலியல் தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார். அந்த சிறுவன் இதனால் அதிர்ச்சியும் பயமும் பலமுறை அடைந்திருக்கிறான். ஒரு நாள் அந்த பெண் தன்னுடன் உறவுக்கு அந்த சிறுவனை வற்புறுத்தி இருக்கிறார் . ஆனால் அந்த சிறுவன் மறுத்ததால் ஆத்தரமடைந்த பெண் அடுப்பறைக்குள் சென்று ஒரு இரும்பு கம்பியை பழுக்க எடுத்து வந்து ஆணுறுப்பில் சூடு வைத்து விட்டார்.இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது கொண்டே தன் அம்மாவிடம் அனைத்தையும் சொன்னான். பாலியல் தொல்லை பற்றி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டு பெண் தன் மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததால் அவர்…
Read More