தேவதானப்பட்டி: அக்டோபர் 09, 2018 கடந்த செப். 18ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள காட் ரோடு டம்டம் பாறை பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. தேவதானப்பட்டி போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிர்தோஷ்க்கு (27) முகமது சமீர்(32) உடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.இவர் அரபு நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். முகமது சமீர் வருடத்துக்கு ஒரு முறை வருவது வழக்கம் .இதனால் பிர்தோஷூக்கும் கார் டிரைவர் முகமது யாசிக்கிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பிர்தோஷ் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்த்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் .தனது கணவருடன் ஆலோசித்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல பிர்தோஷ் திட்டமிட்டார். தங்கள் செல்லும் கொடைக்கானல் பயணத்துக்கு கார் டிரைவராக கள்ளக்காதலன்…
Read MoreMonth: October 2018
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சம்மந்தப்பட்ட 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு
சென்னை: அக்டோபர் 09, 2018 ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இப்போது இதுகுறித்த விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த…
Read Moreதாயே குழந்தையை கொன்றுவிட்டு கூறிய அதிர்ச்சி காரணம்
சென்னை: அக்டோபர் 08, 2018 புழுக்கமா இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம் .பிறகு விடிய காலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன். காலை பார்த்தபோது என் குழந்தையை காணவில்லை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுத்துருங்க சார் என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் . சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா – உமா இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு பிறந்த இந்த ஆண் குழந்தை தான் சார்விக்.கதவை திறந்து வைத்து தூங்கிய போது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீஸ் விசாரணையில் இறங்கினார்கள். பெண் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுஇரவில் 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி…
Read Moreயாருக்கும் புரியாத வகையில் கிறுக்கிய டாக்டர்களுக்கு ரூ.5000 அபராதம்
லக்னோ :அக்டோபர் 05, 2018 உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில் மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த மூன்று டாக்டர்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் . அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால் கையெழுத்து சரியாக இல்லை என டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை …
Read Moreநீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கை
சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று…
Read Moreவிபச்சார புரோக்கர் டெய்லர் ரவி சென்னையில் அதிரடி கைது
சென்னை: அக்டோபர் 04, 2018 8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரம் செய்து வந்த 58 வயது புரோக்கர் டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அடுக்குமரி குடியிருப்பு ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்துள்ளார் . ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்த இவர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருபவர். இது சமந்தமாக இவர் மீது 8 வழக்குகள் உள்ளது. சில நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை பிடிக்க போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். இதற்கு காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான் என்று கூறப்படுகிறது . இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை வைத்து தொழில்…
Read More