யாருக்கும் புரியாத வகையில் கிறுக்கிய டாக்டர்களுக்கு ரூ.5000 அபராதம்

லக்னோ :அக்டோபர் 05, 2018 உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில், மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த, மூன்று டாக்டர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் . ‘அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால், கையெழுத்து சரியாக இல்லை ‘ என, டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்த விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை யாருமே படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி இருந்தால் வேறு மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும்? மருந்து எப்படி வாங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் .டாக்டர்கள் மூவருக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

லக்னோ :அக்டோபர் 05, 2018

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில் மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த மூன்று டாக்டர்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் .

அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால் கையெழுத்து சரியாக இல்லை என டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை  யாருமே படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி இருந்தால்  வேறு மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும்? மருந்து எப்படி வாங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் .டாக்டர்கள் மூவருக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

Related posts