2032-ல் பூமியில் விண்கல் மோதி அழியும் ஆபத்து: விஞ்ஞானிகள் கருத்து

Huge Asteroid Will hit Earth in 2032 Claim Astronomers வருகிற 2032 ஆம் ஆண்டு பூமியை ராட்ஷச விண்கல் ஒன்று தாக்கும் என்றும், இதனால் உலகம் அழிய கூடிய ஆபத்து இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். விண்வெளியில் ஆங்கங்கே மிதக்கும் சில விண்கற்கள் பூமியை நோக்கி பயணம் செய்கின்றன. இது போன்ற பெரும்பாலான விண்கற்கள் பூமியை நெருங்கும் முன்பே வெடித்துவிடும். மேலும் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்த விண்கல்லால் பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2032-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஒரு ராட்ஷச விண்கல் பூமியை தாக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும், சுமார் 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் உலகம் முற்றிலும் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த…

Read More

நியூயார்க்கில் கடைக்கு வந்த 17 வயது இளம்பெண் கைப்பையில் சிசுவின் உடல்

Girls stopped for shoplifting in NY had human fetus in bag ‘விக்டோரியாஸ் சீக்ரெட்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரபல மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு உள்ளாடைக் கடை. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இது என்பதால் ஜோப்படி திருடர்களை கண்காணிக்க தனி காவலர்கள் பணியில் இருந்து வந்தனர். சுமார் 17 வயதுடைய இரண்டு இளம் மங்கையர்கள் நேற்று மதியம் இந்தக் கடையில் துணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் அருகில் செல்லும் போது தூர்நாற்றம் வருவதை கண்ட காவலர்கள், சந்தேகமடைந்து அவர்களது கைப்பைகளை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு பெண்ணினுடைய பையில் ஒரு பச்சிளம் சிசு இறந்து அமுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ந்துபோன அவர்கள் காவல்துறையினரை அழைத்தார்கள். சிசுவை அந்த பெண்களில் ஒருவர், ஒரு நாளைக்கு முன் பிரசவித்ததாகவும், அதை என்ன செய்வது என…

Read More

சீனாவில் ஐ-போன் வாங்க ஆன்லைன் மூலம் குழந்தை விற்பனை

Chinese couple ‘sold their baby daughter to buy an iPhone’ நவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஐ-போன் மற்றும் ஐ-பேடுகளை வாங்க இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் சீன நாட்டில்  இருக்கும் இளைஞர்கள் தங்களது கிட்னியைக் கூட விற்று இத சாதனங்களை வாங்குவதாக பரவலாக பேசப்படுகிறது. இதையெல்லாம் விஞ்சும் வகையினில், சீனாவில் இருக்கும் இளம் தம்பதியர், ஐ-போன் வாங்க தங்களது பெண் குழந்தையை விற்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அந்த தமபதியினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதியினர் தகளுடைய மூன்று வயதே ஆன குழந்தையை இன்டர்நெட் விளம்பரம் செய்து ஆன்லைன் மூலமாக விற்றதாகவும், ஐ-போன், விலை உயர்ந்த காலணிகள் மற்றும் பிற நவீன பொருட்கள் வாங்க அந்த பணத்தை உபயோகப்படுத்தியதாகவும், சீன உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.…

Read More

ரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியிலிருந்து விண்கல் எடுக்கப்பட்டுள்ளது

Huge Half-Ton Chunk of Russian Meteorite Lifted From Lakebed விண்ணிலிருந்து விழுந்த மிகப்பெரிய விண்கல்லின் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ள ஒரு ஏரியில் இருந்து கண்டெடுத்து மீட்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் விண்ணிலிருந்து விழுந்த 11,000 டன் எடை உள்ள பெரிய விண்கல் ஒன்று செல்யாபின்ஸ்க் எனும் நகரத்தின் மேல் 30-வது கிலோ மீட்டர் தூரத்தில் சிதறடிக்கபட்டது. இந்த விண்கல் வ்ழுந்ததால் அங்குள்ள சுமார் 1600 பேர் பாதிக்கப்பட்டனர். சிதறி விழுந்த விண்கல்லின் துண்டுகள் செல்யாபின்ஸ்க் நகர் மற்றும் அங்கு அருகில் இருக்கும் செபர்குல் ஏரியிலும் விழுந்தது. கடந்த ஏழு மாதங்களாக, ஆங்காங்கே சிதறிக்கிடந்த விண்கல் துண்டுகளை தேடும் பணி நடந்து வருகின்றன. நீர் மூழ்கி வீரர் உதவியுடன் நவீன கருவிகளை கொண்டு நடைபெற்ற தேடுதல் வேட்டையில்,  ஒரு விண்கல் துண்டு செபர்குல்…

Read More

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 1000 வீடுகள் எரிந்து நாசம் ஒருவர் சாவு

The Worst Australian Forest fire : Major Bushfires hit Australia’S Most Populous State ஆஸ்திரேலியாவில் பயங்கரமான காட்டு தீ ஒன்று உருவாகி மிக வேகமாக பரவி சுமார் 1000 வீடுகளுக்கு எரித்து சாம்பலாக்கி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள காட்டு பகுதியில் சுமார் 15 இடங்களில் பயங்கரமான கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ பற்றி பரவியுள்ளது. வீசும் காற்றினுடைய வேகம் மிக அதிகமாக உள்ளதால் தீ மளமளவென வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிகின்றது. இதனால் காட்டுப்பகுதி அருகில் மற்றும் அதை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன் டெய்ன்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான புகைமூட்டமாக உள்ளது.   2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், இந்த காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை…

Read More

முதல் முறையாக அமெரிக்க துணை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்

Us Senate Confirms Nisha Desai as Assistant Secretary of State இந்திய வம்சாவளியை சேர்ந்த திருமதி.நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்மணியை, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவினுடைய துணை மந்திரி பதவிக்கு, கடந்த ஜூலை மாதத்தில் அதிபர் ஒபாமா பரிந்துரைத்தார். பின்னர் செனட் சபையின் வெளியுறவு கமிட்டியில் இதுதொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு நிஷாவின் திறமையைப் பாராட்டி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இதனையடுத்து திருமதி.நிஷாவை தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான துணை மந்திரியாக நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் கொடுத்தது. அவர் முறைப்படி விரைவில் பதவியேற்க உள்ளார். தற்சமயம் ராபர்ட் பிளேக் இந்த பதவியை வகித்து வருகிறார். முதல் முறையாக இந்தப் பதவிக்கு, இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவைப் பூர்வீகமாகக்…

Read More

லாவொஸ் நாட்டு விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி 49 பயணிகள் பலி

Bodies Recovered in Mekong After Laos Plane Crash லாவொஸ் நாட்டு விமானம் ஒன்று மோசமான வானிலை நிலவரத்தால் ஆறு ஒன்றில் விழுந்து, 11 நாட்டு பயணிகள் 49 பேர் பரிதாபமாகப் செத்தனர். லாவொஸ் தென்கிழக்கு ஆசியவில் உள்ள ஒரு நாடு. அங்கு உள்ள லாவோ விமான நிறுவன விமானம் ஒன்று நாட்டினுடைய தெற்கு பகுதியில் இருக்கும் நகரம் ஒன்றிற்கு தலைநகர் வியன்டியானேவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. லாவோசில் இருக்கும் மேகாங் எனும் ஆற்றின் கீழ் பறந்து சென்ற போது, விமானத்தில் உண்டான இயந்திர பழுதினால், திடீரென ஆற்றின் நடுவே விழுந்து நொறுங்கி மூழ்கியது. தகவல் அறிந்த உடன் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியை ஆரம்பித்து பலியான உடல்கள் மற்றும் பொருட்களை மீட்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read More

உலகத்தில் 3 கோடி மக்கள் கொத்தடிமைகள்: அதிர்ச்சி செய்தி

30 million people are slaves worldwide, half in India: Survey   உலகத்தில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அதில் பெரும்பகுதியானோர் பேர் இந்தியாவில் தான் வாழ்கிறார்கள் என கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்திருக்கிறது. வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக இருக்கும் மக்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 29.8 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் கொத்தடிமைகளாக உள்ளது தெரிய வந்திருக்கிறது. இப்போது நாடுகள் வாரியாக கொத்தடிமைத்தனம் அதிகம் எங்கு உள்ளது என்பதை காண்போம். உலக அளவில் கொத்தடிமைகளாக இருப்போர்: 29.8 மில்லியன் பேர் இந்தியா : 14 மில்லியன் கொத்தடிமைகள். சீனா: 3 மில்லியன் கொத்தடிமைகள். மேலும் உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, நைஜீரியா, ரஷ்யா, பாகிஸ்தான், மியான்மர், எதியோபியா, காங்கோ, தாய்லாந்து, மற்றும்…

Read More

அக்டோபர் மாதம் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்பு நாள்

Today is International Day for the Eradication of Poverty வேகமாக வளரும் வறட்சி, நிலையில்லாத அரசியல், உணவு பொருட்களுடைய விலை எற்றம், மற்றும் பொருளாதார மந்தம் ஆகியவற்றினால் பசி பட்டினியினால் வாடுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிகொண்டே போகிறது. உணவுப் பொருட்களுடைய விலை ஏற்றம் காரணமாக, உலக அளவிலும், பட்டினி கொடுமையால் அவதிபடுவோர்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டு 80 கோடி பேராக இருந்தது. இந்த எண்ணிக்கை 2005-ம் ஆண்டு 85 கோடியாக ஆனது. அது தற்சமயம் 100 கோடி எண்ணிக்கையாக ஆகியிருக்கிறது. பசி பட்டினியால் வாடுபவர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் 1,800 கலோரிகளை விட குறைவான உணவு உட்கொள்கிறார்கள் என்று பொருள். இந்த நிலையில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் வறுமையினால் ஒரு நபர் பாதிப்படைந்தால் அந்த நபரின் மனித உரிமை அங்கு…

Read More

சிங்கப்பூர் மாடல் அழகி பாகிஸ்தானில் கொலை.. ஓடையில் சடலம் மீட்பு

Missing Singapore model found dead in Pakistan சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மாடல் அழகி ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார். ஓடையில் வீசப்பட்ட அவரது உடலை காவல் துறையினர்  கண்டுபிடித்துள்ளனர். ஃபெஹ்மினா சவுத்ரி, பாகிஸ்தான் மாடல் அழகி. அவருக்கு 27 வயது. சிங்கப்பூரில் நடந்த அழகி போட்டியில் அழகு ராணியாக தேர்வு பெற்ற  ஃபெஹ்மினா சவுத்ரி, கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் தலைநகரான   இஸ்லாமாபாத் நகரில் தனது தாயாரின் பெயரில் ஒரு சொத்து வாங்க  பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றார். ஃபெஹ்மினா சவுத்ரியின் தாய் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த போதிலும், பாகிஸ்தான் பயணம் அனைத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இந்த வகையில், தான் இஸ்லாமாபாத் வந்த செய்தியை தனது தாயாருக்கு கைபேசியில் அழைத்து கூறியிருக்கிறார் ஃபெஹ்மினா சவுத்ரி.…

Read More