பிலிப்பைன்சில் பயங்கர நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 பதிவு: 95 பேர் பலி

Deadly earth quake hits Philippine in Bohol and Cebu மணிலா:- பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் சுமார் 95 பேர் பலியானார்கள். அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின.  பிலிப்பைன்சில் சுற்றுலா மையமான சிபு மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. அதனால் பீதியும் பதட்டமும் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச்சென்று தஞ்சம் அடைந்தனர். இந்நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடுமையான சேதம் அடைந்துள்ளது. வீடுகள் மற்றும் ஏனைய  கட்டிடங்கள் யாவும் அதிர்ந்து சரிந்து  விழுந்ததில் 12 பேர் பலியானார்கள். இந்த நில அதிர்வினால் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் முன்னாள் சிட்டிஹால் உள்பட பல்வேறு புராதன சின்னங்கள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்தது. சிபு அருகே…

Read More

ஆஸ்திரேலியாவில் பி.எச்.டி படிக்கும் இந்திய மாணவி திடிரென மாயம்

Indian student goes missing in Australia ஆஸ்திரேலிய நாட்டில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயிலும் 30 வயது இந்திய மாணவி ஒருவர் திடீரென காணமல் போனது அங்கு பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறது. இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட 30 வயதுடைய மாணவி நடாஷா நரங், ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது கணவர் திரு. சந்தீப்புடன் டாஸ்மானியா மாநிலத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி முதல் அவர் காணாமல் போய்விட்டார் , ஆதலால் அந்நாட்டு காவல் துறையினரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், அவரது உடமைகள் யாவும் டாஸ்மானியா மாநிலத்தில் இருக்கும் ஓர் ஆற்றங்கரை ஓரமாக கிடந்தததை கண்டுபிடித்தார்கள். எனினும்,…

Read More

லண்டனில் இறந்த குழந்தையை வயிற்றில் 2 நாட்கள் சுமந்த சென்னை பெண்

Indian woman in UK forced to carry dead fetus in womb for two days சென்னையை பூர்விகமாக கொண்ட கார்த்திகேயன் குமரேசன் எனும் பொறியியல் வல்லுநர் வேலை நிமித்தமாக 6 ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி நிரஞ்சனாவை அழைத்து கொண்டு இங்கிலாந்தில் குடியேறினார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 33 வயதான திருமதி.நிரஞ்சனா 2வது முறையாக கரு தரித்தபோது, அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவ நாள் என குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட அந்த தேதியைத் தாண்டி 3 நாட்கள் சென்ற பிறகும் அவருக்கு பிரசவ வலி வராமல் அதற்கு உண்டான அறிகுறி எதும் தோன்றாமல் இருந்தது. மேலும், வயிற்றில் உள்ள குழந்தையினது அசைவும் தென்படவில்லை. அதலால் சந்தேகம் கொண்ட அந்தத் தம்பதி உடனே வடக்கு லண்டனில் இருக்கும் பார்னெட்…

Read More

நைரோபியில் மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டி

A UNIQUE BEAUTY PAGEANT CALLED ‘MISS FABULOUS’ கென்யாவின் தலைநகர் நைரோபியில் வித்தியாசமான அழகிப் போட்டி ஒன்று நடந்துள்ளது. இவ்அழகிப் போட்டியில் பங்கேற்ற பெண்களின் உடல் அழகை கணக்கில் வைத்தோ ஏனைய வனப்பை வைத்தோ பட்டம் கொடுக்க படவில்லை. இதற்கு மாறாக பெண் மாற்றுத் திறனாளிகள் தான் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கினார்கள். உலகில் எல்லா இடங்களிலும் தற்பொழுது தடுக்கி விழுந்தால் பெரும்பாலான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவங்கள்   அழகிப் போட்டியை தான் விரும்பி நடத்துகிறார்கள். இதில் அழகிய விதம் விதமான அரைகுறை உடை அணிந்து பெண்கள், உலகதில் எல்லா இடங்களிலும் நடந்தபடிதான் இருக்கிறது. ஆனால் இந்த அழகி  போட்டி வழக்கமான போட்டி போல் இன்றி, வித்தியாசமான ஒரு இனிய அழகிப் போட்டியை கென்யா தலைநகர் நைரோபியில் நடத்தி இருக்கிறார்கள். இது பெண்…

Read More

இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்பு

The International journalist conference held at Srilanka Capital Colombo கொழும்பு: இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. வேலு பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் பிடித்து வைத்து படுகொலை செய்ததாக பிரபல இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கு: இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஈரான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், மலேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், பூடான், நேபால், மால தீவு, ஆகிய 12 நாடுகளை சார்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபெற்றனர். அப்பொழுது உலக அளவில் புகழ்பெற்ற தி எக்கனோமிஸ்ட் என்ற ஆங்கில  இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரை நிகழ்த்திய போது, ‘2009…

Read More

உலகம் முழுவதும் ஆண்டிற்கு 55 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பலி

Rabies kills 24,000 a year in Africa because vaccine costly: experts ஆப்பிரிக்காவில் நாய்க்கடிக்கு போடப்படும் தடுப்பூசியை வாங்க வசதியில்லாத மக்கள் அதிக அளவில் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவில் நாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசியை வாங்க வசதியற்ற மக்கள் கூடுதலான அளவில் பலியாவது தெரியவந்திருக்கிறது. செனகல் நாட்டு உள்ள தலைநகரான டாகரில் வெறிநாய் கடிக்கு உண்டான மருந்து, அதனை முன்கூட்டியே தடுக்கும் வழி முறை பற்றி நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55 ஆயிரம் மக்கள் இறப்பது இறக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் நாய் கடியால் பலியாகுபவர்களின் பாதி பேர் ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவின் ஆண்டு ஒன்றுக்கு சுமார்…

Read More

துபாயில் 11வது மாடியிலிருந்து தாயும் குழந்தையும் விழுந்து பலி

Indian Mother and Child Plunge to Death From High-Rise Building in Dubai Jumeirah Village துபாயில் குடியிருப்பு கட்டிடத்தின் 11 வது மாடி பால்கனியின் நின்றுக்கொண்டிருந்த தாயும் குழந்தையும் தவறி விழுந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  துபாயின் ஜுமைரா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் 11 வது மாடியில் ஒரு இந்தியக் குடும்பம் வசித்து வந்தது. கடந்த செவ்வாயன்று 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அவரது குழந்தையுடன் பால்கனியின் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது சுமார் 11.30 மணி அளவில், அவர்கள் இருவரும் கால் தவறி 11 வதி மாடியில் இருந்து விழுந்ததாக் தெரிகிறது. இச்சம்பவம் நடந்தப்போது, அவரது கணவரும் வீட்டில் இருந்துள்ளார்.இந்தத் தம்பதியர் அந்த குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளனர். இறந்த பெண் கடிதம் எதையும் விட்டுச்…

Read More

அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபை தீர்மானம்

International Day of the Girl Child இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண்…

Read More

ஏழையாக இருந்தால் கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம்: புதிய ஆய்வு

human can live for more than 90 years, if they are poor where it is believed that only rich people can live long healthy life. ஏழையாக இருந்தால் போதுமானது, கண்டிப்பாக 90 வயது வரை ஆரோக்கியமாக வாழமுடியும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 90 வயது வரை வாழ ஏழையாக இருந்தால் போதும்: புதிய ஆய்வு 90 வயது வரை வாழ பணம் மற்றும் வசதி இருந்தால் போதும் என பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் பணக்கார நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாழ் நாள் நீளும் என நம்பாப்பட்டு வருகிறது.  இந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதமாக புதிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்தின் லேடன் என்ற பகுதியில் முதுமை மற்றும் உயிர்…

Read More

2020ம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும்

சாக்லேட் பிரியர்களுக்கு தலையில் இடியை இறக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால், உலகில் சாக்லேட்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சாக்லேட் துறை நிபுணர்களின் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது. அதில் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதியோடு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். சாக்லேட் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருளான கொக்கோவின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது. கொக்கோ விளைச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொக்கோ பயன்பாடு குறைவாகத் தான் இருக்கும் என்றும், ஆசியாவில் தான் தேவை பல மடங்கு அதிகரிக்கும்…

Read More