கள்ள காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்…

Aam Aadmi Party member Chandra Mohan Sharma drama of ‘burnt to death’ in his own car at Greater Noida 3 months ago ended up after been caught alive in Bangalore.. பெங்களூர்: கள்ளக் காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடி தலைமறைவாக இருந்து குடித்தனம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி முக்கிய பிரமுகர் திரு.சந்திர மோகன் ஷர்மாவை பெங்களூருவில் காவல் துறையினர் நேற்று கைது செய்தார்கள். திரு.சந்திர மோகன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகராவார். திரு.சந்திர மோகன் ஷர்மா,  தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக அந்த கட்சியில் பொறுப்பில் உள்ளவர். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன டெல்லி அருகில் இருக்கும் ரேட்டர் நொய்டாவில் இவருடைய காரில் எரிந்து…

Read More

லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய் அறிகுறி…

Ebola symptoms for 6 passengers in india transiting through Delhi to Mumbai. லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய்… புதுடெல்லி :– மேற்கு ஆப்பிரிக்க கண்ட பகுதி யில் இருக்கும் கினியா, நைஜீரியா, லைபீரியா, சியார்ராலோன், ஆகிய நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இதுவரை அங்கு அந்த நோய்க்கு 1500க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ‘எபோலா’ நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இந்நோயை பரவவிடாமல் தடுத்திட அனைத்து சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் ‘எபோலா’ நோய் பரவாமல் தடுத்திட தீவிரமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்க்கென டெல்லி மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்களில் சிறப்பு குடியுரிமை நுழைவு கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு…

Read More

நடுரோட்டில் தந்தைக்காக ஐந்து இளைஞர்களை எதிர்த்து நின்று போராடிய இளம் பெண்

a girl at meerut single handedly beat two eve teasing youths நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பல கோணங்களில் பேச்சுக்கள் நடந்து வரும் வேளையில் 13 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையை காப்பாற்ற 5 இளைஞர்களுடன் எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கும் உ .பி., மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகளுடன் தந்தை பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது பைக் ஒரு கார் மீது உரசியது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்து பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர்.…

Read More

புனேயில் நிலச்சரிவில் 75 பேர் பலி 100க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

Pune landslide toll climbs to 75, 100 more people feared buried புனேவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுள் 75 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 44 வீடுகள் புதையுண்டன. இந்த துயர சம்பவத்தில் 200 பேர் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. இந்நிலைரயில் 75 பேரின் உடல்கள் மீம்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் புனே மாவட்டம் மாலின் கிராம மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையின் ஒரு பகுதி சரிந்து…

Read More

8 நிமிடத்தில் 14 கி.மீ., தூரத்தைக் கடந்த இதயம்

Heart passed 14 Km distance within 8 minutes வங்கி பெண் ஊழியரின் மூளைச்சாவு நிலையை அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளுல்ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது. சென்னை மணப்பாக்கத்தில் இருந்து, அவரது இதயத்தை, 8 நிமிடங்களில்,14 கி.மீ., தூரத்தைக்கடந்து, முகப்பேருக்குகொண்டுச்செல்லப்பட்டது. மூளைச்சாவு நிலை: எப்சிபா, வயது 22, இவர் சென்னை பாடியைச் சேர்ந்த,தனியார் வங்கி ஊழியர். இவர், உதயம் தியேட்டர் அருகே, கடந்தஜூலை, 27ம் தேதி மாலை, விபத்தில் சிக்கி, பலத்த காயம் அடைந்து, சென்னை, ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையும்பலனின்றி, மூளைச்சாவு நிலையை அடைந்தார்.இதையடுத்து, அவரின்குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை, தானம் அளித்தனர். இதையடுத்து, அறுவைச் சிகிச்சை ‘மியாட்’ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, நடந்தது. இதில், இதயம், கண்கள்,சிறுநீரகங்கள், மற்றும் கல்லீரல் என, ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது.…

Read More

பிஹாரில் நெடுஞ்சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த வர்கல் மீது லாரி ஏறியதில் 12 பேர் பலி

Tanker collides with bus carrying pilgrims in Bihar, 12 dead பீகாரில் தேசிய நெடுஞ்சாலையோரம் படுத்திருந்த பக்தர்கள் மீது கண்டெய்னர் லாரி ஏறிய விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாகப் பலியானார்கள். படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் ஜோஷி என்பவர் ஆண்டுதோறும் இம்மாதம் பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தனி பேருந்தில் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆன்மீக சுற்றுலா திருப்திகரமாக முடிந்த நிலையில், இன்று அதிகாலையில் அவுரங்காபாத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் முப்பா சில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட டெல்லி – கொல்கத்தா தேசிய…

Read More

மத்திய அரசு ஊழியர்கள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Central Government employees are ordered to submit New Property List ‘அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், புதிய சொத்து விவர பட்டியலை,செப்டம்பர், 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம். அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: லோக்பால் சட்டத்தின்படி, தங்களின் சொத்துகளும்கடன்களும்குறித்த விவரங்களை, அனைத்துமத்திய அரசு ஊழியர்களும்சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆகவே, அனைத்து அரசு ஊழியர்களும், தங்களது அசையும் சொத்துகள்,அசையா சொத்துகள்,கடன்கள் மற்றும் டிபாசிட்கள் பற்றியவிவரங்களை, ஆகஸ்ட், 1ம் தேதி,2014 நிலவரத்தின்படி, சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே இதனைசமர்ப்பித்தவர்களும், மாற்றி அமைக்கப்பட்ட புதியவிவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாடு முழுவதும்மத்திய அரசு ஊழியர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் குரூப் ஏ, பி, சி என 50 லட்சம் கணக்கில் உள்ளனர். இந்த சொத்து விவரங்களை,அவர்கள் அனைவரும்சமர்ப்பிக்க வேண்டும். ஆன் – லைன் மூலம், ஐ.ஏ.எஸ்.,…

Read More

இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம்

232 Teeth were removed from young man இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம் பொதுவாக, பெரியவர்கள் என்றால் 32 பற்களும், குழந்தைகள் என்றால் 24 பற்களும் இருக்கும் என்பது இயற்கை நியதி. ஆனால், ஒரு இளைஞனின் வாயில் இருந்து, இதற்கு மாறாக, 232 பற்களை, டாக்டர்கள் நீக்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் வசிப்பவர், ஆஷிக் கவாய், வயது 17. மும்பையில் உள்ள, ஜே.ஜே., மருத்துவமனைக்கு முகம் முழுவதும் வீங்கிய நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன் வந்தார் ஆஷிக். டாக்டர்கள், ஆஷிக்கை பரிசோதித்த பின்னர், அவரை பல் டாக்டரிடம் அனுப்பினர். அங்கு பல் டாக்டர், ஆஷிக்கை பரிசோதித்து அளவுக்கும் அதிகமாக கடைவாய் பல் பெரியதாக உள்ளதால், முகம் வீங்கியுள்ளது. எனவே, அந்தப் பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்றும் கூறினார்.…

Read More

கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன

3-year-old boy brutally beaten up by tutor in Kolkata கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் லேக் டவுனில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்களது 3 வயது ஆண் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தர டியூஷன் ஆசிரியை ஒருவரை கடந்த ஜூலை 15 ஆம் தேதி நியமித்தனர். இவர் தினமும் மாலை குழந்தைக்கு பாடங்கள் சொல்லித் தந்தார். டியூஷனுக்காக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. குழந்தையை தினமும் அறைக்குள் அழைத்து சென்றதும் கதவை ஆசிரியை பூட்டிக் கொள்வார். பின்னர், குழந்தையை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். தினமும் குழந்தை அழும் சத்தம் கேட்ட பெற்றோர், ஆசிரியையிடம் விசாரித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்றார்.இதையடுத்து, அறையில் இருந்த ரகசிய கேமரா பதிவுகளை பெற்றோர் பார்த்தனர். அதில், அந்த ஆசிரியை தினமும்…

Read More

தெலங்கானாவில் பேருந்து மீது ரயில் மோதி விபத்து 25 குழந்தைகள் பலி

25 students among 26 killed as train hits school bus in Telangana தெலுங்கானாவில் பள்ளி வாகனம் மீது நான்தத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 25 குழந்தைகள், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் உள்ள தூப்ரானில் உள்ளது ககடியா பள்ளி. அந்த பள்ளி வாகனம் ஒன்று இன்று காலை 40 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றது. செல்லும் வழியில் மசைபேட்டை கிராமத்தில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை பள்ளி வாகனம் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த நான்தத் பயணிகள் ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளில் 20 பேர் பலியாகினர், டிரைவரும் பலியானார். இந்த விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 குழந்தைகள் சிகிச்சை…

Read More