இந்திய மூத்த தலைவர் மக்கள் முன் தொகுப்பாளினியுடன் குத்தாட்டம்

Senior Congress N D Tiwaris sexy dance with lady உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர் அமைதியாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் லக்னோவில் தியாகிகளின் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் திவாரி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் நடந்த கலை விழாவின்போது மேடையேறிய திவாரி கதம் கதம் பாத்யா ஜா என்ற பாடலைப் பாடினார். பின்னர் நடனமும் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்ணுடன் சேர்ந்து அவர் ஆடியதால் அங்கு கலகலப்பு கூடியது. அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் திவாரி. இருப்பினும் விழா…

Read More

ராஜஸ்தானில் குடிகாரர்கள் சம்பளம் மனைவியிடம் கொடுக்கப்படும்

alcoholic Government staff salary will be given to spouse in rajasthan குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களும் மதுவுக்கு அதிகளவில் அடிமையாகி கிடக்கின்றனர். வாங்கும் சம்பளம் முழுவதையும் இதற்கே செலவழித்து விட்டு, குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற அவலத்தை தடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிரடி சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். அதன்படி குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியரின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் 1971ல் சமீபத்தில் திருத்தம் செய்துள்ளார். ஒரு ஊழியர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருடைய சம்பளத்தில் பாதி மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இருப்பினும்…

Read More

கோவை பா.ஜ.க நிர்வாகியின் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Coimbatore Petrol bomb attack  at BJP Functionary residence கோவை: போலீஸ் பாதுகாப்பில் உள்ள கோவையின் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின்னுடைய இல்லத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் குண்டு எறியப்பட்ட இல்லத்தின் உரிமையாளர் திரு.ராமநாதன். இவர் வடவள்ளி பகுதியின் தாயுமானவர் வீதியில் வாழ்ந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, கோவை பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதாக எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்துள்ளது. அதில் திரு.ராமநாதனுடைய பெயரும் இருந்திருந்ததால், அவரது இல்லத்திற்கும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்பு கொடுக்கபட்டிருந்தது. திரு.ராமநாதனை இல்லத்தின் உள்ளே பாதுகாப்பாக இருக்கச் அறிவுறியத்தியதால் சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. நள்ளிரவு சுமார் 12:20 மணியளவில் நிகழ்த்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல்…

Read More

கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற 2000 ஆசிரியர்கள் கைது

Government elementary school teachers arrested when they tried to have a procession towards secretariat ( Fort St. George) சென்னை: கோட்டையை நோக்கி பேரணியாக போக முயன்ற சுமார் 2000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போலிசாரால் கைது செய்ய பட்டனர். பேரணி செல்ல முயன்ற ஆசிரியர்களை போலீசார் விருந்தினர் மாளிகை அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், மத்தியஅரசின்  இடை நிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என கோரியும் பேரணி சென்றனர். Government elementary school teachers arrested when they tried to have a procession towards secretariat ( Fort St. George)

Read More

சென்னை திருவொற்றியூரில் பெண் கொலை மந்திரவாதி கணவன் கைது

Lady killed by her Wizard husband in Chennai Tiruvottiyur. சென்னை திருவொற்றியூரில் நூர்ஜகான் (வயது 31) என்ற பெண் திங்களன்று கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதில் மனைவியைக் கொலை செய்ததாக மந்திரவாதி கணவன் முகமது ரபீக் (வயது 40) செவ்வாய்யன்று  கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் சின்ன மேட்டு பாளையம் 3வது தெருவில் முகமது ரபீக் வசித்து வந்தார். கேரளாவை சேர்ந்த இவர் வீட்டில் மந்திரம், மாந்திரீகம் போன்றவைகளைச் செய்து வந்தார். இந்த கேரள மந்தரவாதிக்கு சிரியா என்ற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் சிரியாவை சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டார். பிறகு, திருச்சூரில் வாழ்ந்து வந்த நூர்ஜஹான் என்ற பெண்ணை கடந்த மே மாதம் இரண்டாம் தாரமாக மணம் முடித்து கொண்டார். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக தம்பதிகள் இருவருக்கும் இடையே…

Read More

அரசியலால் அவமானப்படும் தமிழ் நடிகர்கள்: தொடரும் வரலாறு

actor vijay insulted இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, நிகழ்ச்சியில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை. இது ஒருபுறமிருக்க அழைப்பிதழ் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர். முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய…

Read More

நிலக்கரி வழக்கு அட்டர்னி ஜெனரலுக்கு மர்ம அழைப்பு

Attorney General got a Telephone call imitating Sonia Gandhi voice புதுடெல்லி:  அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடம், சோனியா என்று அறிமுகம் செய்து கொண்டு தொலைபேசியில் உரையாடிய பெண் யார் என்பது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வதிக்கு இந்த செப்டெம்பர் மாதம்  5ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. தொலைபேசியில் பேசிய அந்த பெண் தான் சோனியா காந்தி என அறிமுகம் செய்து கொண்டு, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விபரங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த பெண்ணின் குரல் சோனியா காந்தியின் குரலைப்போன்றே இருந்தது. ‘‘இந்த வழக்கு நடக்கும் விதம் சரியல்ல, கொஞ்சம் மெதுவாக வாதாடலாம் ’’ என ஆலோசனை கூறியிருக்கிறார். இந்த இரண்டு அழைப்புகளும், நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணைக்கு முன்தினம் வந்துள்ளது.…

Read More

இந்திய திரைபட நூற்றாண்டு முக்கிய படைப்பாளிகளின்றி தொடர்கிறது

இந்திய திரைபட நூற்றாண்டு விழா தமிழக முதல்வரால் சனிக்கிழமை அன்று துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்க உள்ளன. இதில் துவக்க நாளான சனிக்கிழமை முக்கிய சிறப்பு படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இந்திய சினிமா 100யை பற்றிய குறும் படமும் ஒளிபரப்பப்பட்டது. தமிழ் திரைப்படத்திற்காக பாடுபட்டு உழைத்த யாரையும்  முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவும் இல்லை அவர்களின் புகை படத்தையும் இந்த குறும்படமும் விழாவும் ஒளிபரப்பவில்லை. பொதுவாக நடக்க வேண்டிய விழாவை அரசியல் விழா போன்று மாற்றிவிட்டார்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாற்றத்திற்கு காரணமாய் இருந்த கலைஞ்சரை பற்றிய சிறிய தகவல் கூட அங்கு பரிமாறவோ சொல்லவோ விழாவில் அனுமதி இல்லை என்பது போல் தெரிந்தது. கண்ணதாசனும் வாலியும் பேச்சளவிலும் பட்டுக்கோட்டை அழகிரி வார்த்தை அளவிலும் மட்டுமே இருந்தனர், எம் ஜி ஆர் மட்டுமே தமிழ் சினிமாவை உயர்த்தியது போல்…

Read More

இந்திய திரைபட நூற்றாண்டு விழாவில் இயக்குனரால் பரபரப்பு

சென்னையில் நடந்த இந்திய திரைபட நூற்றாண்டு விழாவின் போது இயக்குனரால் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்திய திரைபட நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. முதல்நாளன்று முதல்வர் ஜெயலலிதா விழாவை தொடக்கி வைத்தார். இரண்டாம்நாளான ஞாயிறன்று கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சியும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தினார். பின்னர் மாலையில் நடைபெற்ற தெலுங்கு திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற ஜுகல்பந்தி நடைபெற்றது. பழைய பாடல்கள் முதல் சமீபத்தில் வெளியான பாடல்கள் வரை பாடப்பட்டது. பாடகர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அரங்கத்தில் இருந்த தெலுங்கு திரையுலகின் புரட்சிகர இயக்குனர்களில் ஒருவரான ஆர். நாராயணமூர்த்தி திடீரென மேடையேறினார். இது திரைபட நூற்றாண்டு விழாவா? இசைக் கச்சேரி நிகழ்ச்சியா? என்று சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர்…

Read More

கென்ய வணிகவளாகத்தினுள் தீவிரவாதிகள் தாக்கியதில் 39 பேர் பலி

39 Killed in Terrorist Attack on Kenyan Shopping Mall   கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள பெரிய வணிக வளாகத்தினுள் நேற்று நவீன துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர்.  அந்த தீவிரவாதிகள் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் திடீர் என  கண்மூடித்தனமாக அங்கே இன்ருந்தவர்களை நோக்கி சுட்டு தள்ளினர். இந்த தாக்குதலில் இந்தியர் இருவர் உள்பட 39 பேர் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதலில் பலியானவர்களில் பார்மா கம்பனியில் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் நைரோபியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை மேனேஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகிய இந்தியர்களும் அடக்கம். இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட நான்கு இந்தியர்கள் காயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல் நடந்த பொழுது அந்த வளாகத்தில் சுமார் 1,000 பேர் இருந்தார்கள். கென்ய…

Read More