ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட டிவி நிருபர் வெட்டி கொலை

ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட டிவி நிருபர் வெட்டி கொலை File name: murder.jpg

சென்னை: ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட இஸ்ரேல் மோசஸ் (25) என்ற தனியார் டிவி நிருபரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனது வீட்டில் இருந்த இஸ்ரேல் மோசஸ்சை வெளியே வர வைத்து வெட்டியதாக கூறப்படுகிறது. நல்லூர் புதுநகர் பகுதியில் இளைஞர்களுக்கு அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இஸ்ரேல் மோசஸ் தொடர்ந்து சோமங்கலம் காவல் துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வலியுறுத்தி வந்துள்ளார். கஞ்சா வியாபாரிகளுக்கு தெரியவந்ததால் இஸ்ரேல் மோசஸ்சை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Related posts