இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை ராணுவ வீரர்களள் சுட்டுக் கொன்றனர்

Two militants killed as Army foils infiltration bid in Poonch   காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு உள்ளது. இதன் வழியாக நேற்றிரவு தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். கண்காணிப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதுபற்றி ராணுவ அதிகாரி கூறியது: ஏப்ரல் 25, 28 மற்றும் மே 3ம்தேதிகளில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவம் பதிலடி கொடுப்பதில் கவனம் செலுத்தஆரம்பிக்கும்போது தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊருடுவ விடுவது பாகிஸ்தானின் திட்டம். ஆனால் இந்திய ராணுவம் இதை உணர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் அதே நேரத்தில் தீவிரவாதிகளையும் ஊடுருவ விடாமல் தடுத்துவருகிறது…

Read More இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை ராணுவ வீரர்களள் சுட்டுக் கொன்றனர்

சென்னையில் நடக்க இருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம்

IPL-7 matches likely to be shifted out of Chennai சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். சீசன் 7 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மே 18ஆம் தேதி சென்னை அணியும், பெங்களூரு அணியும் சென்னையில் விளையாட இருந்தன. அதேபோல், 22ஆம் தேதி சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் சென்னையில் விளையாட இருந்தன. மேலும், மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஐ.பி.எல். அரையிறுதி போட்டியும் சென்னையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த 4 ஐ.பி.எல். போட்டிகளும் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கேலரிகள் திறப்பு பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே போட்டிகள் நடைபெறுவதில்…

Read More சென்னையில் நடக்க இருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம்

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்னை கழுத்தை நெறித்து கொலை

namakkal lady killed by unknown person நாமக்கல்லில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு . ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில்…

Read More நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்னை கழுத்தை நெறித்து கொலை

கிருஷ்ணகிரி மாணவி சுசாந்தி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம்

In plus 2 exams, the Krishnagiri student Susanthi scored the first mark in the state +2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.   தர்மபுரி ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 1191 மதிப்பெண்கள் பெற்று, நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜன் மற்றும் மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யா ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை +2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டு 8.45 லட்சம் பேர் தேர்வு எழுதினர். +2 விடைத்தாள்…

Read More கிருஷ்ணகிரி மாணவி சுசாந்தி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம்

கோவாவில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி 3 பேர் படுகாயம்

One Dead, Three Injured in Explosion in Madgaon in Goa   கோவாவில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவாவில் மத்கோன் பகுதியில் குண்டு வெடித்ததாகவும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். One Dead, Three Injured in Explosion in Madgaon in Goa One person was killed and three others injured in a blast today near Madgaon town, 40 km from Goa’s capital of Panaji.  “Police have rushed to the spot and the cause of the blast is not known.…

Read More கோவாவில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி 3 பேர் படுகாயம்

இலங்கையில் திடீரென பெய்த மீன் மழை

Fish rain down on Sri Lanka village இலங்கையின் மேற்கு பகுதியில் மீன் மழை பெய்துள்ளது. இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ளது சிலா மாவட்டம். இங்குள்ள சில கிராமங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது தொப் என்ற சத்தத்துடன் வீட்டின் கூரைகள் மீது ஏதோவிழுவதை அம்மக்கள் உணர்ந்துள்ளனர்.  இதையடுத்து வெளியே சென்று பார்த்தபோது வானத்தில் இருந்து மீன்கள் சாரை சாரையாக வந்து விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆச்சரியத்துடன் மீன்களை சேகரிக்க தொடங்கினர். 50 கிராம் எடையுள்ள ஐந்து முதல் 8 செ.மீ. நீளமுள்ள சிறிய வகை நன்னீர் மீன்கள் என்று தெரியவந்தது. பலத்த காற்றடித்தபோது ஏரிகளில் இருந்த மீனை காற்று எடுத்து வந்து கிராமத்தின் மீது வீசியிருக்கலாம். அதுதான் இந்த மீன் மழைக்கு காரணம் என்று கிராம மக்கள் கருதுகிறார்கள். இலங்கையில்…

Read More இலங்கையில் திடீரென பெய்த மீன் மழை

உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்துள்ளது

The Supreme court will give the judgement on the case seeking ban on Jallikkattu in Tamil Nadu தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. ஜல்லிக்கட்டு பாரம்பரிய் அவிளையாட்டு, இதில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்று தமிழகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுகளை நடத்த தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் காளைகள் விளையாட்டு…

Read More உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்துள்ளது

பழனி அருகே தம்பதியை கட்டி போட்டு 100 பவுன் நகை திருட்டு

gang loots 100 sovereigns jewels cash from financier s house பழனி அருகே கணவன்-மனைவி யை கட்டிப்போட்டு 100 பவுன் நகை யை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது. பழனி அருகே உள்ள தாழையூத் தைச் சேர்ந்தவர் அப்புகுட்டி (எ) கார் த்திகேயன் (44). தி.மு.க. பிரமுகரான இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்திரா (35). மகள் கள் நிவஞ்சிதா (13), அனுமிதா (9).கார்த்திகேயனின் வீடு அரண் மனை தோட்டம் என்ற இடத்தில் உள்ளது. குழந்தைகள் இருவரும் கோடை விடுமுறையையொட்டி கீதம் பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டனர். திங்களன்று கார்த்திகேயன் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 9.30 மணியளவில் காரில் வீடு திரும்பியுள்ளார். இவரது மனைவி இந்திரா வாசல் கதவை…

Read More பழனி அருகே தம்பதியை கட்டி போட்டு 100 பவுன் நகை திருட்டு

இலங்கை ராணுவத்தின் கெடுபிடிகளை தாங்க முடியாமல் மீண்டும் தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள்

Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் 10 இலங்கை தமிழ் அகதிகள் தனுஷ்கோடி வந்துள்ளனர். 2 குடும்பங்களை சேர்ந்த 10 இலங்கை அகதிகள் இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரிடம் அவர்கள் கூறும்போது, ”இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். எங்களை போல், சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர். மேலும் இலங்கையில், விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை ராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்” என்றனர். Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today. They say, more than 2 thousand…

Read More இலங்கை ராணுவத்தின் கெடுபிடிகளை தாங்க முடியாமல் மீண்டும் தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்த காயம்

New photos of Chennai bomb blasts victim Swathi show bullet wound on her chest. சென்னை குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதியின் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது போன்ற காயம் உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்ததில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி பலியானார், மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடம் மற்றும் பலியான ஸ்வாதியின் புகைப்படங்கள் அன்றே வெளியிடப்பட்டன.  அதில் காயம் அடைந்த ஸ்வாதியின் முகம் மட்டும் தான் காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்வாதியின் புதிய படங்கள் மற்றும் சம்பவ இடத்தின் படங்கள் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய படங்களில் பலியான ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது…

Read More சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதியின் மார்பில் குண்டு பாய்ந்த காயம்