மகாராஷ்டிராவில் 66 வயது பெண் தன் கணவரின் உயிரைக் காக்க மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெறும் காலில் கட்டிய சேலையுடன் ஓடி 5,000 ரூபாய் பரிசு பெற்றர்

Sixty six year old granny runs ‘marathon’ in a saree in Maharashtra

Sixty six year old granny runs 'marathon' in a saree in Maharashtra

இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காக வெறும் காலில் கட்டிய சேலையுடன் மராத்தான் ஓட்டப் போட்டி ஒன்றில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்ற பாட்டியின் செயல் பலரையும் நெகிழ் வைத்துள்ளது.

அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டியான லதா பகல்வான்காரே என்பவர் வெறும் காலில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்தையடுத்து அவரை சந்தித்து பேசிய மீடியாக்களிடம் சொன்ன செய்தியை கேட்டு பலரும் நெகிழ்ந்து விட்டார்கள்

அதாவது இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின் ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காகவே அந்த முதிய பெண்மணி முதல் முறையாக இப்போட்டியில் ஓடி வெற்றி பெற்றுள்ளாராம்.

இது குறித்து அந்த லதா காரே”என் கணவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்லி என்ற இடத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனையில் தான் ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு கிட்டத்தட்ட 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. ஆனால் விவசாய கூலி வேலை பார்த்து தினம் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் என்னிடம் என் கணவரின் ஸ்கேனுக்கு பணம் இல்லை. அப்போதுதான் இந்த மராத்தான் போட்டி பற்றி கேள்விப்பட்டேன். இதற்கு முன்பு நான் வேகமாகக் கூட நடந்ததில்லை ஆனால் கணவருக்காக பந்தயத்தில் ஓடி எப்படியும் பரிசை வெல்ல ஆசைப்பட்டேதேன். இத்தனைக்கும் காலில் செருப்பு கிடையாது; வழக்கமாக 9 முழ சேலையை வரிந்து கட்டி கொண்டு பந்தயத்தில் ஓடி வந்து வெற்றி பெற்று விட்டேன். இனியும் கணவரை காப்பாற்ற இதற்கு மேல் கூட எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.”என்று அவர் கூறினார்.

இதையடுத்து அவரின் மகன் சுனில் ”அம்மாவின் உடல் நிலை ஏற்கனவே மோசம்; எப்படியோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இந்த போட்டியில் ஓடி அவருக்கு ஏதேனும் ஆகி விடக் கூடாதே என்று பயந்து நான் அவரை தடுத்துப் பார்த்தேன்; அவர் கேட்கவில்லை,” என்ரு தெரிவித்தார். இதற்கிடையில் அவரின் சாதனை குறித்தும் அவரின் சூழ்நிலை குறித்தும் மீடியாக்களில் செய்திகள் வெளியானதை அடுத்து பலர் அவருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து உதவி வருகின்ற்னர்.

Sixty six year old granny runs ‘marathon’ in a saree in Maharashtra

At 66, most people would have retired and exercise for them is usually a slow-paced morning walk. That’s not the case with Lata Bhagwan Kare though. A resident of Pimpli in Maharashtra, Kare surprised everyone at the local marathon last weekend. To run your first marathon at 66 is surprising but to be faster than your much younger opponents is nothing short of a miracle. Lata Bhagwan Kare did just that at the Baramati Marathon in Maharashtra.  Kare’s dress code was a traditional Maharashtrian saree, and no shoes at all! She won the senior citizen’s category running 3 km and was awarded a cash prize of Rs 5000 and a certificate.  Over 9500 people participated in the race in four categories but clearly the highlight was the 66-year-old farm worker. After running her first marathon Kare, who is a grandmother, now wants to run more races. With better footwear and running gear, you never know, she could just be another Fauja Singh in the making.

 

Related posts