நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்ற கார் திடீரென தீப்பிடித்தது

car catches fire outside parliament டெல்லி: நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தின் நார்த் பிளாக்கில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று இன்று மதியம் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து மதியம் 1.45 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 2 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தன. கார் தீப்பிடித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கார் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னால் சதி எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். car catches fire outside parliament A car parked outside the parliament caught fire. Fire…

Read More

13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

13 year old senior student at Lucknow University உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பகதூரின் கடைசி மகள் சுஷ்மா வயது 13. இந்த சிறு வயதிலேயே அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம் ஆண்டில் பிறந்த சுஷ்மா தன் இரண்டரை வயதில் லக்னோவில் நடைபெற்ற ராமாயணம் ஒப்புவித்தல்…

Read More

இந்தியாவில் வரதட்சணையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி

Dowry Deaths: One Woman Dies Every Hour in India இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிர் இழக்கிறார்.தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு தெரிவித்துள்ள இத்தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சார்ந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2007-லிருந்து 2011-க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை தொடர்பான இறப்புகள் பன்மடங்கு அதிகரித்து விட்டன. அதே வேளையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விகிதமும் 35.8-லிருந்து 32 ஆக குறைந்துள்ளது என தெரிய வருகிறது. முன்னெல்லாம் கீழ்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களில்…

Read More

ஷீலா தீட்சித்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.! நீதிமன்றம் உத்தரவு

FIR against Sheila Dikshit : Court orders FIR against Sheila Dikshit for misusing funds for poll ads தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2008ம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் அரசு நிதியை தவறான முறையில் பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. தகவல் கேட்பு ஆர்வலர் விவேக் கர்க், பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் சிறப்பு நீதிபதி நரோத்தம் கௌஷல் விசாரணை மேற்கொண்டார். இந்த இரு மனுக்களிலும் ரூ.22.56 கோடியை 2008ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியாக தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில், ஊழல் தடுப்புச்…

Read More

கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்

Wife Boils Husband’s Corpse in Pressure Cooker in china சீனா, ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், தனது முதல் திருமணம் தோல்விக்குப் பிறகு வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணமும் அவரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கவில்லையாம். முதலில் நல்லவராக இருந்த அப்பெண்ணின் கணவர், நாளடைவில் அப்பெண்ணையும், அவரது மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண், கோபத்தில் பொங்கியெழுந்து விட்டார். போதை மருந்து கொடுத்து கணவரை மயக்கத்திற்கு கொண்டு சென்ற மனைவி, தொடர்ந்து 3 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் அவரை பட்டினி போட்டுள்ளார். வஞ்சம் தீர்க்கும் விதமாக கணவரை அடித்தும் சித்ரவதை செய்துள்ளார். தொடர் கொடுமைகளை தாங்க முடியாத கணவர் மரணமடைந்து விட போலீசில் இருந்து தப்பிக்க தடயத்தை அழிக்க நினைத்துள்ளார் அப்பெண். அதனைத்…

Read More

வெயில்நோய்களில் இருந்தும் தப்பிக்க பூசணிக்காய் அவல் சாலட்

pumpkin Aval salad தேவையான பொருட்கள்: 1. பூசணிக்காய் – 1 2. அவல் – 1 கிலோ 3. தயிர் – 4 லிட்டர் 4. நறுக்கிய குடைமிளகாய் – 100 கிராம் 5. நறுக்கிய கொத்தமல்லி – 1 கப் 6. உப்பு & மிளகு – தேவையான அளவு செய்முறை: பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும். அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும். பூசணிக்காய் தயிர்அவல் ரெடி! விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும். தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்த நேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். pumpkin Aval…

Read More

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி பெட்ரோல் பங்கை இரவு மூட முடிவு

Government decides to close the petrol pumps at night பெட்ரோல் பங்குகளில் டீசல், பெட்ரோல்  விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க இரவு 8:00 மணி முதல் காலை 8:00 மணி வரை வரை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது . இதன் படி  16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பரிந்துரைத்துள்ளார் . அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு  நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மத்திய அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக  நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க மத்திய அரசு போராடி வருகிறது.அதிக மக்கள் தொகையுள்ள இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிள்…

Read More

அரசு ஊழியர்களுக்கு 3ஆண்டுக்கு பின் 10% அகவிலைப்படி உயர்கிறது

After 3 years government employees get 10% dearness allowance தற்போது மத்திய அரசு ஊழியர்களின்  அடிப்படை சம்பளத்தில் 80 சதவீதமாக அகவிலைப்படி உள்ளது. இதை 10 % உயர்த்தி  90 % மாக ஆக்க மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அளவுக்கு அகவிலைப்படி உயர்வு செய்து இந்த மாதம் வெளியிடபடுகிறது.   தொழிற்சாலை ஊழியர்களுக்கான இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (ஜூன் மாதம்) திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி கொடுக்கபடுகிறது. கடந்த, ஜனவரி முதல் அமலுக்கு வந்த 8 % அகவிலைப்படிஉயர்வால்  72 % தில்  இருந்து  80 % மாக உயர்த்தப்பட்டது. தற்போது 10 % மானால் 90%த்தை எட்டும். இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்கள்.ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி…

Read More

கல்லூரி விழாவுக்கு மேற்குவங்காள மந்திரிக்கு பொதுமக்கள் அடி–உதை

West Bengal minister severely beaten up by public and held hostage ராம்புரத்: மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் ராம்புரத் அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி நூர் ஆலம் சவுத்ரி வந்தார். அப்போது அங்கே கூடிய பொதுமக்கள் மந்திரியை பிடித்து அடித்து உதைத்து, கல்லூரி அறை ஒன்றில் சிறை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் படுகாயமடைந்த மந்திரியை மீட்க விரைந்தனர்.  ஆனால் போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, கல்லூரி வாசலையும், அந்த ஊருக்கு செல்லும் சாலைகளையும் பொதுமக்கள் அடைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க போலீசார் அனுப்பி வைத்த மருத்துவ வேனையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி…

Read More

சென்னை முகப்பேரில் விடுதலைப் புலிகள் இருவர் கைது

Two former LTTE cadres arrested in chennai Mogappair சென்னை அண்ணாநகர் முகப்பேரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர்முகப்பேரில்  கோல்டன்ஜார்ஜ் நகரில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி 2 பேர் தங்கியிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் க்யூ பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை அங்கு சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (34), கோபி (30) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு மற்றும் வான்படையில் முக்கிய நிர்வாகிகளாக இருந்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாம். மேலும், கடந்த ஆண்டு பம்மல் சங்கர்நகரில் ஒரு வீட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டபோது, இவர்கள்…

Read More