forcing minor daughters into prostitution, Mother sentenced சென்னை: பெற்ற மகள்களை விபசாரத்தில் தள்ளிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி பேரலை வீசியது. இதில் பலர் உடமைகளை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் ஆட்கடத்தல், விபசாரம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நீதி பணிக்குழு, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்தது. அப்போது இந்த ஆய்வு குழுவினர், புதுச்சேரியில் ஆனந்த் என்ற விபசார புரோக்கரை சந்தித்தனர். விபசாரத்தின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக, விபசாரத்துக்கு பெண் கேட்டு ஆனந்திடம் நடித்தனர். அவர் தமிழ் என்ற மற்றொரு நபரிடம் அவர்களை அழைத்து சென்றார். அதன் பிறகு, அந்த வெளிநாட்டவர்களுக்கு கண்ணனை தமிழ் அறிமுகம் செய்து…
Read Moreசிரியாவில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்
Indian citizens in Syria to return India: India has advised its citizens in Syria to leave the West Asian country வாஷிங்டன்: ஓராண்டுக்கும் மேலாக சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவம் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இதில் பலியாகினர். டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் கடந்த மாதம் சிரிய ராணுவம் நடத்திய ரசாயன குண்டு தாக்குதலில் 1300க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியானதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து அங்கு ஐநா பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிரதமர் டேவிட் கேமரூன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சிரியா மீது போர் தொடுக்கும் திட்டத்தில் இருந்து இங்கிலாந்து பின்வாங்கியது. எனினும், சிரியா மீது ராணுவ…
Read More10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3முதியவர்கள் கைது
Tuticorin police arrested 3 elders for sexually harassing 10 year old girls தூத்துக்குடியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக மூன்று முதியவர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழந்தது. இந்நிலையில், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு…
Read Moreபெண்ணை அடித்து உதைத்து கற்பழித்த 2போலீஸார் உள்பட4 பேர் கைது
woman gang raped and robbed two constables among four arrested in Noida. Police have arrested 4 persons in this regard, among them 2 are policemen. நொய்டா: டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து கற்பழித்த 2 போலீஸார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் ஒரு பெண். அவரை ஒரு கும்பல் கற்பழித்து அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்று விட்டது. இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், நான் குடியிருந்த அதே குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபர் போலீஸ் வேலையில் சேருவதற்கு தயாராகி வந்தார். அவர்…
Read Moreநவநீதம்பிள்ளை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை..
Navaneetham pillai condemns Srilankan Government and sri lanka rejects navaneetham pillai demands. இலங்கையில் “பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மோசமான நிலையில் – பயண முடிவில் நவநீதம்பிள்ளை இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள், இலங்கையில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவ்வாறு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார். நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்கிளடம் பேசிய போதே இதனை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது. இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது. போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில்,…
Read Moreசென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!
Govt to offer 100% stake in 6 airports to private operators in india சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை 100 சதவீதம் தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.ஆனால் விமான நிலையங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வருவாய் பங்கீட்டு அடிப்படையில் விமான நிலைய நிர்வாகத்தை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். சென்னை விமான நிலையம் 2,325 கோடி ரூபாய் செலவிலும், கோல்கட்டா விமான நிலையம், 2,015 கோடி ரூபாய் செலவிலும் இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தால் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் சென்னை, லக்னோ விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிப்பதற்கு தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்களிடம்…
Read Moreஇணையதளப்பழக்கத்திற்கு அடிமையான சிறுவர் சிறப்பு முகாம்கள்
Screen Addicted Kids : Japan Internet ‘Fasting Camps’ Aim To Treat ஜப்பான்: தற்போதைய காலகட்டத்தில் கம்யூட்டர் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. அதே சமயம், பல்வேறு சிறார்கள் கம்யூட்டருக்கு அடிமை ஆகிப் போவது அவர்களின் இயல்பான வெளி நடவடிக்கைகளைப் பாதிக்கத் துவங்குவதாக மாறுவது கவலைக்குரிய செயலாக தோன்றுகின்றது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவயதினர் இணையதளம் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 5,18,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசின் தகவல் அதிகாரி பத்திரிகை செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், 98,000 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 8.1 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இது ஒரு…
Read More100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக யாசின் பத்கல் வாக்குமூலம்
100 people trained extremist Yassin patkal இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பத்கல் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பத்கலிடம் காவல்துறையினர் நேற்று 3 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கு முன்பாக நடந்த இந்த விசாரணையில் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக பத்கல் தெரிவித்துள்ளார். தனது ஆணைக்கு கட்டுப்பட்டு எதையும் செய்யும் விதமாக 100 பேரை தீவிரவாத பயிற்சி அளித்து தயார் படுத்தியதாகவும் பத்கல் கூறியுள்ளார். இதற்காக 6 மாதங்கள் நேபாளத்தில் தங்கியிருந்ததாகவும் பத்கல் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தி ஏராளமானோரை கொன்றது குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்றும் பத்கல் கூறியுள்ளார். ஆனால், புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பத்கலும்,…
Read Moreபாகிஸ்தானில் செல்போன்கள் உபயோகத்தில் கட்டுப்பாடு
Pakistan bans SMS packs to safeguard ‘moral values’ செல்போன்களில் வாய்ஸ், தகவல் மற்றும் ‘எஸ்.எம்.எஸ்.’ எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்புதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அவை சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கெடுப்பதாக பாகிஸ்தானில் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது குறித்து பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேசியுள்ளனர். எனவே, செல்போன்களில் உள்ள எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்ற ‘பேக்கேஜ்’ சிஸ்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அதற்கான உத்தரவை செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் வருகிற 2–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கான கடிதம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் செல்போன் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என அதிகாரி தெரிவித்தார். Pakistan bans SMS packs to safeguard ‘moral values’ Pakistan…
Read Moreதமிழகத்தில் மீன் வரத்து அதிகமானதால் விலை சரிவு
Fish prices fall due to good supply from pamban,rameshwaram,keelakarai and from other places ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் , பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக இதமான காற்று வீசுவதால் மீனவர்களுக்கு அதிகளவில் விலை உயர்ந்த மீன்கள் சிக்குகின்றன. இதனால் சில வாரங்களாக மீன்களின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 300 ரூபாய்க்கு விற்ற 250 க்கும், 210 க்கு விற்ற ஊழா 200 க்கும் , 220 க்கு விற்ற முரல் 210 க்கும், 170 க்கு விற்ற வில மீன் 140 க்கும், 100 க்கு விற்ற நகர 80 க்கும், 250 க்கு விற்ற நண்டு 240 க்கும், 240 க்கு விற்ற இறால் 180க்கும், 100 க்கு விற்ற காரல் 80…
Read More



