தூத்துக்குடியில் மீன் ஏலக்கூடம் தீ விபத்தில் எரிந்து கருகி நாசம்

A fish auction house in Tuticorin was gutted in fire தூத்துக்குடியில் தனியார் மீன் ஏலக்கூடம் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் கென்னடி. இவருக்கு சொந்தமான மீன் ஏலக்கூடம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ளது. இந்த ஏலக்கூடத்தில் இன்று காலையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புபடை வீரர்கள் நிலையஅதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து வந்தனர். தீயணைப்புடை வீரர்கள் சுமார் 30நிமிடநேரம் போராடி தீயை தடுத்து அணைத்தனர். இருந்தபோதும், தீ விபத்தில் ஏலக்கூடத்தில் இருந்த 5லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஏற்றுமதிக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். A fish…

Read More

பூனாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை லிப்டில் கற்பழிப்பு

Mentally challenged woman raped in Pune hospital பூனாவில்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பணியாட்கள் இருவர் மருத்துவமனை லிப்டில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனாவின் போசாரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை லிப்டில், மனநலம் பாதிக்கப்பட்ட, பேசமுடியாத பெண் ஒருவர் வார்டு பணியாள‌ர் மற்றும் வாட்ச்மேனால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டார். கடந்த மாதம் 26 ஆம் தேதி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மருத்துவமனையின் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியோடு, வார்டு பணியாள் மற்றும் வாட்ச்மேன் லிப்டில் வைத்து கற்பழித்தனர். இதனால் அச்சமடைந்த அப்பெண், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி 5 நாட்கள் கழித்து தான், அவரது உறவினர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரியப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மருத்துவமனையின் வார்டு…

Read More

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி ஸ்வாதி

Indian American Swati Dandekar in race for US Congress அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி தன்டேகர் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவின் ஐயோவா மாகாண சபையின் மேரியான் பகுதி பிரதிநிதியாக இவர் நாக்பூரைச் சேர்ந்த இவர் 1973ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். இவர் தனது கணவர் அரவிந்த் மற்றும் இரு மகன்களுடன் மேரியான் பகுதியில் வசித்து வருகிறார். விவசாயம், தொழில்நுட்பம், சர்வதேச விவகாரங்களில் ஆர்வம் கொண்டவர் இவர். English News: Indian American Swati Dandekar in race for US Congress Indian American Swati Dandekar of Democratic Party has announced her candidacy for the 1st Congressional District of Iowa. Dandekar is a former Iowa legislator representing the…

Read More

டெல்லி பல்கலைக்கழகம் மாணவிகள் ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸுக்கு தடை

Delhi University study trip : No skirts, shorts, spaghetti tops கல்வி சுற்றுலா செல்லும் டெல்லி பல்கலைக்கழக மாணவ-மாணவியர் இந்தந்த ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கல்வி சுற்றுலாவாக இன்று பஞ்சாப் கிளம்புகின்றனர். அவர்கள் ஞானோதயா எக்ஸ்பிரஸ் மூலம் பஞ்சாபுக்கு கிளம்புகிறார்கள். இந்த ரயில் அவர்களின் கல்வி சுற்றுலாவுக்கு என்று பிரத்யேகமாக விடப்பட்டுள்ளது. முன்னதாக மாணவ-மாணவியர் இந்த சுற்றுலாவின்போது எந்தெந்த உடைகளை அணியக் கூடாது என்று பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 900 பேர் ஒரு வார கால சுற்றுலாவாக கிளம்புகிறார்கள். அவர்கள் பஞ்சாபில் அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர் ஆகிய இடங்களுக்கும், ஹரியானாவில் குருஷேத்ராவுக்கும் செல்கின்றனர். மாணவிகள் ஸ்கர்ட்டுகள், குட்டைப் பாவாடை, ஷார்ட்ஸ், ஸ்பெகட்டி ஆகியவை அணியவே கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஸ்லீவ்லெஸ் டி சர்ட் மற்றும்…

Read More

ஜப்பானில் மழையால் மூழ்கிய கிராமங்கள் 5000 பேர் வெளியேற்றம்

Japan Flood: 5,000 Japanese told to evacuate due to rains கடந்த வாரம் முதல் ஜப்பானில்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனிடையே ஒரு புயல் தாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  5000 பேர் பாதுகாப்பிற்காக ஜப்பானிலிருந்து வெளியேறியுள்ளனர்.  இதனால்வெள்ளத்தில் குமாமோட்டோ மாகாணத்தின் பல பகுதிகள் சூழ்ந்துள்ளது. மழையின் வேகம் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. ஆறுகளின் கரைகளில்  இதனால் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் மற்றும் வீடுகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  நான்கு லட்சம் பேர் கியூஷூ தீவில் மட்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் உள்ள முதியவர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர்.  கடற்படை வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள எரிமலையின் அடிவாரத்தில் உள்ள அசோ என்ற இடத்தில், 80 முதல் 100 செ.மீ., அளவுக்கு மழை அளவு பதிவாகியுள்ளது. Japan flood: 5,000 Japanese told to evacuate…

Read More

உளவுத்துறை ஊழியர்களையே ரகசியமாக வேவு பார்க்கிறது அமெரிக்கா

Al-Qaeda tried to infiltrate US intelligence agencies: Report அமெரிக்க உளவுத்துறைக்குள் ஊடுருவ அல்-கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருவதாக சிஐஏ தெரிவித்துள்ளது. இதனால் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து சிஐஏ ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க உளவு அமைப்பு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையில் வேலைகோரி விண்ணப்பிப்போர், வேலையில் சேர்க்கப்பட்டோர் ஆகியோரில் பலர் குறித்தும் சந்தேகம் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் இதில் பணியில் உள்ளவர்களின் பின்னணி குறித்து அடிக்கடி ரகசிய விசாரணை நடத்த வேண்டிய நிலைக்கு சிஐஏ தள்ளப்படுகிறதாம். குறிப்பாக அமெரிக்க உளவு அமைப்பில் பணியில் உள்ள 5ல் ஒருவர் மீது பெரிய அளவில் சந்தேகம் வந்துவிடுகிறதாம். இவர்களுக்கு தீவிரவாத அமைப்புகள், பிற நாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றன…

Read More

உ.பி மாநில ஆசிரமத்தில் 10 பசுக்கள் பலி தீவனத்தில் விஷம்

Gopalgarh : 10 cows die of food poisoning at ashram உ.பி. மாநிலம் மதுரா நகரில் உள்ள கோபால்கர் பகுதியில் ஒரு ஆசிரமத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 பசு மாடுகள் திடீரென இறந்தன. கோபால்கர் பகுதியில் அகந்தானந்த் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் நேற்று பசு மாடுகளுக்குத் தீவணம் போடப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து பிற மாடுகளும் பாதிக்கப்பட்டன. இதில் 10 மாடுகள் பரிதாபமாக இறந்து போயின. அந்த மாடுகள் உண்ட தீவனம் விஷமாகிவிட்டதன் காரணமாக இந்த பசு மாடுகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 24 மாடுகள் உடல் நலம் குன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிற மாடுகளை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆசிரமத்தில் இருந்த பசுக்கள்…

Read More

பாலிவுட் ரசிகர்கள் உருவாக்கிய பிரபுதேவா மெழுகுச்சிலை

Prabhu Deva unveils his wax statue இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பெருமையோடு அழைக்கப்படும் பிரபுதேவாவின் மெழுகுச் சிலையை உருவாக்கியுள்ளனர் பாலிவுட் ரசிகர்கள். அதனை இன்று திறந்து வைத்த பிரபுதேவா நெஞ்சுருகி ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மும்பை – புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லொனவாலா வேக்ஸ் மியூசியத்தில் பிரபு தேவாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தா பிரபுதேவா ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ச்சியடைந்தார். நடன இயக்குநராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த பிரபுதேவா, பின்பு நடிகராகி, அதன்பிறகு இயக்குநராகவும் ஆகிவிட்டார். தமிழ், தெலுங்கில் அவர் இயக்கிய படங்கள் சரியாகப் போகாததால், இந்திக்குப் போனார் பிரபுதேவா.இந்தியில் இவர் இயக்கிய வாண்டட், ‘ரவுடி ரத்தோர்’, ‘ராமையா வஸ்தாவையா’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ்கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களை டைரக்டு செய்கிறார். பிரபுதேவா நடனத்துக்கு இந்திபட…

Read More

இன்டர்நெட்டும் ஒரு போதை! லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

internet addiction linked depression says study சமீப காலமாக சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், பலருக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது என்றும் அதனால் வாழ்க்கையே விரக்தியாகி விடுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வருகிறது.  இண்டர்நெட் இல்லாவிட்டால் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகிறார்களோ, அதே போலத்தான் இன்டர்நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.  இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர்,…

Read More

ரஷ்யாவின் சி-17 விமானம் இந்திய விமானப்படையில் சேர்ப்பு

C-17 heavy-lift transport plane inducted into IAF  போர் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை சுமந்துச் செல்லக்கூடிய சி-17 ரக விமானத்தை பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணி இன்று இந்திய விமானப் படைக்கு அர்ப்பணித்தார். ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஐ.எல்-76 ரக விமானங்களில்தான் இந்திய வீரர்கள் இதுவரை போர்களுக்கு ராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை அனுப்பி வந்தனர்.இந்த விமானம் 40 டன் எடையுள்ள பொருட்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் ஆற்றல் கொண்டது என்பதால், அதிக எடையை ஏற்றிச் செல்லும் அதிநவீன விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, அமெரிக்காவில் இருந்து 10 சி-17 ரக விமானங்களை வாங்க கடந்த 2011ம் ஆண்டு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 70 டன் (70 ஆயிரம் கிலோ) எடை வரை ஏற்றிக்கொண்டு சவாலான பகுதிகளிலும்…

Read More