ஓடும் ரயிலில் பிறந்து கழிவறை வழியே விழுந்த குழந்தை உயிரோடு மீட்பு

The Baby born in train toilet and fell down in Track saved by passengers ஓடும் இரயில் கழிவறையில் பிரசவிக்கப்பட்டு, கழிவறை துளை வழியே தண்டவாளத்தில் விழுந்த பச்சை குழந்தை எந்த ஒரு காயமும் இன்றி மீட்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகில் ஜூம்கா கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அப்ரோஜா பிபி, தன் நிறைமாத கர்ப்பிணி மகளான திருமதி.ரெஹானி பிபியை இரயிலில் அழைத்துக் கொண்டு போனார். அப்போது இரயில் நாடியா மாவட்டம் பலாஷி இரயில் நிலையத்தில் நின்றது. நிறை மாத கர்பிணியான திருமதி.ரெஹானி பிபி கழிவறைக்குச் போனார். அங்கே திடீர் என்று அவருக்கு பிரசவம் வேதனை வந்து குழந்தையை பிரசவித்தார். பிறந்த குழந்தை கழிவறையின் துளை வழியே தண்டவாளத்தில் விழுந்தது. குழந்தை கீழே விழுந்தவுடன் அவர் கதறினார். அவரது கதறல் சத்தம் கேட்டு…

Read More

இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த நகரம் பெங்களூர்: புதிய ஆய்வு

Bangalore tops as business hub, Chennai a close second இந்தியாவிலேயே தொழில் ஒன்றை தொடங்கி நடத்த சிறந்த நகர பட்டியலில் பெங்களூர் நகரம் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குஅடுத்தபடியாக சென்னை, மும்பை, புனே ஆகிய நகரங்கள் அந்த சிறப்பை பெற்றுள்ளன. இந்த சிறப்பு  பட்டியலில், இந்தியாவின் தலைநகரமான டெல்லி இடம்பெறவில்லை எனினும், டெல்லியின் பிராந்தியத்தில் அமைந்து இருக்கும் நொய்டா, குர்கான் ஆகிய நகரங்கள்  17-ம் இடம் மற்றும் 19-ம் இடம் ஆகிய வரிசையில் வருகின்றன. மனிதவளம், அடிப்படை வாழ்க்கைத் தரம், உட்கட்டமைப்பு வசதிகள், நகர கலாச்சாரம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பெங்களூர் தான் தொழில் தொடங்க பெரிதும் உகந்ததாக உள்ளது. மேலும் இங்கு தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடு இல்லாத குடிதண்ணீர் விநியோகம்,  எதிதான போக்குவரத்து வசதி மற்றும் குடியிருப்பு வசதி, அலுவலக இடங்கள் மற்றும்…

Read More

குழந்தைகள் பிஸ்கெட்டில் கோகைன் எனும் போதை பொருள்: அதிர்ச்சி ஆய்வு

Oreo cookies may be as addictive as drugs, study shows சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணுவதாக  விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் பிஸ்கட்களில் ஒன்று தான்  (OREO) ஓரியோ. மயக்கத்தை உண்டாக்கும் விளமபரங்களை போல் இந்த  (OREO) ஓரியோ பிஸ்கெட்டில் போதை தரக்கூடிய கோகைன் எனும் போதைப்பொருள் இருப்பதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல்  கூறுகிறது. மளிகை பொருட்கள் வாங்க ஷாப்பிங் போனால் குவியல் குவியலாக குழந்தைகளை தூண்டும் வகையில் பல வகையான பிஸ்கெட்டுகள் மார்கெட்டில் பெருமளவு உள்ளது. இந்த பிஸ்கட்டை போல் பல நிறுவனங்களும் புதிது புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியிருகின்றன. இந்த வகையில், பிரபல ‘ஓரியோ’ பிஸ்கெட்களை உண்ணும் குழந்தைகளுடைய மூளை கோகைன் போதைப் பொருளை உட்கொண்ட உற்சாகத்தை போன்ற போதையை அடைவதாக அமெரிக்க வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இது பற்றி…

Read More

கதிர்வீச்சு பயம் போக்க மக்கள் முன் கடல் உணவு உண்ட ஜப்பான் பிரதமர்

Japanese PM eats seafood caught off Fukushima   கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில், பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து சுனாமி பேரலை தாக்குதலும் ஏற்பட்டது. அந்த பேரிடரில் புகுஷிமா அணு மின் நிலைய அணு உலைகள் சிர்குலைந்து வெடித்தது. அந்த விபத்தில்  கதிர்வீச்சு கசிந்து சுற்று சூழல் பதிப்புக்கு உள்ளானது. இதில் குடிநீர், பால்,  மற்றும் உணவு பொருட்களில் அந்த அணுகதிர் பரவியது. ஆகவே, அந்த விபத்து நடந்த பகுதிகளை சுற்றி வாழ்ந்துவந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்க்கு பின் நிபுணர்களை உதவியோடு அந்த கதிர்வீச்சு கசிவை கட்டுபடுத்தி வெளியாகாமல் சீர் செய்யப்பட்டது. மீன்கள் சாப்பிட அச்சம் இருந்தும், அங்கிருந்து அவ்வப்போது கதிர்வீச்சு கசிவு ஏற்படுகிறது. அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் மீன்களிலும் கதிர்வீச்சு தாக்கி…

Read More

இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 3-ல் ஒரு பகுதியாகக் குறைவு

reducing infant maternal mortality tamil nadu இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 3-ல் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 50 % மாகக் குறைந்திருப்பதாக  தெரிய வந்துள்ளது. மாநில அரசினால் கையாளப்படும் பொது சுகாதார வழி முறைகள் தான் இது போன்ற முன்னேற்றத்திற்கு முக்கியக்காரணம் என கருதப்படுகின்றது. குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கணக்கிடுவதாகும். இது சுகாதார சேவைகள், ஊட்டச்சத்து அளவு, வறுமை மற்றும் மக்களின் கல்வி நிலை போன்றவற்றில் ஒரு முக்கியக் குறியீடாக விளங்குகின்றது. கடந்த 2000ஆவது ஆண்டுத் துவக்கத்தில் ஐ.நா அமைப்பு, குழந்தைகளின் இறப்பு விகிதம் உலக நாடுகளில் குறைக்கப்பட வேண்டும் என்பதை தன்னுடைய சுகாதாரக் கழகத்தின் வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது. இதற்கான கெடுவாக…

Read More

ரஷ்ய பேருந்தில் பெண் தீவிரவாதி தற்கொலை தாக்குதல்: 6 பேர் பலி

Russia bus bomb: Volgograd blast kills six  ரஷ்ய நாட்டில் ஒரு பேருந்தில் ஓர் பெண் தீவிரவாதி உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு  தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி செத்தனர். மேலும் 24 பேர் படுகாயமுற்றனர். ரஷ்யாவின் வால்கோகிராட் நகரில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சில் பெண் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் சிதறி பலியாயினர். 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதிவாசிகள் தெரிவிக்கும் போது, பலத்த இடியோசை போல் கேட்டது. உடனே அங்கே கரும்புகை சூழ்ந்தது. வெடி சத்தம் கேட்ட மறுவினாடியில் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சிதறிக் கொண்டு…

Read More

அமெரிக்க பள்ளிமாணவன் ஆசிரியரை கொன்று தானும் தற்கொலை

Nevada student opens fire at middle school, killing teacher and injuring 2 அமெரிக்காவில் பள்ளி ஆசிரியரை சுட்டுக் கொன்றுவிட்டு மாணவன் ஒருவன் தானும் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திஇருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின்  அருகில் வடமேற்கு நிவாடா என்னும் இடத்தில் ஸ்பார்கஸ் என்ற நடுநிலைப்பள்ளி இருக்கிறது. நேற்று பள்ளி தினவிழா என்பதால் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் ஒருவன் திடீரென தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மற்ற மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். ஆனால் அவன் விடாமல் விரட்டி விரட்டி சுட்டுக்கொண்டிருந்தான். இதைக்கண்ட அப்பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர்…

Read More

மாகாத்மா காந்தி பயன்படுத்திய 60 பொருட்கள் இங்கிலாந்தில் ஏலம்

Mahatma Gandhi relics to be auctioned in Britain   புனே ஏர்வாடா சிறையில் மகாத்மா காந்தி இருந்தபோது உபயோகபடுத்திய ராட்டை வரும் 5ம் தேதி நவம்பரில் இங்கிலாந்தில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டித்தில் கலந்து கொண்டபோது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ராட்டை ஒன்றை பயன்படுத்தினார். பின்னர் அந்த ராட்டையை அமெரிக்க பாதிரியாரான ரெவரன்ட் ஃப்லாய்ட் ஏ பஃப்பருக்கு பரிசாக அளித்தார். அந்த ராட்டை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனமான முல்லக்ஸில் ஏலத்திற்கு வருகிறது. இந்த ராட்டையின் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 59 லட்சத்து 68 ஆயிரத்து 827 ஆகும். முல்லக்ஸில் காந்தி தொடர்பான சுமார் 60 பொருட்கள் ஏலத்திற்கு…

Read More

மனிதர்கள் போல் பல மணி நேரம் பேசி கொள்ளும் மார்மோஸட் குரங்குகள்

Monkeys have manners too! மனிதர்களை போல மார்மோஸட் இனக் குரங்குகள் பல மணி நேரம் பேசிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக அழகாக மற்ற குரங்கு பேசுவதை உன்னிப்பாக கேட்டு பின்னர் பொருமையாக யோசனை செய்து அதற்கு பதில் அளிக்கிறது. “உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து இவை ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்ளும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. மார்மோஸட் குரங்குகளின் உரையாடல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறுகையில்,  இவற்றின் உரையாடல்கள் பறவை, தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோஸட் குரங்குகள் சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன. ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு…

Read More

மேற்குவங்க அரசிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 64 ரகசிய கோப்புகள்

Make public 64 secret Netaji Subhas Chandra Bose files, Bose family urges Mamata Banerjee இந்திய தேசிய ராணுவம் எனும் இந்தியர்களை கொண்ட போராளிகள் படையை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி  போராட்டத்தை நடத்தி, பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read More