coimbatore collector Archana Patnaik ordered by High court Judges to appear in court regarding illegal Lodge building case in Nilgiri கோவை மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அக்டோபர் 29-ஆம் தேதி அவர், நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சமிதியின் தலைவர் திரு.பி.கண்ணபிரான் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொட்டபெட்டா பஞ்சாயத்துக்கு உள்ளிட்ட ஓர் பகுதியில் தேவாராஜ் என்பவர் தனியார் தாங்கும் விடுதி ஒன்றை கட்டுகிறார். அந்த கட்டிடத்தை கட்ட தடைவிதிக்க கோரி அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சணா பட்நாயக் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.…
Read Moreஅங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்டு: புதிய காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி
Anganwadi staff suspended by Kanchipuram collector K. Baskaran for not being present during the duty timing காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் அருகில் பணிக்கு வராமல் இருந்த அங்கன்வாடி பணியாளரை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல பகுதிகளில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சூணாம்பேடு அரசு ஆதிதிராவிடர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கே தங்கியுள்ள மாணவர்கள் பற்றியும், இரவு நேரத்தில் எத்தனை மாணவர்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்கள் என்பது பற்றியும் விடுதி காப்பாளரிடம் விசாரித்தார். மேலும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தரப்படும் உணவு பற்றியும் மேலும் உணவு பொருட்களான பருப்பு ,அரசி, காய்கறிகளின் தரம் பற்றியும் அவர் விசாரணை செய்தார். பின்னர், சூணாம்பேடு ரேஷன்கடைக்கு போய், அங்கே பதிவேடுகளை…
Read Moreவன்புணர்வு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கைது!
Rajasthan minister Babu lal nagar of congress goverment arrested over rape charge on a 35 Year old women who approached him to get a Government Job ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பால்வளம் மற்றும் கதர்துறை அமைச்சராக இருந்த திரு.பாபுலால் நாகர் ஒரு பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் (வற்புறுத்தலின் பேரில்). பின்னர் பாபுலால் நாகரை காங்கிரஸ் கட்சியும் விலக்கி வைத்திருந்தது. 53 வயதாகும் அமைச்சர் திரு.பாபுலால் நாகர், தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக 35 வயது பெண்மணி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்கைப் பதிவு செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த மத்தியப் புலனாய்வு அமைப்பினர் நேற்று விசாரணை நடத்தினார்கள். அதற்கு…
Read Moreபத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது முதலமைச்சர் நீதிமன்றத்தில் மனு!
Bribe for Tamil cinema on the RTI Act. : News in Nakkeeran Gopal தன்னைபற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்ததாக ஒரு திரைப்பட இயக்குனர் மீதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ” கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரிக்கை நக்கீரன் வார இதழில் ‘லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு லஞ்சம் கேட்கும் அமைச்சர் மந்திரி’ எனும் தலைப்பில் ஓர் செய்தி வெளியிடப்பட்டது. அதில் ‘அங்குசம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் இயக்குனர் மனுக் கண்ணனுடைய பேட்டி வெளிவந்திருந்தது. தான் லஞ்ச எதிர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தயாரித்துள்ள தமிழ் திரைப்படத்துக்கு வரி விலக்கு தர அமைச்சருடைய அலுவலக தனிப்பட்ட உதவியாளர் (பி.ஏ) லஞ்சம் கொடுக்க வற்புறுத்தினார்…
Read Moreமனைவியை தெருவில் தாக்கி நிர்வாணமாக்கிய குடிகார கணவன் கைது
police arrested a 30 year old drunken man for stripping and assaulting his 28 year old wife after suspecting her at Bhiwandi in Maharashtra. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் குடிபோதை தலைக்கு ஏறி தனது மனைவியை தெருவுக்கு இழுத்து வந்து நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தினால் தாக்கிய குடிகார கணவன் காவல்துறையினரால் கைது செய்யபட்டான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் பிவான்டியைச் சேர்ந்த குடிகாரன் கமால் அன்சாரி(வயது 30). அவனுக்கு தனது 28 வயது மனைவியின் நடத்தை மேல் திடீரென சந்தேகம் உண்டானது. இந்த நிலையில் குடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அன்சாரி தனது மனைவியை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தான். பின்னர் தெருவிலே, அவரை நிர்வாணமாக்கி கூர்மையான ஓர் ஆயுதத்தை வைத்து அவருடைய உடலில் பல இடங்களில் குத்தி…
Read Moreதவறான மருத்துவ சிகிச்சையினால் பெண் சாவு: ரூ. 6 கோடி நஷ்டஈடு
Rupees 6 crores compensation for Medical Negligence கடந்த 1998ம் ஆண்டு கோல்கட்டா தனியார் மருத்துவமனையில் தவறான மருத்துவ சிகிச்சையினால் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அந்த பெண்ணின் கணவருக்கு 5.96 கோடி ருபாய் நஷ்டஈடு வழங்க உச்ச நீதிமன்றம், மருத்துவம் அளித்த தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாதயா,வி.கோபால கவுடா ஆகியவர்கள் அடங்கிய அமர்வு, மருத்துவமனையினுடைய தவறான மருத்துவ சிகிச்சையால் அனுராதா உயிரிழந்ததற்காக, அவருடைய கணவர் குணால் சஹாவுக்கு 5.96 கோடி ருபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குமாறு உத்தரவு பிரபிக்கபட்டது. இந்த தொகையை எட்டு வாரங்களுக்குள், 6% வட்டியுடன் கொடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். இந்த நஷ்டஈட்டுத் தொகையில் மருத்துவர்கள் சுகுமார் முகர்ஜியும் பல்ராம் பிரசாத்தும் தலா 10 லட்சம் ருபாய் வழங்க வேண்டும்; மற்றொரு…
Read Moreகல்விக்கடனுக்கு லஞ்சம் பெற்ற சென்ட்ரல் பாங்க் கிளை மேலாளர் கைது
Central bank of India Branch manager arrested by CBI for insisting Bribe for Educational Loan ஆண்டிப்பட்டியில் கல்விக்கடன் தர லஞ்சம் பெற்ற வாங்கிய சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் வங்கி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆண்டிப்பட்டி அருகில் இருக்கும் அம்மச்சியாபுரம் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் வங்கியின் மேலாளர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிடுக்கிறார். தனது மகளுடைய பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்காக கடன் தருவதற்கு லஞ்சம் தர வற்புறுத்தியதாக பாலுச்சாமி என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாலுச்சாமி புகாரின் பேரில் சென்னை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மதுரை சிறையில் அடைத்தனர். Central bank of India Branch manager arrested by CBI…
Read Moreபுதுடெல்லியில் திடீர் என்கவுண்டர்!! 3 ரவுடிகள் சுட்டுக்கொலை.
3 Rowdies killed in a police encounter at Delhi புதுடெல்லி: டெல்லியில் 3 பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் அதனால் டெல்லி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. டெல்லி நகரின் மிகப்பிரபலமான பெரிய கூலிப்படைத் தலைவனாக உள்ளவன் நீது தபோடியா. கொலை, கடத்தல், கொள்ளை மற்றும் கற்பழிப்பு என அவன் மீது டெல்லியில் சுமார் 50–க்கும் மேற்பட்ட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. அவனைப் பிடித்த்தால் மிகப்பெரும் ரவுடி கூட்டங்கள் பலவற்றை ஒடுக்கி விடமுடியும் என்ற கண்ணோட்டத்தோடு டெல்லி காவல்துறை ரவுடி நீது தபோடியா பற்றிய தகவல் கொடுப்பவருக்கு 7 லட்சம் ருபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவித்திருந்தனர். எனினும் அவன் காவல்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து தப்பி வந்தான். இந்நிலையில் அவன் டெல்லிக்குள் வந்து பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ஒரு…
Read Moreமாநாட்டை இந்தியா புறக்கணித்தால்!!! இலங்கை தூதர் எச்சரிக்கை
prime minister Manmohan singh may not participate in common wealth summit காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால்!!! இந்தியாவுக்கு இலங்கை தூதர் எச்சரிக்கை இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கையில் நடக்கபோகும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுகையில் தமிழக மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து பிரதமர் மன்மோகன் சிங் நல்ல ஒரு முடிவை எடுப்பார் என்று கூறினார். இதனிடையில் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தொலைக்காட்சி நிருபரின் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களுடைய தற்போதைய நிலை பற்றி எந்த ஒரு…
Read Moreநடிகர் ஜீவாவின் பெயரில் பொய்யான டுவிட்டர் தளம்-பரபரப்பான சினிமா களம்
Twitter account for tamil cini actor jeeva நடிகர் ஜீவா தற்பொழுது நடித்து வரும் படம் ‘என்றென்றும் புன்னகை’. இதில் அவருடன் திரிஷா சந்தானம் மற்றும் வினை நடித்து வருகின்றனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை சன் குழுமம் பெற்றுவிட்டதாகவும் அதனை நவம்பர் 29ஆம் தேதி சன் பிக்சர் வெளியிட போவதாகவும் ஜீவாவின் பெயர் கொண்ட டுவிட்டர் இணைய தளத்தில் திடீர் என செய்தி பரவியதால் திரை உலகில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. அந்த இணைய தளம் ஜீவாவின்னுடையது இல்லை என அவர் தரப்பு செய்திகள் வெளி வர இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஏற்க்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியும் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் பெற்று உள்ளதால் இச்செய்தியை கண்ட அனைவரும் பரபரப்பு ஆகினர் பின்னர் ஜீவாவின் தரப்பில் இருந்து அது பொய்யான இணைய முகவரி…
Read More



