புலிகள் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு திடீர் தடை

Tamil tiger leader Prabakaran Birthday celebration banned  in srilanka even after 4 years of  his dealth கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இறந்த விடுதலைப் புலிகளின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாவீரர் தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு இன்று தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்பாக நீடிக்கிறது. எனவே, புலிகளைக் கொண்டாடும் எந்த நிகழ்ச்சியும் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. “பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவித்தல் மற்றும் பரப்பும் பணிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டால் சட்டப்படி அது…

Read More

நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

Violence Against Women : November 25th International Day for the Elimination of Violence Against Women நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் இப்படியான தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அத்துடன் இன்றைய…

Read More

வாகன ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி வரை பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதக தகவல்

Rs 22,000 crore bribe paid on roads every year   அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்டுதோறும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அதிகாரிகளுக்கு ரூ.22,000 கோடி வரை லஞ்சம் கொடுப்பது தெரியவந்துள்ளது.  லூதியானா, டெல்லி, அகமதாபாத், இண்டோர், மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் சுமார் 1,200 டிரக் ஓட்டுனர்களிடம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் சாலையில் செல்லும் டிரக், கன ரக வாகன ஓட்டுனர்களிடம் இருந்து போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் பெறும் லஞ்சத் தொகை மட்டும் ரூ.22,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் செல்லும் டிரக் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களின் 77 சதவீதம் பேர் தங்களுக்கு போலீசாரால் தொல்லை ஏற்படுவதாகவும், 73 சதவீதம் பேர் போக்குவரத்து துறை…

Read More

சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

More than 11000 Children killed in Syria Civil War சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரையில் 11,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுபோரில் 11,420 குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் குண்டு வெடிப்புகளில் சிக்கிகொண்டு கொல்லப்பட்டதாகவும், ஏனையோர்  துப்பாக்கியால் சூட்டு கொல்லப்பட்டதாகவும் லண்டன் நகரத்தை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போரின் ஆரம்பத்திலிருந்து சுமார் 6,500க்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லபட்டிருக்கலாம் என ஐக்கிய .நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜூலை முடிவில் ஐ.நா. சபை வெளியிட்ட தகவலின் படி அங்கே போரின் காரணமாக சுமார் 1 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபட்டிருந்தது.  இந்நிலையில் தற்போது குழந்தைகள் பலியாவது மிக அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை…

Read More

தோல்வியால் அடுத்த படத்தை சிறிய பட்ஜெட்டில் படம் இயக்க முடிவு-செல்வராகவன்

director selvaragavn  decided to make Lowe budget action movie செல்வராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. சமீபத்தில் வெளியான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மண்ணை கவ்வியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்ட்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக மனம் மாறினாரா? இயக்குநர் செல்வராகவன் என்று நினைக்கும் வகையில், தனது அடுத்தப் படத்தை சிறு பட்ஜெட்டில் எடுக்க செல்வராகவன் முடிவு செய்துள்ளாராம். செல்வராகவன், ஆரம்ப காலத்தில் சிறு முதலீட்டுப் படங்களே எடுத்து வந்தார். அப்படங்களும் பெரும் வெற்றிப் பெற்றது. ஆனால், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு அவர் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க ஆரம்பித்தார். தற்போது இரண்டாம் உலகம் படத்தின் தோல்வி, செல்வாவை யோசிகக் வைத்துள்ளது போலியிருக்கிறது. அதனால், தான்…

Read More

நடிகர் திலகம் சிவாஜியின் உருவ சிலையை அகற்ற உயர்நீதி மன்றம் ஒப்புதல் தருமா?

சென்னை ஐகோர்ட்டில் பி.என். சீனிவாசன் 2006–ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாசன் தாக்கல் செய்த மனுவுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் கே. சவுந்தரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறிஇருப்பதாவது:– காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து…

Read More

வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதி

வட சென்னை மக்கள் ஒரு வகை கொசுவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாக சர்வே ஒன்று தெரிவித்துள்ளது. ஏடிஸ், அனோபிலஸ் ஆகியவை கடித்தால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்குன்குனியா என நோய்கள் பரவும். ஆனால் இந்த ‘ஆர்மிகெரஸ்’ கடித்தால் நோயெல்லாம் பரவாமல் வலி பின்னி எடுத்து விடுமாம். ஆர்மிகெரஸ் கொசுக்களால் வட சென்னை பகுதி பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளதாக இந்திய பொது சுகாதார அமைப்பின் தமிழக பிரிவின் புள்ளி்விவரத் தகவல் தெரிவிக்கிறது. இவ்வகை கொசுக்கள் வட சென்னையின் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, மின்ட், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளில் இந்த வகை கொசுக்கள் பெருமளவில் உலா வந்து கொண்டுள்ளனவாம். செப்டிக் டேங்குகள், குப்பைக் கூளங்கள், தேங்கிக் கிடக்கும் மழை நீர் போன்ற இடங்களில்தான் இவை உற்பத்தியாகின்றன. வட சென்னையில் இந்த வகை இடங்களுக்கும், சுகாதாரக் குறைபாட்டுக்கும்…

Read More

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கொடிஸ்வரர்களும் கிருமினல்களும் போட்டியிடுகின்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் முதல் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரசாரம் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளதால் காங்கிரஸ், பா.ஜ.கவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2087 பேர் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 733 பேர் களத்தில் உள்ளனர். இவர்களது வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் 346 பேர் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தலா 199 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. இதில் பா.ஜ.க.வின் 199 வேட்பாளர்களில் 150 பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை போல காங்கிரசின் 199 வேட்பாளர்களில் 139 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் 190 வேட்பாளர்களில் 35 பேர் கோடீசுவரர்களாக உள்ளனர். கோடீசுவரர் வேட்பாளர்களில் காங்கிரசை சேர்ந்த விஸ்வேந்திர…

Read More

சாமானியர்களை புறம் தள்ளும் சட்டமும் காவல் துறையும்-ஸ்ருதிக்கு நீதி ஜோதிக்கு எங்கே?

மும்பையில் நடிகை ஸ்ருதியை தாக்கிய மர்மநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் ஏடிஎம் திருடனை ஆந்திர காவல் துறையினர் வலை போட்டு தேடி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை மர்மநபர் ஒருவர் தாக்க முயன்றபோது அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டான். மற்றொருபுறம் பெங்களூரில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி என்ற பெண்ணை மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இச்சம்பவமானது சிசிடிவி கமெராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளியை பிடிப்பதற்கு காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரே நாளில் நடைபெற்ற இந்த…

Read More

சத்தம் ஏதும் இல்லாமல் ஹெலிகாப்டர்கள்-ஜெர்மன் நிறுவனம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் பறக்கும் ஹெலிகாப்டரை ஜெர்மன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பொதுவாக ஹெலிகாப்டர்கள் புறப்படும் போதும், பறக்கும் போதும் கடுமையான அதிர்வுகளையும், சத்தத்தையும் எழுப்புகின்றன. இதனால் பறக்கும் தூசு, சத்தம் போன்றவற்றால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றது. சத்தம் ஏதும் இல்லாமல், அதிர்வுகள் இன்றி பறக்கும் ஹெலிகாப்டரை ஜேர்மனியின் இ-வாலோ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் என்ஜினில் வாலோகாப்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு உலக நாடுகளிடம் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் இந்த ஹெலிகாப்டரை விமானத்தை போன்று செங்குத்தாக விண்ணில் பாய்ந்து, அதே போன்று தரையிறங்கும் தன்மை கொண்டது. இதன் முதல் சோதனை பயணம் கடந்த 17ம் தேதி ஜேர்மனியில் உள்ள கரிஷ்ருக் பகுதியில் வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. German Company Continues Development Of Personal Electric Helicopter Proof-Of-Concept Aircraft Won…

Read More