ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று காலை சவூதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான நிலைய என்ஜினியர்கள் கதவு சரி செய்தனர். இதையடுத்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டது. இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
இலங்கை மனித உரிமை மீறல்கள் : இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு
human rights violations against the Tamils in Sri Lanka’s war against the LTTE கொழும்பு: மனித உரிமை மீறல்கள் குறித்த பலத்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுக்கள், கனடா, இந்தியா, மற்றும் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு இடையே காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு போகவி்ல்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தடபுடலாக ஏற்பாடோடு கொழும்பு சென்றுள்ளார். கனடா நாட்டின் சார்பாக ஈழ தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்களை கண்டித்து இந்த காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணித்து விட்டது. அதே போல் மொரீஷீயஸ் பிரதமர் தான் போகவில்லை என்று அறிவித்து…
Read Moreசென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு : மறுபடியும் முதல்ல இருந்தா ???
Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai சென்னை: சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் மின்வெட்டை தமிழக மின்சார வாரியம் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாதகாலமாக இருந்து வந்த மின்வெட்டு பிரச்சினை, கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ காற்றின் பயனாக காற்றாலைகளில் தேவையான அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக மின்வெட்டு பிரச்னை ஓய்ந்தது. எனினும் கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் மின்வெட்டு பிரச்சினை ஆரம்பித்துள்ளது. Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai தினசரி ஒரு மணி நேரம் என துண்டிக்கபட்டிருந்த மின்சாரம் தற்சமயம் மென்மேலும் உயர்ந்து நகர்ப்புறங்களில் தினசரி 4 மணி நேரம்…
Read Moreஉடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பிரேஸ்லெட்
A Thermoelectric Bracelet To Maintain a Comfortable Body Temperature இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று…
Read Moreசென்னையில் தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் தற்கொலை மிரட்டல்
railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building சென்னையிலுள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரெயில்வே சட்டதிட்டத்தின்படி தமிழரசன் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மேலதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். ஆனால் யாரும் இவரது கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவர் சில தினங்களாக விரக்தியடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை 11.30…
Read Moreநடுரோட்டில் பிணத்தை புதைத்த கிராம மக்கள்
manali pudunagar villagers : protesting by keeping the dead body in road and manali pudunagar villagers and demanded for a proper road for grave yard மணலிபுதூர் அருகே சுடுகாடுக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் ரோட்டில் பிணத்தை புதைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மணலிபுதுநகரை அடுத்த வெள்ளங்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையரகத்தின் மூலம் மயானப்பாதை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சுடுகாடு பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பாதையில் புதர் மண்டியும் சில இடங்கள் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் இறந்தவர்கள் உடல்களை குண்டும் குழியுமான பாதையில் புதர்களின் வழியே கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. இது…
Read Moreநெஞ்சுவலி என்றாலே மாரடைப்பா ??. தவறான கணிப்பு
Heart disease health centre நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்பு தான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய…
Read Moreசென்னை நடைபாதையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கொத்தனாரின் தலையில் கல்லை போட்டு கொலை
Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பங்களா காவலாளிகள் பலபேரை கல்லை தூக்கிப்போட்டு கொன்ற சைக்கோ கொலையாளி மீண்டும் அந்த கொடூர வேலையை ஆரம்பித்துள்ளானா என்று அச்சம் எழுந்துள்ளது. சென்னை நடைபாதையில் படுத்து உறங்கிகொண்டிருந்த கொத்தனாரின் தலையில் பெரிய கல் ஒற்றை போட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை அந்த ‘சைக்கோ’ மனிதனின் வேலையா என்பது குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai கொத்தனார் மணி (வயது 60), இவர் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் தெருவில்…
Read Moreபேஸ்புக்கில் இணையதள பெண்கள் பாதுகாப்பு கமிட்டி
Women Protection committe has been formed to save FB women from misusing their profile images இப்பவும் தமிழகத்தில் சங்க காலம் தான் நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எல்லாவற்றிற்கும் சங்கம் வந்து விட்டது. அந்தவகையில் லேட்டஸ்டாக உருப்படியான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. அதுதான் இணையதள பெண்கள் பாதுகாப்புக் குழு. பேஸ்புக் பக்கங்களில் பெண்களின் புரபைல் படங்களையும் அவர்கள் போடும் படங்களையும் தவறாக பயன்படுத்துவோரைத் தட்டிக் கேட்கும் குழுவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் படங்களை வக்கிரமாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தக் குழுவை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ள பகிர்வு… உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம். இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு…
Read Moreசிறந்த மேலாண்மை முறையில் குப்பையிலிருந்து செல்வதை குவிக்கலாம்
Wealth from human waste in India can be achieved by best method of modern waste management, waste produced by city people is better than any other source, இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 60 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல நகராட்சிகள் தம்மூரிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை பொறுக்குவோரைத் தாராளமாக நடமாட…
Read More