நடுரோட்டில் பிணத்தை புதைத்த கிராம மக்கள்

manali pudunagar villagers : protesting by keeping the dead body in road and manali pudunagar villagers and demanded for a proper road for grave yard

protesting by keeping the dead body in road and manali pudunagar villagers and demanded for a proper road for grave yard

மணலிபுதூர் அருகே சுடுகாடுக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் ரோட்டில் பிணத்தை புதைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மணலிபுதுநகரை அடுத்த வெள்ளங்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையரகத்தின் மூலம் மயானப்பாதை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக சுடுகாடு பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பாதையில் புதர் மண்டியும் சில இடங்கள் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டு இருந்தன.

இதனால் இறந்தவர்கள் உடல்களை குண்டும் குழியுமான பாதையில் புதர்களின் வழியே கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஜாய்ஸ் என்பவர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்களும் கிராம மக்களும் எடுத்து சென்றனர்.

protesting by keeping the dead body in road and manali pudunagar villagers and demanded for a proper road for grave yard

ஏற்கனவே சுடுகாட்டுக்கு சாலைவசதி இல்லாத நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் குண்டும் குழியுமான பாதையும் தண்ணீரில் மூழ்கி கிடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பெண்ணின் உடலை நடு ரோட்டிலேயே குழிதோண்டி புதைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் உதயகுமார், துணை செயலாளர்கள் தலித் மாதவன் பிரகாசவளவன், வேதகிரி சைமன், தமிழரசன் உள்பட பலர் இருந்தனர்.

protesting by keeping the dead body in road and manali pudunagar villagers and demanded for a proper road for grave yard

Related posts