உத்திரப்பிரதேச சிறை சாலைகளில் 60% விசாரணை கைதிகள்

Prisoners in Uttar Pradesh prisons : 60 percent of Prisoners in Uttar Pradesh state Jails in india are not Convicted of Crime இந்தியாவின் அதிகப்படியான சிறைவாசிகளைக் கோண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம் ஆகும். சிறையில் உள்ள 81.027 கைதிகளில் 60 சதவீதத்தினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படாதவர்கள் என்ற அடிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது.  உத்திரப்பிரதேச சிறைகளில் இருக்கும் கைதிகள் எண்ணிக்கை 81,027 ஆனால் சிறைகளின் மொத்த கொள்திறனே 48,298தான். மேலும் இதில் 55,460 பேர் விசாரணைக் கதிகள்! அதாவது வெறும் விசாரணை என்ற பெயரில் சிறையில் அதிககாலம் பலர் உள்ளனர். காஜிபூர் சிறையில் உள்ள 594 கைதிகளில் 532 பேர் விசாரணைக் கைதிகள். மாவ் என்ற சிறையில் 494 கைதிகளில் 402 பேர் விசாரணைக் கைதிகள். பல்ராம்பூர் சிறையில் 284 கைதிகளில் 243 பேர் விசாரணைக்…

Read More

தாய்லாந்தில் திருநங்கை உலக அழகு ராணி போட்டி: பிரேசில் அழகி தேர்வு

Brazilian Won Miss International Transgender Contest held at Thailand தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்த புகழ்பெற்ற திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் பிரேஸில் நாட்டை சார்ந்த திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுமார் 17 நாடுகளிலிருந்து 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். வருடாவருடம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இந்த திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய 17 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர். அவர்களது அறிவுக் கூர்மை, உடல் மற்றும் முக வசீகரம், ஆகியவையின்  அடிப்படையில் இந்த அழகு ராணி பட்டத்துக்கு…

Read More

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் புகுந்த வாலிபர் திடீர் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

Gunman aged 23 years shot the airport security officials in Los angeles international airport. His name is  Paul A Ciancia அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிரபல சர்வதேச விமான நிலைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 23 வயது வாலிபர் ஒருவர்  திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒரு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபாட்ட  23 வயதுடைய பவுல் அந்தோணியோ சியான்சியா என்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அவர் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த கொலைவேறிசெயல் குற்றத்திற்கு மரண தண்டனை கிடைக்கும் என காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள்.  Gunman aged…

Read More

மேகலாயா அசாம் எல்லையில் தீவிரவாதிகள் வெறிச்செயல் 6 பேர் பலி

Six innocent people killed in a militant attack at a Remote village  called Gendabari located in Assam Megalaya Border   அசாம் – மேகாலய எல்லையில் உள்ள ஓர் கிராமத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை அசாமில் இயங்கும் தடைசெய்யப்பட்ட ‘காரோ தேசிய லிபரேஷன் ஆர்மி’ என்ற தீவிரவாத அமைப்பினர் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொலைவெறி தாக்குதல், அசாம் – மேகாலய எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெண்டாபாரி எனும் கிராமத்தில் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டமாக கொண்டாடிகொண்டிருந்த பொதுமக்கள் மீது நவீன ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 6 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொலைசெய்யப்பட்டதாகவும்,…

Read More

சென்னையில் வாணவெடிகளால் பல இடங்களில் தீ விபத்து

Diwali crackers lead to fire accidents in various places in chennai, mostly Rocket crackers attacked the hut created in terrace தீபாவளி கொண்டாட்டத்தில் அடுத்தவர்கள் என்னென்ன பாதிபபுக்கு உள்ளாகிறார்கள் அடுத்தவர்களுக்கு என்ன நேர்ந்தது. எத்தனை பேரை தன் விடும் ராக்கெட் பாதிக்கும் என்று எண்ணாமல் கண்மூடித் தனமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தான் தீபாவளிப்பண்டிகை என்று ஆகி விட்டது. இந்நிலையில் தீபாவளியன்று பெரிய உயிர்ச்சேதங்கள் இல்லையென்றாலும் வனத்தில் சென்று பறந்து வெடிக்கும் ராக்கெட் மத்தாப்பினால் சில இடங்களில் தீயணைப்பு வண்டிகளுடைய சேவை சென்னையில் தேவைப்பட்டது. ராக்கெட் மத்தாப்பு மற்றும் வானவெடிகளால் குடிசை வீடுகள், பேப்பர் குடோன்கள் தீ பற்றி எரிந்துள்ளன. தீயணைப்பு துறைக்கு இந்த தீபாவளி தீவிபத்துக்கு மட்டும் மொத்தம் 76 அழைப்புகள் வந்துள்ளன. எல்லா அழைப்பிற்கும் தீயணைப்பு தண்ணீர் வண்டிகள்…

Read More

சென்னையில் 'குடி'மகன் கார் பொதுமக்கள் மிது மோதியதில் 3 பேர் பலி

Drunken drive killed 3 people including a policeman by driving his car in Platform Near Marina Light house at chennai சென்னையில் இருக்கும் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் குடித்து விட்டு தறிகெட்டு காரை ஓட்டி மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தீபாவளியன்று நடந்துள்ளது. மெரீனா காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகில் சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று தறிகெட்டு ஓடிய கலங்கரை விளக்கத்தை அடுத்து உள்ள பேருந்தி நிறுத்தத்தில் புகுந்தது அந்தக் கார். அடுதடுத்து நிறுத்தபட்டிருந்த கார்கள் மீதும் மோதி பின்னர் அங்கே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் பயங்கரமாக மோதியது அந்தக் கார். இந்த விபத்தில் காமராஜர் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர் சேகர் (வயது 43), மைலாப்பூர் சுனாமி குடியிருப்பு…

Read More

தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அழுத்த 'நோடா' பட்டன் : தேர்தல் ஆணையம் உத்தரவு

Election commission ordered to fix None of the Above’ (NOTA) button in the Electronic Voting Machine (EVM), any voter can exercise the option of negative voting and reject all candidates as unworthy of being elected. தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாத வாக்காளர்கள், அவரது விருப்பமின்மையை பதிவு செய்ய, வாக்குப்பதிவு இயந்திரத்தில் புதிய செவ்வக வடிவ கட்டத்தில் ‘நோடா’ பட்டன் ஒன்றை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள், வாக்குப்பதிவு வழயாக அதை பதிவு செய்ய எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (நோடா) எனும் பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்திலும், வாக்குச்சீட்டிலும் சேர்த்து கொள்ளும் படி உச்ச நீதிமன்றம்…

Read More

சிதம்பரம் அருகே காதலியை சந்திக்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை

Young man killed near chidambaram while going to meet his lover near her residence to receive the gift for the occasion of Diwali near Chidambaram சிதம்பரம் அருகில் நள்ளிரவு நேரத்தில் பெண் தோழியை காண சென்ற வாலிபர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 3 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஒரு குற்றவாளியை தேடிவருகிறார்கள். தீபாவளியன்று தனது காதலி பரிசு ஒன்று தருவதாக கூறியதையொட்டி போன வாலிபர் படுகொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டதில் உள்ள சிதம்பரம் இடைத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(22). இவருக்கு, சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் நட்பு மற்றும் காதல் இருந்தது. நேற்று தீபாவளி பண்டிகை என்பதால்…

Read More

நைஜீரிய கிறிஸ்தவ தேவாலய விழா நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாப சாவு

roman catholic festival : 30 people were dead at Nigeria in a roman catholic festival stampede நைஜீரியாவினுடைய மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நிக்போர் நகரில் டொமினிக் கத்தோலிக கிறிஸ்தவ பாதிரியார்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கத்தோலிக கிறிஸ்தவ தேவாலயத்தில் இரவு முழுவதும் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) அனம்பரா மாகாண கவர்னர் விழாவில் பங்கேற்க அங்கு வந்தார். அப்பொழுது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 17 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயர வாய்ப்பு உண்டு என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாக புதிய நம்பத்தகுந்த…

Read More

தீ வதந்தியால் இரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தில் ஓடிய பயணிகள் மீது இரயில் மோதி 7 பேர் பலி : ஆந்திராவில் பயங்கரம்

11 Alappuzha Dhanbad Express passengers were killed when they ran in the track in which another train crossed from opposite direction and runs over passengers in Andhra Pradesh இரயிலில் தீ பிடித்ததாக பரப்பப்பட்ட வதந்தியால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விட்டு இரயில் நின்றவுடன் கீழே குதித்து இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் ஓடிய போது எதிரில் வந்த மற்றொரு இரயில் மோதி 11 பேர் பரிதாபமாக நசுங்கி செத்தனர். கேரளாவில் உள்ள ஆலப்புழா எனும் ஊரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் எனும் ஊருக்கு, தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில்  தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் , ஒடிசா, மற்றும் பீகார் வழியாக ஜார்கண்ட் சென்றடையும். ஆலப்புழாவில் இருந்து கிளம்பிய  தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில்…

Read More