சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

More than 11000 Children killed in Syria Civil War சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரையில் 11,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுபோரில் 11,420 குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் குண்டு வெடிப்புகளில் சிக்கிகொண்டு கொல்லப்பட்டதாகவும், ஏனையோர்  துப்பாக்கியால் சூட்டு கொல்லப்பட்டதாகவும் லண்டன் நகரத்தை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போரின் ஆரம்பத்திலிருந்து சுமார் 6,500க்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லபட்டிருக்கலாம் என ஐக்கிய .நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜூலை முடிவில் ஐ.நா. சபை வெளியிட்ட தகவலின் படி அங்கே போரின் காரணமாக சுமார் 1 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபட்டிருந்தது.  இந்நிலையில் தற்போது குழந்தைகள் பலியாவது மிக அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை…

Read More

5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்

11,820 custodial deaths in 5 years லாக்அப் சாவுகளை தடுத்தல், விசாரணைக்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை உண்டாக்குதல் ஆகியன சம்பந்தமாக டி.கே.பாசு என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 27 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சிங்வி ஆஜராகி கூறியதாவது:- குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் காவல்துறையின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லாக்அப்…

Read More

நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..

Now, flying robot to save humans from drowning முன்பு ஒவ்வொரு நாளும் என்பது இப்பொழுது மணிதுளிக்கு மணித்துளி  மனிதன் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது. அது இன்று இன்றியமையாததாக இருக்கிறது. தண்ணீரில்  மூழ்கி, உயிருக்கு போராடுபவர்களை மின்னல் வேகத்தில் பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்த்தால் இயங்கும் ஓர்  ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில்…

Read More

இந்திய வங்கிகளில் யாருடையது என்று தெரியாது கிடக்கும் 3,652 கோடி ரூபாய்

fund lying unclaimed at banks in india : Rs 3,652 crore   2012- டிசம்பர் ஆண்டின் நிலவரத்தின் படி, இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகளில் 3,652 கோடி ரூபாய் யாருடையது என்று தெரியாமல் பல்வேறு வங்கிக் கணக்குகளில் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ருபாய் 714 கோடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது: இந்த பட்டியலின் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது. இரண்டவது Â இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது. இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் பல பேர் தங்களுடைய சேமிப்பு கணக்குகளை துவக்கி விட்டு அவைகளை தேவையான பராமரிப்பு ஏதும் செய்யாமல் விட்டு விடுகின்றனர். மேலும் பல்வேறு…

Read More

அமெரிக்கவில் வசித்து வந்த இந்திய பெண்ணை காரால் மோதி 5 கி.மீ. இழுத்து சென்று கொலை

Indian-American woman dragged for 5 KMs, dies அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய பெண்ணும் அவரது கணவரும் ஒரு அமெரிக்க வாலிபரால் தாக்கப்பட்டனர். இதில், அந்த வாலிபரின் காரில் சிக்கிகொண்ட இந்திய பெண் சுமார் 5 கி.மீ. இழுத்து செல்லப்பட்டதால், பரிதாபமாக பலியானார்.   காஞ்சன்பென் பட்டேல் என்னும் 58 வயது பெண்ணை அமெரிக்காவை சேர்ந்த மோசஸ் அக்லோக் என்னும் 22 வயது இளைஞர் அவரது காரில் இடித்து, தனது வாகனத்தில் சுமார் 5 கி.மீ. இழுத்துச் சென்றதில் அப்பெண் பலியானார்.  அமெரிக்காவின் மாசசுசெட்ஸில் உள்ள ஒரு மோட்டலுக்கு மோசஸ் அவரது நண்பரோடு வந்து தங்கியுள்ளார். அங்கு அண்மையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான காஞ்சன்பென் பட்டேலும் அவரது கணவரும் வேலை பார்த்து வந்தனர்.   இந்நிலையில் மோசஸ் தங்கியிருந்த அறைக்கு வாடகை கொடுக்காதது தொடர்பாக…

Read More

அமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை

Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self அமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை ஒருவர் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலராடோவை சேர்ந்த 22 வயதான மெர்ரிக் மேக்கோய் என்ற நபருக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர் ஒன்றரை வயது பெண் குழந்தையை மெர்ரிக்கிடம் விட்டுவிட்டு வீட்டைவிட்டே வெளியேறினார். இதனால் மனமுடைந்துப்போன மெர்ரிக், அவர் குழந்தையுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார், பேஸ்புக்கில், அவரது மனைவிக்கு ஒரு செய்தி தெரிவித்திருந்தார். அதில், ‘நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என நான் உன்னிடம் கூறியிருக்கிறேன்’ என குறிப்பிடபட்டிருந்தது.  இதற்கு பிறகு ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்த மெரிக்கின் வீட்டில்…

Read More

பெல்ஜியத்தில் ஒரு வருடமாக இறந்து போன கணவரின் சடலத்தோடு வாழ்ந்த மூதாட்டி

Widow Sleeps With Dead Husband Decomposing Corpse for a Year After his Death in belgium பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அவரது கணவரின் சடலத்தோடு ஒரு வருட காலம் வாழ்ந்துவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புரூசெல்ஸ்ன் புறநகர் பகுதியில் வயதான தம்பதி வசித்து வந்தனர்.  79 வயதான கணவர் மார்சல் ஆஸ்துமா காரணமாக இறந்துவிட, அவரது மனைவி அவர் கணவரின் மரணம் குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தராத காரணத்தினால், வீட்டின் உரிமையாளர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், வீட்டில் இருப்போரை விசாரிக்க வந்த காவல்துறையினர் அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இறந்துப்போன கணவரின் உடலை அவரது மனைவி படுக்கை மீது போட்டுவைத்திருந்தார். இதனால் அதிர்ச்சி…

Read More

இன துவேசம் செய்யப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ31,25,500 லட்சம் நஷ்ட ஈடு: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

Sikh man to get $50,000 in religious discrimination case தாடி வைத்திருந்ததன் மூலம் சீக்கியர் என அடையாளம் கண்டு கொண்ட அமெரிக்கக் கார் நிறுவனம் ஒன்று, வேலை வேண்டி வந்தவருக்கு தாடியை எடுத்தால் வேலை தருவதாக நிபந்தனை விதித்தது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட சீக்கியர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ31,25,500 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சேர்ந்த சீக்கியர் குர்ப்ரீத் கெர்ஹா. இவர் நியூஜெர்சி நகரில் உள்ள கார் டீலரிடம் வேலை வேண்டிச் சென்றார். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற கெர்ஹாவுக்கு, அந்த நிறுவனம் ஒரு முக்கிய நிபந்தனை விதித்தது. அதாவது, அவர், தனது தாடியை நீக்கிவிட்டு உடனடியாக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்பது தான் அது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கெர்ஹா, தன் மத சம்பிரதாயங்களை மீறியவகையில் தாடியை எடுக்க…

Read More

உலகில் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை : உலக வங்கி ஆய்வறிக்கை

250 crore of people in this world live without toilet facility சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஐ.நா. சபை சார்பில் நவம்பர் 19-ம் தேதி கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுமார் 100 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 53% வீடுகளில் கழிப்பறை இல்லை… இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை வசதி தொடர்பாக இந்தியக் குழந்தைகளிடம் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், முதலாம் வயது பருவத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதியைப்…

Read More

ஆப்பிரிக்க நாட்டு போதை பொருள் கடத்தல்காரன் மும்பையில் பலி.. வயிற்றுக்குள் மறைத்துவைத்திருந்த மருந்து வெடித்தது

Drug pill bursts in tummy, kills smuggler ஆப்பிரிக்க நாடு போதை பொருள் கடத்தல் காரன் மும்பையில் பலி.. வயிற்றுக்குள் மறைத்துவைத்திருந்த மருந்து வெடித்தது   : மும்பை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டவரின் வயிற்றில் அவர் கடத்தி வந்திருந்த போதைப்பொருள் கேப்சியூல் வெடித்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே பலியானார். ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர். அவர்கள் இருவரும் போதை மருந்து கடத்தி வருவதாக மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இருவரின் உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை.  பிறகு அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், அவர்கள் தோள் பட்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தாக தெரிவித்தார்கள். ஆனால் அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் வயிற்றில் போதை மருந்து கடத்தி…

Read More