Abolishing Empowered Group of Ministers by Modi. நரேந்திர மோடி, இந்தியப் பிரதமராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வரிசையில் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவைகளை கலைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 21 அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் ஆகியவை கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகளை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுவதற்கு முன், சில முக்கிய அமைச்சர்களைக் கொண்ட சிறு குழு ஒன்று அது பற்றி பரிசீலித்து பரிந்துரைகளை வழங்குவது முந்தய அரசின் வழக்கத்தில் இருந்தது. அமைச்சகங்களில் முடிவெடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும், அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கவும் இது வழிவகுக்கும் என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்கள் குழுக்கள்…
Read MoreCategory: அரசியல் சிறகுகள்
பள்ளி பாடப்புத்தகங்களில் என் வாழ்க்கை வரலாற்றை சேர்க்கக்கூடாது – பிரதமர் நரேந்திர மோடி
Chapter on Prime Minister Narendra Modi in school textbooks : Prime Minister Narendra Modi has opposed the move of some BJP-ruled state governments to include a chapter on his life in school textbooks. பள்ளி பாடப்புத்தங்களில் பிரதமர் நரேந்திர மோடியினுடைய வாழ்க்கை சரித்திரத்தை சேர்ப்பதற்கு சில மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. இதற்கு நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘நரேந்திர மோடியினுடைய வாழ்க்கை போராட்டம்’ எனும் தலைப்பில் பள்ளிப்பாடபுத்தகங்களில் சேர்ப்பதற்கு குஜராத் மாநிலம், மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகள் முடிவு செய்திருந்தன. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நரேந்திர மோடியின் இளமைக்காலம் முதல் அரசியல் பயணங்கள், மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்கள், வாழ்க்கையில் இவர் பிரதமந்திரி வரையில் சென்ற நிலை பற்றி பள்ளி பாடம் அமைக்க திட்டமிட்டிருந்தனர். இந்த…
Read Moreபிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் தமிழக, கேரள, கர்நாடக முதல்வர்கள்
Karnataka, Kerala Cong CMs to skip Modi’s swearing-in, Jaya keeps up suspense மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப் போவது இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணிப்பதோடு பிரதிநிதியையும் அனுப்ப மாட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலைகள் இருப்பதால் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும்…
Read Moreஒடிஷா மானிலத்தில் போண்டா பழங்குடியினத்தில் இருந்து முதல் எம்.எல்.ஏ. தேர்வு!!
Bonda tribe sends its 1st MLA to Assembly இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடியினத்தவரில் இருந்து முதலாவது எம்.எல்.ஏவாக தம்பரு சிசா தேர்வ்சு செய்யப்பட்டுள்ளார். ஒடிஷா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் ‘போண்டா ஹில்ஸ்” என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு போண்டா எனப்படும் ஆதிபழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இப்பகுதியில் மட்டுமே போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர். இப்பழங்குடி இனப் பெண்கள் கழுத்து நிறைய பெரிய வளையங்கள், காலுக்கு மேலான துண்டு போன்ற கீழாடை, உடல் முழுக்க கயிறு, பாசிகளால் மறைக்கப்பட்ட மேலாடை, தலையில் சணல் வளையம் என ஆதிகால பண்பாட்டை இன்னமும் பின்பற்றுகிறவர்களாக போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். போண்டா பழங்குடியின திருமணமுறை மிகவும் வித்தியாசமானது. சிறுவர்களைத்தான் இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். போண்டா ஹில்ஸ் பகுதி இப்போது மாவோயிஸ்டுகளின்…
Read Moreநாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள 186 உறுப்பினர்கள் மீது குற்றவழக்குகள்
நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16 ஆவது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 34% ஆகும். 14ஆவது மக்களவையில் இந்த எண்ணிக்கை 24% ஆகவும், 15ஆவது மக்களவையில் 30% ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு, மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவில் மட்டும் 98 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 பேரில் 8 பேர் மீதும், அதிமுக வைச் சேர்ந்த 37 பேரில் 6 பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில்…
Read Moreஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி ???. 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடக்கம்???
Former Central Minister G K Vasan Plans to starts a New political Party சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுக்காவிட்டால் “தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்” எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவ முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் வற்புறுத்தியும் தான் போட்டியிட முடியாது என கூறி மறுத்துவிட்டார். அதனால் காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்தது. அந்த அதிருப்தியை தணிக்கும் வகையில் கட்சிக்காக சூறாவளி சுற்று பயணம் செய்து கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும் அது எதுவும் பலன் தரவில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், இப்போது…
Read Moreஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்
Abnormal Corruption and Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது, ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் 50–க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எவருமே எதிர் பார்க்காத இந்த படு தோல்வி அந்த கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதுவும் காங்கிரசுக்கு சாதகமான இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் இந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் கூறியுள்ளார்கள். மேலும் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு , சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்கள். எனினும் அதை…
Read Moreபத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை..
DMK Cadres : Journalists Attacked by DMK Cadres infront of DMK treasurer M K Stalin பத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை.. பத்திரிகை நிருபர்கள் திமுக தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக சார்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திமுக அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து, அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். அப்பொழுது பத்திரிகை நிருபர்கள் சிலர் மூ க ஸ்டாலின் மீது தவறான விமர்சனம் வைத்ததாக நினைத்துக்கொண்டு, திமுகவினர் சிலர் அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி திமுக அறிக்கையில் அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் சில ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆயினும், பத்திரிகை நிருபர்கள் மீது நடைபெற்ற…
Read Moreபா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு.,
RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு., புதுடில்லி:மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடும் எந்தவிதத்திலும் இருக்காது என பா.ஜ.க., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் அரசாங்க நிர்வகாக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடும் எனும் பேச்சுக்கே இடமில்லை. அரசு செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடாது. நாங்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர்களே. மரியாதையை நிமித்தமாக நான் இங்குள்ள மூத்த தலைவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன். இது எங்களுடைய வழக்கமாக செயல்பாடுகளில் ஒன்று தான். மேலும் ஆர். எஸ்.எஸ்., இயக்கம் ஒரு தேசபற்றை வளர்க்கும் தேசிய நலன் அமைப்பு. இந்த இயக்கத்தில், நம் நாட்டினுடைய நலன்கள் பற்றி ஆலோசனை வழங்கி அதன் மூலம்…
Read Moreஇந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் 29 ஆண்டுகளுக்கு பிறகு அதிக வாக்குகள் பதிவு
India has set a new record in voter turnout in the lok sabha elections 2014. இந்திய வரலாற்றில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு 1984-85ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானது தான இதுவரை அதிகபட்ச வாக்கு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நடந்த 1984-85ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த தேர்தலில்…
Read More