சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"

“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…

Read More

ஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்

நடுவர் மற்றும் சமரச (திருத்த) மசோதா, 2021 ஐ மக்களவை நிறைவேற்றியது File name: parliament-ls.jpg

Abnormal Corruption and  Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது, ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் 50–க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எவருமே எதிர் பார்க்காத இந்த படு தோல்வி அந்த கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதுவும் காங்கிரசுக்கு சாதகமான இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் இந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் கூறியுள்ளார்கள். மேலும் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு , சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்கள். எனினும் அதை…

Read More

பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு.,

RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு., புதுடில்லி:மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடும் எந்தவிதத்திலும் இருக்காது என பா.ஜ.க., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் அரசாங்க நிர்வகாக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடும் எனும் பேச்சுக்கே இடமில்லை. அரசு செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடாது. நாங்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர்களே. மரியாதையை நிமித்தமாக நான் இங்குள்ள மூத்த தலைவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன். இது எங்களுடைய வழக்கமாக செயல்பாடுகளில் ஒன்று தான். மேலும் ஆர். எஸ்.எஸ்., இயக்கம் ஒரு தேசபற்றை வளர்க்கும் தேசிய நலன் அமைப்பு. இந்த இயக்கத்தில், நம் நாட்டினுடைய நலன்கள் பற்றி ஆலோசனை வழங்கி அதன் மூலம்…

Read More

தஞ்சை பா.ஜ.க வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன், வை.கோ, அன்புமணி கடும் கண்டனம்

BJP Thanjavur Candidate attacked and prevented from canvassing in a Muslim area has evoked serious condemnations from the leaders of NDA in Tamilnadu. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். BJP Thanjavur Candidate attacked and prevented from canvassing in a Muslim area has evoked serious condemnations from the leaders of NDA in Tamilnadu. a clash erupted between the SDPI and BJP cadre and 4 cars were damaged and one more was pushed into a dry…

Read More

ஆடிட்டர் ரமேஷ் கொலை: 4 பேர் கைது

4 accused arrested in auditor ramesh murder case நெல்லை,ஜூலை28:ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், சேலத்தில் பாஜக மாநில பொது செயலர் ஆடிட்டர் கடந்த 19ம் தேதி  மரவேனரி கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் கொலை குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில்  தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய சிபிசிஐடி டிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதில், கொலை வழக்கு குற்றவாளியாக மதுரையை சேர்ந்த…

Read More

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை

velliappan murdered in vellore  திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 :  வேலூர் : இந்துமுன்னணி மாநிலச் செயலாளர்  சு.வெள்ளையப்பன் வேலூரில் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டுள்ளார். இன்று மதியம் 3.15 மணியளவில்  வேலூர் பேருந்து நிலையம் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் அரசு உடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளையன் இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்த்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனை கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன…

Read More

"தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்

EC issues show cause notice to Gopinath Munde இந்திய நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற கோபிநாத் முண்டே, 2009 தேர்தலில் எட்டு கோடி ரூபாய் செலவு செய்து தான் தேர்தலில் வென்றதாக அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவரது தேர்தல் செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கோபிநாத் முண்டே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த தேர்தல் செலவின அறிக்கையில் தனக்கு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகியிருந்ததாக கணக்கு காட்டியிருந்தார். வரம்பு மீறி தேர்தல் செலவு செய்தமைக்காக மஹராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கோபிநாத் முண்டேவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. கடந்த வியாழனன்று மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த…

Read More

பெங்களூர் பா.ஜ. அலுவலகம் வெளியே குண்டு வெடிப்பு, 4 பேர் காயம்

பெங்களூர் புதன் 17 ஏப்ரல் 2013: பிஜேபி மல்லேஸ்வரம் அலுவலகம் அருகே நிறுத்திவைக்க பட்ட கார் திடீரென வெடித்தது. புகையுடன் கூடிய பயங்கர சத்தத்துடன் வெடித்தால் பொதுமக்கள் பீதி அடைத்தனர் பிஜேபி அலுவலகம் அருகே குண்டு வெடிப்புக்கு சரியான கரணம் என்ன என்று அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும் இது கார் காஸ் cylinder விபத்தாக இருக்ககூடும் எனவும் சில தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன… bangalore bomb blast bjp

Read More