சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்ட விரோதம் : உச்சநீதி மன்றம் தீர்ப்பு..

No Caste based census : Supreme court Judgement புதுடெல்லி, நவம்பர் : 07– சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்டவிரோதமானது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஓர் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிய ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்தபட வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்று சென்னை உயர் நீதி மன்றம் சாதிய வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதி மன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதி…

Read More

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…

Read More

கலைஞர் டிவி க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம்… ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு

A Raja, DMK MP Kanimozhi and others under section 120-B (criminal conspiracy) of IPC புதுடெல்லி, அக்.31: கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது மனைவி தயாளு அம்மாள் உள்பட பத்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாளு அம்மாளை ரூ.5 லட்சத்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருவர் உத்தரவாதம் ஆகியவற்றின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்தார். கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்…

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் விரைவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து : சவுதி மன்னர் அப்துல்லா எச்சரிக்கை

ISIS jihadists : Europe and USA are the next targets of Terrorist group ISIS Jihadists ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிடில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இந்த நாடுகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அடுத்த இலக்காக இருக்கும் என சவுதிஅராபிய மன்னர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.. நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கான சந்திப்பில் சவுதி அராபிய மன்னர் அப்துல்லா இது பற்றி கூறியதாவது, நமது நட்பு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை புறக்கணித்தோமேயானால், அடுத்த மாதமே அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதற்கடுத்த மாதம் அமெரிக்காவிற்கும் குறி வைத்து தாக்க துவங்குவார்கள். இது உறுதி ஆகவே நாம் அனைவரும் இப்பொழுதே விழித்துக்கொண்டு அவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். தீவிரவாததிற்கு எல்லைகள் கிடையாது. அவர்களுடைய செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியில்…

Read More

இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பம் :- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி…

Finance Minister Arun Jaitley presented the Finance Ministry’s report card yesterday (Aug-30-2014) for the last 100 days since the NDA govt came to power, as well as the recent initiatives for development taken by the Finance Ministry. பா ஜ க வின் அரசு பொறுப்பேற்ற பின் கடந்த மூன்று மாதங்களின் அதிரடி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளால் எல்லா துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர்.திரு.அருண் ஜெட்லி கூறியுள்ளார். தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூன்று மாத நடவடிக்கைகள் பற்றி பத்திரிக்கை நிருபர்களிடம் சனிகிழமையன்று அவர் பேட்டியளித்தார். இதில் சமீபத்திய புள்ளிவிவரப்படி நமது நாட்டின் முன்னேற்றமும், சாதகமான எதிர்காலப்போக்கும் திருப்தி அளிப்பதாகவும் அருண்ஜெட்லி கூறினார். முதல் 100 நாட்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளின் பலன் வெகுவிரைவில்…

Read More

கள்ள காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்…

Aam Aadmi Party member Chandra Mohan Sharma drama of ‘burnt to death’ in his own car at Greater Noida 3 months ago ended up after been caught alive in Bangalore.. பெங்களூர்: கள்ளக் காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடி தலைமறைவாக இருந்து குடித்தனம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி முக்கிய பிரமுகர் திரு.சந்திர மோகன் ஷர்மாவை பெங்களூருவில் காவல் துறையினர் நேற்று கைது செய்தார்கள். திரு.சந்திர மோகன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகராவார். திரு.சந்திர மோகன் ஷர்மா,  தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக அந்த கட்சியில் பொறுப்பில் உள்ளவர். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன டெல்லி அருகில் இருக்கும் ரேட்டர் நொய்டாவில் இவருடைய காரில் எரிந்து…

Read More

தமிழகத்தில் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது : – மத்திய இணையமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன்

BJP minister Pon.Radha Krishnan said today that NDA alliance in tamilnadu is very strong enough and this will successfully continue in 2016 Tamilnadu assembly election. சென்னை : – தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்தின் பிறந்த நாளையோட்டி வாழ்த்து தெரிவிக்க, மத்திய இணை அமைசசர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு சென்றார்கள். அதன் பின், வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியில் வந்த, மத்திய இணை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி சார்பாகவும், பா.ஜ.க. சார்பாகவும், தனிப்பட்ட என் சார்பாகவும் தே.மு.தி.கத்தின் தலைவர் திரு.விஜயகாந்தை நேரில் சந்தித்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன் என கூறினார்.…

Read More

சென்னையில் இடிந்து விழுந்த11 மாடிகட்டிட உரிமையாளர் மனோகரன்அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயம்

Documents related to Manoharan, owner of collapsed 11 storey building in Moulivakkam was disappeared. சென்னையில் இடிந்து விழுந்த, ‘பிரைம் சிருஷ்டி’ நிறுவனத்தின்11 மாடி கட்டிட உரிமையாளர் மனோகரன் அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் தேடுகின்றானர். இரு நபர் குழு: 11 மாடி கட்டிடம் கடந்த மாதம், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், 61 பேர் பலியாயினர். இது தொடர்பாக, கட்டிட உரிமையாளர் மனோகரன் மற்றும்அவர் மகன் முத்து ஆகியோரை கைது செய்துள்ளனர். மனோகரன் மதுரையைச் சேர்ந்தவர் மற்றும் அவரது நிறுவனம் துவங்கியதும் மதுரையென்பதால், அவரின் விவரங்களை சேகரிக்கும் பணி மதுரை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் தலைமையில், இருவர்குழு நியமிக்கப்பட்டு, பிரைம் சிருஷ்டி நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை, ஆய்வு செய்தனர். அங்கு வீடு வாங்கியவர்கள்…

Read More

மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?

  Railway line between Avadi and Sriperumbudur – Will it get renewed in Modi’s Period? மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா? -என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள் பொதுமக்கள், பயணிகள் மற்றும் தொழில்நிறுவணங்கள். ஸ்ரீபெரும்புத்தூர், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் பல தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அமைந்துள்ளன. தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சாலைகள் வயலாக மட்டுமே அனுப்ப படுகிறது. இப்பொருட்கள் ரயில்களில் அனுப்ப வேண்டும் என்றால் சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை எடுத்துச்சென்று, பிறகு சரக்கு ரயில்களில் ஏற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அங்குள்ள தொழில் நிறுவனங்கள் இப்பொருட்களை ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்தே நேரடியாக எடுத்துச்செல்ல தனி ரயில் பாதை அமைத்து தருமாறு கோரிக்கையளித்தனர். ரூ. 600 கோடி செலவில் புதிய பாதை ரயில்வே நிர்வாகம்,…

Read More

நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்

நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்   Hundreds of Congress Men Paid Homage to late Prime Minister Rajiv Gandhi மே 23, 2014 அன்று காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பலர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவகத்தில் ஒன்று கூடி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் செயர்குழு தலைவர் திரு. B. S. ஞாணதெசிகன் மற்றும் அவரது தொண்டர்கள் ராஜீவ் காந்தி இறந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மற்றும் திரு. B. S. ஞாணதெசிகன் அவர்கள் மறைந்த இராணுவ அதிகாரியின் மனைவி திருமதி. இந்து ரெபிகா வர்கீஸ்க்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்கினார். திரு. B. S. ஞாணதெசிகனுடன் முன்னால் மத்திய அமைச்சர்கள்  திரு. V.…

Read More