சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

More than 11000 Children killed in Syria Civil War சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரையில் 11,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுபோரில் 11,420 குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் குண்டு வெடிப்புகளில் சிக்கிகொண்டு கொல்லப்பட்டதாகவும், ஏனையோர்  துப்பாக்கியால் சூட்டு கொல்லப்பட்டதாகவும் லண்டன் நகரத்தை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போரின் ஆரம்பத்திலிருந்து சுமார் 6,500க்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லபட்டிருக்கலாம் என ஐக்கிய .நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜூலை முடிவில் ஐ.நா. சபை வெளியிட்ட தகவலின் படி அங்கே போரின் காரணமாக சுமார் 1 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபட்டிருந்தது.  இந்நிலையில் தற்போது குழந்தைகள் பலியாவது மிக அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை…

Read More

நடிகர் திலகம் சிவாஜியின் உருவ சிலையை அகற்ற உயர்நீதி மன்றம் ஒப்புதல் தருமா?

சென்னை ஐகோர்ட்டில் பி.என். சீனிவாசன் 2006–ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாசன் தாக்கல் செய்த மனுவுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் கே. சவுந்தரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறிஇருப்பதாவது:– காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து…

Read More

வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதி

வட சென்னை மக்கள் ஒரு வகை கொசுவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாக சர்வே ஒன்று தெரிவித்துள்ளது. ஏடிஸ், அனோபிலஸ் ஆகியவை கடித்தால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்குன்குனியா என நோய்கள் பரவும். ஆனால் இந்த ‘ஆர்மிகெரஸ்’ கடித்தால் நோயெல்லாம் பரவாமல் வலி பின்னி எடுத்து விடுமாம். ஆர்மிகெரஸ் கொசுக்களால் வட சென்னை பகுதி பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளதாக இந்திய பொது சுகாதார அமைப்பின் தமிழக பிரிவின் புள்ளி்விவரத் தகவல் தெரிவிக்கிறது. இவ்வகை கொசுக்கள் வட சென்னையின் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, மின்ட், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளில் இந்த வகை கொசுக்கள் பெருமளவில் உலா வந்து கொண்டுள்ளனவாம். செப்டிக் டேங்குகள், குப்பைக் கூளங்கள், தேங்கிக் கிடக்கும் மழை நீர் போன்ற இடங்களில்தான் இவை உற்பத்தியாகின்றன. வட சென்னையில் இந்த வகை இடங்களுக்கும், சுகாதாரக் குறைபாட்டுக்கும்…

Read More

சாமானியர்களை புறம் தள்ளும் சட்டமும் காவல் துறையும்-ஸ்ருதிக்கு நீதி ஜோதிக்கு எங்கே?

மும்பையில் நடிகை ஸ்ருதியை தாக்கிய மர்மநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் ஏடிஎம் திருடனை ஆந்திர காவல் துறையினர் வலை போட்டு தேடி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை மர்மநபர் ஒருவர் தாக்க முயன்றபோது அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டான். மற்றொருபுறம் பெங்களூரில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி என்ற பெண்ணை மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இச்சம்பவமானது சிசிடிவி கமெராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளியை பிடிப்பதற்கு காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரே நாளில் நடைபெற்ற இந்த…

Read More

5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்

11,820 custodial deaths in 5 years லாக்அப் சாவுகளை தடுத்தல், விசாரணைக்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை உண்டாக்குதல் ஆகியன சம்பந்தமாக டி.கே.பாசு என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 27 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சிங்வி ஆஜராகி கூறியதாவது:- குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் காவல்துறையின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லாக்அப்…

Read More

நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..

Now, flying robot to save humans from drowning முன்பு ஒவ்வொரு நாளும் என்பது இப்பொழுது மணிதுளிக்கு மணித்துளி  மனிதன் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது. அது இன்று இன்றியமையாததாக இருக்கிறது. தண்ணீரில்  மூழ்கி, உயிருக்கு போராடுபவர்களை மின்னல் வேகத்தில் பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்த்தால் இயங்கும் ஓர்  ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில்…

Read More

தமிழ்நாடு மின் மிகை அல்ல… மின் "பகை' மாநிலம் : தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு…

DMK Chief M.Karunanithi criticized Jayalaitha Government of Tamilnadu that state of tamilnadu became “Minpagai” a enemy of Electricity against a previous statement of CM saying that Tamilnadu will become “Minmigai state” “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றம் பெறவில்லை, அதற்க்கு மாறாக ‘மின் பகை’ மாநிலமாக தான் மாறி இருக்கிறது’ என தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக ஞாயிறன்று வெளியிட்ட அவரது அறிக்கை பின் வருமாறு:- அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் உள்ளதோ இல்லையோ, மின் உற்பத்தி பாதிப்படைந்த செய்தி ஒவ்வொரு தினமும் வருகிறது. வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் நிலக்கரி கொண்டுச்செல்லும் பாதையில் துவாரம் ஏற்பட்டு, அலட்சிய போக்கால், அதனை சீர் செய்யாமல் விட்டதால் கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச்…

Read More

இந்திய வங்கிகளில் யாருடையது என்று தெரியாது கிடக்கும் 3,652 கோடி ரூபாய்

fund lying unclaimed at banks in india : Rs 3,652 crore   2012- டிசம்பர் ஆண்டின் நிலவரத்தின் படி, இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகளில் 3,652 கோடி ரூபாய் யாருடையது என்று தெரியாமல் பல்வேறு வங்கிக் கணக்குகளில் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ருபாய் 714 கோடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது: இந்த பட்டியலின் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது. இரண்டவது Â இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது. இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் பல பேர் தங்களுடைய சேமிப்பு கணக்குகளை துவக்கி விட்டு அவைகளை தேவையான பராமரிப்பு ஏதும் செய்யாமல் விட்டு விடுகின்றனர். மேலும் பல்வேறு…

Read More

காஞ்சிபுரத்தில் ராகிங் கொடுமைக்கு மருத்துவ கல்லூரி மாணவன் பலி

senior students Ragging lead to Medical collage student suicide in hostel  சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது, காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன். இவரது மனைவி சாவித்திரி ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு 4 மகன்கள் 3வது மகன் முகில்ராஜ்குமார் (18). இவர் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் மீனாட்சி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாண்டு படித்தார், முதலாண்டு மாணவர்களுக்கான கல்லூரி விடுதியில் இடமில்லை என்பதை காரணம் காட்டி, 3ம் ஆண்டு மாணவர்கள் 5 பேருடன் முகில்ராஜ்குமார் தங்க வைக்கப்பட்டார்.விடுதியில் சேர்ந்த 2வது நாளில் இருந்தே முகில் ராஜ்குமார் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. senior students Ragging lead to Medical collage…

Read More

அமெரிக்கவில் வசித்து வந்த இந்திய பெண்ணை காரால் மோதி 5 கி.மீ. இழுத்து சென்று கொலை

Indian-American woman dragged for 5 KMs, dies அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய பெண்ணும் அவரது கணவரும் ஒரு அமெரிக்க வாலிபரால் தாக்கப்பட்டனர். இதில், அந்த வாலிபரின் காரில் சிக்கிகொண்ட இந்திய பெண் சுமார் 5 கி.மீ. இழுத்து செல்லப்பட்டதால், பரிதாபமாக பலியானார்.   காஞ்சன்பென் பட்டேல் என்னும் 58 வயது பெண்ணை அமெரிக்காவை சேர்ந்த மோசஸ் அக்லோக் என்னும் 22 வயது இளைஞர் அவரது காரில் இடித்து, தனது வாகனத்தில் சுமார் 5 கி.மீ. இழுத்துச் சென்றதில் அப்பெண் பலியானார்.  அமெரிக்காவின் மாசசுசெட்ஸில் உள்ள ஒரு மோட்டலுக்கு மோசஸ் அவரது நண்பரோடு வந்து தங்கியுள்ளார். அங்கு அண்மையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான காஞ்சன்பென் பட்டேலும் அவரது கணவரும் வேலை பார்த்து வந்தனர்.   இந்நிலையில் மோசஸ் தங்கியிருந்த அறைக்கு வாடகை கொடுக்காதது தொடர்பாக…

Read More