In Delhi rape case, The sentencing postponed to Friday: The Judge Declared. பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடை பெற்ற டெல்லி மாணவி கொலை வழக்கில் தீர்ப்பு வெள்ளி அன்று தள்ளி வைத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் வழக்கு நடந்ததாலும் நாட்டின் அமைதியை கருதியும் நீதிபதி வழக்கின் தீர்ப்பை வெள்ளி கிழமை ஒத்திவைத்தார், அபூர்வமான வழக்கு என்பதால் இரு தரப்பு வாதமும் வெகு நேரம் சென்றத்தாலும், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாதிடும் வழக்குரைசர்கள் தங்கள் சார்பு செய்திகளை எடுத்து வைத்தனர். ஒருவர் பேருந்து மட்டுமே ஒட்டியதாகவும் ஒருவர் கற்பழிப்பு மட்டுமே செய்ததாகவும் ஒருவருக்கு குடும்பம் மற்றும் குழைந்தைகளின் நலன் கருதி மரண தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வெகு நேரம் வாதிட்டதால் வழக்கு நீண்ட நேரம் சென்றது. இருப்பினும் நால்வர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது…
Read Moreஈரானில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல் 44 பேர் பலி 39 பேர் படுகாயம்
Iran bus accident , 44 killed, 39 injured in collision ஈரானின் கோம் நெடுஞ்சாலையில், 2 பேருந்துகள் அதிவேகமாக ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டு தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் சிக்கி 44 பயணிகள் பரிதாபமாக கொல்லபட்டனர். படுகாயமடைந்த 39 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு, 11 மணியளவில் இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் – கோம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதற்கு முன் சென்றுகொண்டிருந்த காரில் மோதியது, அதனைத் தொடர்ந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் மீதும் அதிவேகமாக மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில் பயணம்…
Read Moreசூப்பர்மேன் உருவம் பொறித்த நாணயங்கள் கனடா நாட்டில் வெளியீடு
Canada issues coins for Superman’s 75th சூப்பர்மேன் கதாபாத்திரம், சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதைகளில் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் வகையில் கனடா நாட்டில் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் சூப்பர்மேன் உருவம் பொறித்த7 புதிய நாணயங்களை ராயல் கனடா மின்ட் நேற்று வெளியிட்டது. சூப்பர்மேன் கதாபாத்திரமானது கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. உண்மை மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு போராடும் விதமாக சூப்பர்மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் 75 ஆண்டு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை வெளிப்படுத்தும் வகையில் நாணயங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில கடந்த 1938ம் ஆண்டு வெளியான கதைகளில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. மற்றும் தி நியூ…
Read Moreகேதர்நாத் கோவிலில் மீண்டும் இன்று வழக்கமான பூஜைகள் துவக்கம்
In symbolic opening for Kedarnath temple, a 4-hour puja today புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 86 நாட்களுக்குப் பின்னர் கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜைகள் தொடங்கியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இமாலய சுனாமியால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவிலை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்கள், கடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் கோவிலுக்குஎந்த வித சேதமும் ஏற்படவில்லை. எனினும் சடலங்கள் குவிந்திருந்த காரணத்தினாலும், கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாலும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. மலைப்பாதை சீரமைக்கப்படாத காரணத்தால் ஹெலிகாப்டர் மூலமாக 24…
Read Moreமணப்பெண் மாப்பிளைக்கு தாலி கட்டி புதியசடங்கு அறிமுகம்
New matrimonial wedding method in tamilnadu முதன் முறையாக தமிழ்நாட்டில் மணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலியை கட்டி ஒரு புதிய சடங்கை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த புதுமையான திருமணம் பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ.ச.தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணியம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக்கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாக ராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும் , சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் வெளிவந்த திரைப்பாடலை இயற்றியவர் பிரேம் ஆனந்தின் கொள்ளு தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ். இவர் மிக பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர் சுதந்திர போராட்ட தியாகி. பெரியப்பா எழுத்தாளர் ச.தமிழ்செல்வன். ஒரு சித்தப்பா எழுத்தாளர் கோணங்கி. கடைசி சித்தப்பா சங்கீத அகாடமியில் தேசிய விருது வாங்கிய ச.முருகபூபதி. இவர்களின் பின்னணியில் வந்த பிரேம் ஆனந்த் கொள்கைக்கு ஏற்ப சாதிமறுப்பு காதல் திருமணம்…
Read Moreஅக்காவை கருணை கொலை செய்த தம்பி காவல் துறையில் சரண்
ஈரோட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது அக்கா அவதிப்படுவதை பார்க்க சகிக்காத தம்பி அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஈரோடு காசிபாளையம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் வீதியில் வசித்தவர் பர்வதம்(75). அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பர்வதத்துக்கு தமிழ்செல்வன், அமுதன், ராஜு ஆகிய மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். புஷ்பாவை பர்வதத்தின் தம்பி மூர்த்தி(70) தான் திருமணம் செய்து கொண்டார். பர்வதம் தனது தம்பியின் ஆதரவில் இருந்து வந்தார். முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பர்வதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் அவதிப்படுவதைப் பார்க்க சகிக்காத மூர்த்தி அக்காவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரின் உடலை அருகில் உள்ள தனது தோட்டத்தில் புதைத்துவிட்டு தாலுகா போலீசில் மூர்த்தி சரணடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் பர்வதம் வீட்டுக்கு…
Read Moreஜெயலளித்தாவின் புகை படத்தை கை துண்டால் மறைத்த மத்திய அமைச்சர்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி துண்டால் மறைத்து காரில் பயணம் செய்துள்ளார் மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தமிழக அரசின் காரில் பயணம் செய்தபோது அதில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் காங்கிரஸ் கட்சி துண்டால் மறைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டைக்கு வரும் அமைச்சர்களை அழைத்துச் செல்ல தமிழக அரசு கார் உள்ளது. அந்த காரின் முன் இருக்கைகளின் முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று உள்ளது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் புதுக்கோட்டை செல்லும் போதெல்லாம் மாநில அரசின் காரை தான் பயன்படுத்துவார். இந்நிலையில் புதுக்கோட்டைக்கு நேற்று சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மிரட்டுநிலைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரைக்குடி செல்ல தமிழக அரசின் கார் கொண்டு வரப்பட்டது. அந்த காரின் முன் இருக்கைகளுக்கு முன்பு…
Read Moreமழையில் மிதக்கும் சென்னை- திணறும் சென்னை மாநகராட்சி
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையல் 2நாட்கலாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து உள்ளது. மழை காரணத்தால் சென்னை தண்ணீரில் மிதக்கிறது எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அரசு இருந்ததால் வடபழனி போரூர் போன்ற நகரங்கள் தண்ணீரில் மிதக்கிறது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சாலையின் நடுவே தண்ணீர் வேகமாக ஓடுவதால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது என வடபழனி மக்கள் வருத்தப் படுகின்றனர். வருடம் வருடம் மழை நேரத்தில் சாலையில் நீர்தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது were ever in chennai rain watter only
Read Moreசென்னையில் கன மழை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
schools and colleges closed today சென்னை மாவட்டம் முழுதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. நேற்று இரவில் இருந்து சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் , திருவள்ளூர் , வேலூர் மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் அவர் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார். English summary: schools and colleges closed today Due to heavy rain schools and colleges closed today in chennai district. From last night heavy rain in chennai. Holiday for schools and colleges in thiruvallur and kanchipuram districts.
Read Moreபூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல மக்கள் விருப்பம்
People wish to go to Mars from Earth செவ்வாய் கிரகத்தில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க மார்ஸ் ஒன் என்ற அமைப்பு ஒரு திட்ட குழுவை நியமித்துள்ளது . இவர்கள் 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்பது பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் .அதற்கான செலவு வர்த்தக அனுசரணைகள் மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் மூலம் பெறப்படவுள்ளன.இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் வகையில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்துவதற்கு உண்டான தொழில்நுட்பம் இதுவரை இல்லை என்றும் விண்வெளி அமைப்புகள் கூறுகின்றன. இது நாள் வரை செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலன்களே அனுப்பப்பட்டுள்ளன என்றாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா இன்னும் இருபது ஆண்டுகளில் தமது விண்வெளி ஆய்வாளர்களை அங்கு அனுப்பும் திட்டம் உள்ளது என்று தெரிவித்தனர் . செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர்…
Read More



