கோவையில் நகைக்கடை அதிபர் ரூ.100 கோடி மோசடி

A Jewellery owner was arrested for cheating Rs 100 cr in Coimbatore கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில்,…

Read More

பள்ளிக்கூடத்தில் ரேக்கிங் 6-ம் வகுப்பு பயின்றுவந்த சிறுமி பலி

Angry parents ransack Kolkata school after bullied student dies மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் ஓயிண்டிரிலா தாஸ் என்ற மாணவியை சீனியர் மாணவிகள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். கடந்த வாரம் இவ்வாறு அவரை ராகிங் செய்த மாணவிகள், 100 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால், அவரை பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பிறகுதான் அவரை திறந்து வெளியே விட்டுள்ளனர். நீண்ட நேரம் தனி அறையில் சிக்கியதால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடல் அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய டாக்டர்கள் திங்கட்கிழமை மாணவியை டிஸ்சார்ஜ் செய்தனர்.…

Read More

கணவரை மலை மேலிருந்து தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்

Honeymoon murder: woman charged with pushing husband off cliff அமெரிக்காவில் தேனிலவு சென்ற ஒரு புதுப்பெண் தனது கணவரை மலை மேலிருந்து தள்ளி கொலைச் செய்துள்ளார். திருமணமாக ஒரு வாரகாலமே ஆன நேரத்தில், ஜோர்டான் என்ற 22 வயது பெண்ணும், கோடி என்ற 25 வயது ஆணும் தேனிலவிற்கு செல்ல திட்டமிட்டு சென்றனர். இந்நிலையில், திருமணம் செய்துக்கொண்டது குறித்து ஜோர்டனுக்கு மாற்று கருத்து இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அன்று இரவு கிளேசியர் தேசிய பூங்காவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு முன் ஒரு நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய ஜோர்டான், நான் இது குறித்து எனது கணவரிடம் பேசவுள்ளேன், இன்று இரவுக்குள் நான் உனக்கு பதிலளிக்காவிட்டால் ஏதோ விபரீதமாக நடந்துள்ளது என புரிந்துக்கொள் என அனுப்பியிருக்கிறார். அன்று இரவு அந்த இடத்தில் ஜோர்டனுக்கும், கோடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.…

Read More

18 ஆண்டுகளாக இறந்த மகனின் உடலை பதபடுத்தி பாதுகாக்கும் தாய்

Women mummified son’s body with alcohol for 18 years 18 ஆண்டுகளுக்கு முன் ஜியார்ஜியாவில் இறந்த தனது மகனின் உடலைஅவரது தாய் இன்று வரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார். 1995-ஆம் ஆண்டு ஜியார்ஜியா நாட்டில் இறந்த தனது 22 வயது மகன் ஜோனி பகரத்ஸேஸின் உடலை கடந்த 18 வருடங்களாக அவரது தாய் சியுரி வரத்ஸ்கேலியா பாதுகாத்து கொண்டு வருகிறார். ஜோனி பகரத்ஸே கடந்த 18 வருடங்களுக்கு முன்பு, தனது 22 ஆம் வயதில் மரணமடைந்தார். இது வரை அவரது மரணதிற்குண்டன காரணம் அறியப்படவில்லை. எனினும் மகனை பிரிவதற்கு மனம் இன்றி தாய் திருமதி சியுரி வரத்ஸ்கேலியா, அவரது சடலத்தை பதபடுத்தி வீட்டிலேயே பாதுகாத்து வருகிறார்.   இதுகுறித்து தெரிவித்த அந்த தாய், என மகன் மிகவும் நல்லவன், எனது பேரன் அவனது தந்தையை இத்தகைய தோற்றத்தில் பார்க்கவேண்டுமென்ற ஆசை என் மகனுக்கு…

Read More

ஹாங்காங்கில் மிகப்பெரிய வைரக்கல் ஏலம்

World Biggest Diamond to be Auctioned in Hong Kong! ஆப்பிரிக்க நாட்டில் ஒரு புகழ்பெற்ற வைரச்சுரங்கத்தில் 2011ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய அளவு வைரக்கல் கிடைத்தது.  இதன் எடை மட்டுமே 299 காரட். வெள்ளை நிறத்தில் உள்ளதை கொள்ளை கொள்ளும் வகையில் பட்டைத் தீட்டப்பட்டு 118.28 காரட்டாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய வைரக்கல் ஹாங்காங்கில் உள்ள சோத்பீ என்ற மையத்தில் வருகிற 2013 அக்டோபர் மாததில் ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஏலத்தில், அந்த வைரக்கல் சுமார் ரூ.200 கோடியில் இருந்து ரூ.238 கோடிவரை ஏலம் போக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 101.73 காரட் எடை கொண்ட வைரம் கடந்த ஆண்டு 180 கோடிக்கு ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அந்த ஏலம் தான் அதிக அளவில் போய் சாதனை புரிந்தது. எனினும் தற்போது உள்ள இந்த…

Read More

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் மோதல்:100பேர் பலி! 50பேர் படுகாயம்!

100 killed in Central African Republic clash மத்திய ஆப்பிரிக்க  குடியரசு நாட்டு அதிபராக பிரான்காய்ஸ் போசிசீ இருந்தார். கடந்த 2013 மார்ச் மாதம் மிகேல் ஜோடோடியா, அதிபர் பிரான்காய்ஸ் போசிசீ அரசை கவிழ்த்தார். அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி மிகேல் ஜோடோடியா இடைநிலை அரசின் புதிய அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இது சதி போன்று உள்ளது என கூறி கண்டனம் எழுந்து,  பிரான்காய்ஸின் ஆதரவாளர்களுக்கும், மிகேலின் ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் ஏற்பட்ட பயங்கர  மோதல்களில் 100க்கு மேற்பட்டோர் பலியாகினர், 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல்களினால் இந்நாட்டின் தலைநகர் பாங்குய்யின் வடமேற்கு பகுதியான பௌகா மற்றும் பொஸ்ஸாங்கோ உள்ளிட்ட பல பகுதிகள் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. முன்னால் அதிபர் பிரான்காய்ஸின்  ஆதரவாளர்கள் தங்களது  தலைவரை மறுபடியும் அதிபராக ஆக்க…

Read More

ஜேம்ஸ்பாண்ட் திரைபடத்தில் பயன்படுத்திய கார் ரூ.5.47கோடிக்கு ஏலம்

James Bond submarine car sells for more than five crore Indian Rupees   பிரபல ஜேம்ஸ்பாண்ட் திரை படத்தில் பயன்படுத்தப்பட்டஏலம் விடப்பட்டுள்ளது.  அந்த   நீர்மூழ்கிக் கார் 865,000 டாலருக்கு ஏலம் போனது.  இங்கிலாந்தை சார்ந்த   பிரபல நடிகர் ரோஜர் மூர், கடந்த 1973ஆம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்த அதனை படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. அவற்றில் 1977-இல் தயாரிக்கப்பட்ட வெற்றி படங்களில் ‘தி ஸ்பை ஹூ லவ்ட் மீ’ என்ற திரைபடமும் ஒன்று. இந்த திரைபடத்தில் கதாநாயகன் ரோஜர் மூர், பெண் ஜேம்ஸ்பாண்ட் பார்பரா பாக்கும், நீர்மூழ்கிக் கார் ஒன்றை பயன் படுத்தி ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் காட்சி மிகவும் பிரபலமானது . இந்த காட்சிக்காக ஒரு வெள்ளை…

Read More

திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உணவில் குட்டி பாம்பு

Dead snake found in food served at Kerala hospital canteen கேரளாவில் உடல் நலகுறைவாக இருந்த தனது மகனை ஒரு பெண்மணி,  திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்குள்ள மருத்துவமனை உணவு விடுதியில் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்த அவர், அந்த உணவு பாக்கெட்டை (பச்சைப்பட்டாணி கறி) திறந்து பார்த்ததில் குட்டி பாம்பு ஒன்று அதில் செத்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம்  இது சம்பந்தமாக புகார் செய்தார்.  பின்னர் பொதுமக்கள் தகவல் அறிந்து அந்த உணவு விடுதி முன் கூடி போராட்டம் நடத்தினர். உடனே உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் புகார் செய்ததால் அவர்கள் விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி, அந்த உணவு விடுதி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்னர்…

Read More

8 வயது சிறுவன் முஷீர் கான் லீக் தொடர் கிரிக்கெட் விளையாடி சாதனை

Musheer Khan is now the youngest cricketer to play Kanga League Sports கங்கா லீக் தொடரில் தனது 8 வயதில் இடம் பெற்று சாதித்துள்ளான் முஷீர் கான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் (எம்.சி.ஏ.,), 1948 முதல் நடத்தப்படுகிறது கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது). இத்தொடரில் 10 வயதில் (2007ல்) விளையாடி சாதித்தவர் சர்ப்ராஸ். இதை முறியடித்துள்ளான் இவரது சகோதரர் முஷீர் கான். தனது 8 வயதில் ஸ்போர்ட்ஸ்பீல்டு கிரிக்கெட் கிளப் அணியில் இடம் பெற்று தற்போது விளையாடுகிறார். ராஜவாதி அணிக்கு எதிரான முதல் போட்டியில், பேட்டிங்கில் ஒரு மணி நேரம் களத்தில் நின்று 42 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தான் முஷீர். ஸ்போர்ட்ஸ்பீல்டு அணியின் முதல் இன்னிங்ஸ் (87) ஸ்கோரை துரத்திய ராஜவாதி அணி 40 ரன்னில் சுருண்டது. 6 ஓவர்கள் பவுலிங்…

Read More

சீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட்

Empty Plastic bottles pay your metro rail pass சீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட் பெற்று ரயில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் திட்டத்தை சீனாவின் பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்திருக்கிறது. சீனாவில் ரயில் பயணிகள் காலி தண்ணீர் பாட்டில்ளை  கண்ட இடங்களில் வீசி  சுற்றுசுழலில் ஏற்படும் மாசை கட்டுபடுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் சேகரித்த காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு மறு சுழற்சி முறையை பயன்படுத்தி புதிய பிளாஸ்டிக்  பாட்டில்களை தயார் செய்து பயன்படுத்த சீனா பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி காலி தண்ணீர் பாட்டில்கள் சேகரிக்கும் இயந்திரங்கள் தற்பொழுது இரண்டு ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் ஒரு காலி பாட்டில் போட்டால், 0.15 டாலர் மதிப்புள்ள தொகை பயணிகளுக்கு கிடைக்கும்.  15 பாட்டில் போடோமேயானால், கணிசமான தூரத்துக்கு…

Read More