37 dead after fire at Russian psychiatric hospital ரஷ்யாவில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 37 பேர் பலியாகினர். ரஷ்யாவின் நோவ்கோரோட் மாகாணத்தில் லூகா என்ற ஊரில் மனநோயாளிகளுக்கான மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு 60-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. அது பயங்கரமாக எரிந்து அடியோடு தரைமட்டமானது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு சிலரை மீட்டனர். இருப்பினும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி 37 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் மருத்துவ ஊழியர் ஒருவர் ஆவார். மேலும் 27 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.…
Read More14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஷ்கர் எல்லையில்
14 Naxals killed in an encounter with police in Odisha ஒடிசாவில் சத்தீஷ்கர் மாநில எல்லையில் உள்ள மால்கங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு படையினரும், மாவட்ட தன்னார்வ படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்கினார்கள். கடுமையான துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட் ஆவார். அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வெடி பொருள் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் மே 25-ந்தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஊர்வலத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள்…
Read Moreதஞ்சை பெரியகோவில் 63 வயது யானை வெள்ளையம்மாள் உயிரிழந்தது
tanjore temple elephant dies நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தஞ்சை பெரிய கோயிலுக்கு வெள்ளையம்மாள் என்கிற யானையை இறைதொண்டுக்காக பரிசாக வழங்கியிருந்தார். அந்த யானை இன்று அதிகாலை இறந்து போனது. 63 வயதாகும் இந்த யானை, பல வருடங்களாக இறைத் தொண்டு புரிந்து வந்தது.கடந்த சில மாதங்களாக தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. இந்த யானைக்கு நேற்று முழுவதும் கடுமையான மூட்டு வலி வந்துள்ளது. முடியாமல் அவதிப்பட்டு வந்த யானைக்கு தஞ்சை கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த போதிலும், வலியால் துடிதுடித்து அவதிப்பட்ட யானை, மயங்கி விழுந்து இறந்து விட்டதாகத் தெரிய வருகிறது. அப்பகுதி மக்கள் வெள்ளையம்மாள் இறந்த சோக செய்தி கேட்டு, அனைவரும் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இன்று மாலை தகுந்த மரியாதையுடன்,…
Read Moreமணிப்பூரில் தலைநகரில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு 9 பேர் பலி
Nine migrant labourers killed in Manipur blast மணிப்பூரின் தலைநகரமான இம்பாலின் அருகில் நேற்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் வெளிமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இம்பால் நகரத்தின் புறநகர் நகமபல். அந்த நகமபல் பகுதியில் நேற்று காலை சுமார் 7.45 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த பயங்கர குண்டுவெடிதத்தில் 9 வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் பலியானார்கள். படுகாயமடைந்த 20 பேர் அருகமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருகின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த பயங்கர குண்டு வெடிப்பிற்கு அந்த பகுதியின் தீவிரவாத குழுக்கள் காரணமாக இருக்ககூடும் என அஞ்சப்படுகிறது. Nine migrant labourers killed in Manipur blast…
Read Moreஹைதராபாதில் மின்ஊழியர்கள் போராட்டம் 850 கிராமங்கள் இருண்டது
Power staff stir to hit water supply in Andhra Pradesh சீமாந்திராவில் ஆந்திரா தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் ஹைதராபாத் நகரத்தில் மின்சார விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நகரம் முழுவதும் இருண்டது. 13 மாவட்டங்கள் உள்ள சீமாந்திராவில் ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து 30,000க்கு மேற்பட்ட மின் ஊழியர்கள், 72 மணி நேர வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் துவங்கினர். இதில் 20,000க்கு மேற்பட்ட ஒப்பந்த மின் ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஆந்திரா மாநிலத்தின் தென்பகுதிக்கு உண்டான 7,196 மெகா வாட் மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. மேலும் தமிழகம், கேரளம், கர்நாடகம், மட்டும் இன்றி ஹைதராபாத் நகரம் உள்பட ஆந்திர மாநிலத்தின் பல இடங்களும் மின் விநியோகம் இன்றி…
Read Moreசிங்கப்பூரில் இருந்து அதிகமாக நகைகள் அணிந்து வந்தவர் கைது
pudukkottai youth from singapore was arrested in chennai airport for bringing too much of gold jewels by wearing in his body சிங்கப்பூரில் இருந்து அளவுக்கு அதிகமாக தங்கநகைகள் அணிந்து வந்திறங்கிய வாலிபரை சுங்க இலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்திறங்கிய விமான பயணிகளை சுங்கத்துறை மற்றும் குடியிரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின்போது புதுக்கோட்டையை சேர்ந்த சிசுபாலன் (32) தனது கழுத்து மற்றும் கைகளில் அளவுக்கு அதிகமான அளவில் நிறைய நகைகளை அணிந்து வந்து கொண்டு வந்தார். ஆனால் அவர் கொண்டுவந்த சூட்கேசில் நகை எதுவும் இல்லை. ஆனால் அவர் அணிந்து வந்த எந்த தங்கநகைகளுக்கும் எந்தவித ஆதாரமும் காட்டவில்லை. இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து வந்த சிசுபாலனை சுங்க இலக்கா அதிகாரிகள் தனி அறையில்…
Read Moreகாய்கறிகள், பழங்கள் நமது இல்லதிற்கே வந்து விற்பனை அறிமுகம்.
women self help group sell veggies and fruits for cheap rate பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எண்ணி பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திகொடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் மூலமாக சுமார் 200 இடங்களில் அம்மா உணவகம் ஆரம்பிக்கப்பட்டு மலிய விலையில் உணவு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.. இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம். தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறதோ அது போல சிறிய வேன், ஆட்டோ போன்றவற்றில் காய்கறிகள்,…
Read Moreமகளின் திருமணத்தன்று இரவு பெற்றோர் மர்ம மரணம்
A day after wedding, bride’s parents found dead in freak accident பொள்ளாச்சி அருகே மகளின் திருமணநாளில் பெற்றோர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆத்துப்பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் இராசு (50). சொந்த நிலத்தில் விவசாயம் செய்துவரும் இவரது மனைவி பெயர் தர்மேஸ்வரி (46). இவர்களது மகள் மோகனசுந்தரிக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த சபரி என்பவருக்கும் வியாழன்று காலை பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் திருமணம் நடந்தது. சபரி-மோகனசுந்தரியின் திருமணத்திற்கு பிறகு, மணமக்கள் மற்றும் இராசுவும் அவரது குடும்பத்தினரும் ஆத்துப்பொள்ளாச்சிக்கு வந்தனர். புதுமணத்தம்பதியை முதலிரவுக்கு அனுப்பிவிட்டு இராசு, அவரது மனைவி தர்மேஸ்வரி ஆகியோர் வராண்டாவிலும், மோகனசுந்தரியின் தம்பி மணிகண்டன் மற்றும் தர்மேஸ்வரியின் தாயார் சின்னத்தாய் ஆகியோர் மற்றொரு அறையிலும் படுத்திருந்தனர். கடந்த சில நாட்களாக இரவு பகலாக கண் விழித்திருந்து திருமண…
Read Moreஇன்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது
Narrow escape for Indigo passengers as plane veers off runway in Bangalore பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இன்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து கொஞ்சம் விலகிச் சென்று அங்கிருந்த விளக்குகள் மீது மோதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 110 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் நேற்று இரவு 8.10 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது கன மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி அங்கிருந்த விளக்குகள் மீது மோதியது. இதில் 3 விளக்குகள் சேதமடைந்தன. நல்லவேளையாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து விமான சேவை 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. விபத்துக்குள்ளான விமானம்…
Read Moreஉலகின் அதிபயங்கர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது கராச்சி
Karachi termed ‘most dangerous megacity’ in world உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது. அதில், பாகிஸ்தானின் கராச்சி நகரம், மக்களின் உயிருக்கு ஆபத்தான, “அதிபயங்கர நகரம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால், வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டு சதியால், மக்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றனர். உலகிலேயே, கராச்சியில் தான், மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். 2000 முதல், 2010ம் ஆண்டு வரை, கராச்சி நகரின் மக்கள் தொகை, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, கராச்சியில், ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே, பலத்த மோதல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை…
Read More



