இளவயதில் ஆரோக்யத்தினை தொலைத்து பணத்தை சம்பாதிக்கின்றனர். அதுவே முதுமை பருவத்தை ஆரோக்கியத்தினை காக்க சம்பாதித்த பணத்தை செலவு செய்கின்றனர். இன்றைய காலத்தில் நோய்கள் வரும் முன்பே அதற்கேற்ப லட்சக்கணக்கில் பணத்தினை வங்கிகளில் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது மெடிக்ளைம் இன்சூரன்ஸ் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும் அந்த அளவிற்கு மருந்து மாத்திரைகளின் செலவுகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுக்கு 4 கோடி பேர் ஏழைகளாகி விட்டதாக தெரிவிக்கின்றது ஒரு புள்ளிவிபரம். உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வைத்துள்ளது. இதில் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இல்லை என்று கடந்த 2003ம்…
Read Moreமகராஷ்டிராவில் நரபலி கொடுக்கபட்ட 3 வயது சிறுமி
3 Year Old Murdered in Yavatmal in Suspected Human Sacrifice மகராஷ்டிராவில் காணாமல் போன மூன்று வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் காயத்தை பார்த்தால், அவர் நரபலி போன்ற மூடநம்பிக்கை காரணமாக பலியாகியிருக்காலம் எனத் தெரிவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மகராஷ்டிராவில் உள்ள யவத் மால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கட்டிடப்பணி நடந்து வந்தது. அந்த இடத்தில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுகிடந்தார். உடனே போலீசார் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அக்குழந்தை யாரென விசாரித்தபோது, மூன்று நாட்கள் முன்னர் அதே இடத்தில் காணாமல் போன ஒரு குழந்தை என தெரியவந்தது. அக்குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.குழந்தையின் உடலில்…
Read Moreசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 திருடர்கள் காவல் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிஒட்டம்
Koyambedu bus stand : Two thieves clashed with a lone policemen in Chennai, Koyambedu bus stand when he attempted to nab them. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டு திருடர்களை ஒரு போலீஸ்காரர் பிடிக்க முயன்றார். அப்போது திருடர்கள் இருவரும் சேர்ந்து போலீஸ்காரரை கடுமையாக தாக்கினர். ஆனாலும் விடாமல் தனி நபராக போராடினார் அந்த போலீஸ்காரர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள், பயணிகள் வேடிக்கை பார்த்தனரே தவிர ஒருவர் கூட போலீஸ்காரருக்கு உதவ முன்வரவில்லை. சென்னையில் திருடர்கள் அட்டகாசம் பெருகிப் போய்க் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது என்று திருடர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட மடிப்பாக்கம் பகுதியில் ஒரு திருடனை போலீஸார் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அவன் தப்பி விட்டான். அவனைப்…
Read Moreஉடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை-இவைகளை பாதுகாக்கும் பிஸ்தா பருப்பு
ஆசிய பகுதியின் மேற்கு பகுதியில் இருந்து வருவது தான் பிஸ்தா. இது இயல்பாக ஒரு பழமாகும், ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது. ஆரோக்கியமான இதயம் பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது. நீரிழிவு நோயை தடுக்கின்றது பிஸ்தாவில் உள்ள 60%…
Read Moreதமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.
ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ, அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை. எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது. முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி…
Read Moreசர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரிட்டன் ராணியை முந்தினார் சோனியா
சர்வதேச அளவில் முன்னணி இணையதள செய்தி நிறுவனமான ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள உலகின் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு முந்தைய இடத்தில் சோனியா உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அட்டவணை வெளியான 24 மணி நேரத்தில் சோனியா பெயர் திடீரென நீக்கப்பட்டது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஹப்பிங்டன் போஸ்ட் நிறுவனம், சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில், நாட்டின் மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், அரசிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெற்றிருப்பவர்களில், 7 இடங்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர். சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில், முதல் 20 இடங்களை…
Read Moreமுகநூலில் வலம் வரும் இந்திய சிறைச்சாலை கைதிகள்-கேரளாவில் அம்பலம்
Kerala accused using Facebook in jail கேரளச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் பலர் சிறையில் இருந்தபடியே பேஸ்புக் வளைதளத்தைப் பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கில் கைதாகி கோழிக்கோடு சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் வாழும் பெரும்பாலான அரசியல் பிண்ணனி கொண்ட குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுகுறித்து கேரளத் தொலைக்காட்சி ஒன்று சிறப்புப் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சிறையில் உள்ள கைதிகள் சிலரின் பேஸ்புக் பக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி குற்றவாளி ஒருவர் நேற்று மாலை கூட சிறையில் இருந்தவண்ணம் தனது பேஸ்புக் பக்கத்தை அப்டேட் செய்துள்ளதும் மேலும் சிலர்…
Read Moreதிருமணம் நடக்க இருக்கும் மணமகன் திருமண மண்டபம் முன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பலி
A bridegroom, his marriage was scheduled today was died on the spot when his bike met accident with a lorry this morning திருமணம் நடக்க இருக்கும் மணமகன் திருமண மண்டபம் முன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியது.திருப்புவனம் அருகே ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டியின் மகன் மணிகண்டன் (27). இவர் திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். மணிகண்டனுக்கும், மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருப்புவனம் அருகே லாடனேந்தலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. சனிக்கிழமை இரவே மணமகள் வீட்டார் திருமண மண்டபத்தில் வந்து தங்கினர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மண்டபத்தில் குழாயில் தண்ணீர் வரவில்லையாம். இதுகுறித்து தகவலறிந்த மணமகன் மணிகண்டன், வீட்டில் உள்ளவர்கள் தடுத்தும் கேட்காமல்,…
Read Moreநாய்கள் பயன் படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வாஷிங் மெஷின்
Woof To Wash: The Wonderful Dog-Operated Washing Machine நாய்கள் பயன் படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வாஷிங் மெஷின் : பிறர் உதவி தேவைபடுபவர்கள் உதவும் விதமாக அவர்கள் நாய் குரைக்கும் போது செயல்படும் ஒரு வாஷிங் மிஷின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டானியாவைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாஷிங் மெஷின் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும் வகையில் விசேஷ கைப் பிடியையும் கொண்டுள்ளது.அத்துடன் ‘ஊப் டு வாஷ்’ என்ற இந்த வாஷிங் மெஷின் நாய்களின் குரைப்புக்கு தகுந்தாற்போல் செயல்படும்திறன் உள்ள கருவியொன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இயல்பாக செயல்பட முடியாத விசேஷ தேவையுள்ளவர்களுக்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய் இந்த சலவை இயந்திரத்தின் கதவைத் திறந்து சலவை செய்ய வேண்டிய துணிகளை உள்ளே தள்ளி, அதன் கதவை மூடி குரைத்ததும் இயந்திரம் செயல்பட ஆரம்பிக்கிறது.அத்துடன்…
Read Moreதுளசி செடியை சந்திரனில் வளர்க்க திட்டம் : நாசா
NASA Project Looks To Grow Turnips And Basil On The Moon அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் ஒன்றில் ஈடுபட உள்ளது. வருகிற 2015–ம் ஆண்டு அதற்கான ஆய்வை தொடங்கி ஆயத்த பணியை இப்போதே ஆரம்பித்து விட்டது. முன்னதாக சந்திரனில் எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது.இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. தாவரங்களை…
Read More



