ஈராக்கில் 21 பேருக்கு ஓரே நாளில் தூக்கு

ஈராக்-புதன், 17 ஏப்ரல் 2013: ஈராக்கில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 21 தீவிரவாதிகளுக்கு ஓரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது. ஈராக்கில் பயங்கரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில், ஈராக்கில் அதிகரித்து தீவிரவாத குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஈராக்கில் குண்டுவெடிப்பு, கொலை குற்றம், கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுப்பட்ட 21 பேருக்கு நேற்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலக நாடுகளில் மிக அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்படும் நாடு எனக் கருதப்படும் ஈராக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 447 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு மட்டும் 129 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. Iraq Executes 21 Men Convicted of Terrorism Property chennai

Read More

2002 குஜராத் கலவரம்: 10 பேருக்கு தூக்கு விதிக்க கோரும் மோடி அரசு..

அகமதாபாத், ஏப்ரல் 17-2013 – 2002ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பா.ஜ.க. முன்னாள் அமைச்சரும் மோடியின் ஆதரவாளருமான மாயா கோட்னானி உள்ளிட்ட 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய நரேந்திர மோடி அரசு திடீர் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட மறுநாள் 2002 ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதியன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி…

Read More

நீதிமன்றம் விஜயகாந்த் எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பித்தது.

திருநெல்வேலி 17ஏப்ரல் 2013: முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடுத்த அவதுறு வழக்கு சம்மந்தமாக கோர்ட்டில் ஆஜராகததால் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு  திராவிட கழகம் (DMDK) நிறுவனர் விஜயகாந்த்திற்கு எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பிக்க பட்டது. இவர் மேல் 23 வழக்குகள் நிலுவைளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Non bailable arrest warrant Vijayakanth flats

Read More

பழம்பெரும் திரைப்பட இசை அமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார்.

பழம்பெரும் திரைப்பட இசை அமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91. அவர் கடந்த சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.   இசைஅமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து பல தமிழ்த் திரைப்படப் பாடல்களை உருவாக்கியவர் இராமமூர்த்தி. அவ்விருவரும் மெல்லிசை மன்னர்கள் என்றே அழைக்கப்பட்டனர். 1950ளில் துவங்கிய அவர்களது இணைந்த இசைப்பயணம் 1965ல் முடிவிற்கு வந்தது. எனினும் தொடர்ந்தும் இராமமூர்த்தி இசையமைத்தார். எம்எஸ்வியைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு மட்டுமே அவர் இசை அமைத்தார். கடந்த ஆண்டு ஜெயா டிவி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தியை பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா, இருவருக்கும் திரையிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தை அளித்தார் என்பது குறிபிடதக்கது. டி.கே.இராமமூர்த்தியின் மறைவுக்குத் திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். Music Director TK ramamoorthy Expired

Read More

பெங்களூர் பா.ஜ. அலுவலகம் வெளியே குண்டு வெடிப்பு, 4 பேர் காயம்

பெங்களூர் புதன் 17 ஏப்ரல் 2013: பிஜேபி மல்லேஸ்வரம் அலுவலகம் அருகே நிறுத்திவைக்க பட்ட கார் திடீரென வெடித்தது. புகையுடன் கூடிய பயங்கர சத்தத்துடன் வெடித்தால் பொதுமக்கள் பீதி அடைத்தனர் பிஜேபி அலுவலகம் அருகே குண்டு வெடிப்புக்கு சரியான கரணம் என்ன என்று அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும் இது கார் காஸ் cylinder விபத்தாக இருக்ககூடும் எனவும் சில தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன… bangalore bomb blast bjp

Read More

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு சாஸ்த்ரா பல்கலை. ரூ. 54 லட்சம் நன்கொடை

chennai adyar cancer institute சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ரூ. 54 லட்சத்தை நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கியது. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவிடம் ரூ. 54 லட்சத்துக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார். இதுகுறித்து சேதுராமன் தெரிவித்தது: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள அதிநுண்-நுட்பவியல் மற்றும் உயிரியல் பொருள்சார் உயராய்வு சேர்ந்த மையமும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை கழகமும், புற்றுநோய் மற்றும் மூளைக்கட்டி பற்றி ஆய்வு நிகழ்த்துவதில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. இரு நிலையங்களும் கைகோர்த்து இது பற்றித் தொடர்நிலை ஆய்வு மேற்கொள்ள இது நல்ல தொடக்கம். புற்றுநோய் தொடர்பான பல அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், அது பற்றிய கல்வியறிவைப் பெறவும், தொண்டு செய்வதற்கும் இது வழிவகுக்கும்…

Read More

தமிழ் சினிமா சிங்கம் பாகம் – 2

தமிழ் சினிமா சிங்கம் இயக்குனர் ஹரி கோபாலகிருஷ்ணன் அவரது வரவிருக்கும் சிங்கம் 2 பாகம் ஒரு தொடர்ச்சி அல்ல அதன் விரிவாக்கமாக இருக்கும் என்கிறார். சிங்கம் இரண்டாவது பகுதி இன்னும் பல கதாபாத்திரங்காலுன் கூடிய இரண்டாம் பாகமாகும்  சிங்கம் முதலாம் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் இதில் சேர்க்கப்பட்டதாகவும், இது மாபெரும் புதிய முயற்சி என தெரிவித்தார் 

Read More

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூ

ipl-cricket-bangalore-won டெல்லி டேர்டெவில்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். டெல்லி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுக்கவே ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. அதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பெங்களூர். பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி, டெல்லியை பேட் செய்ய அழைத்தார். டெல்லி அணியில் வார்னர்-சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது. வார்னர்…

Read More

வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம்

புதுதில்லி: 16 ஏப்ரல் 2013 இந்தியாவில் நிலநடுக்கம் – இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மாலை 4.18மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று இந்தியா நேரப்படி மாலை 4.18 மணி அளவில் இந்த லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜஸ்தான், தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லியைச் சுற்றிலுமுள்ள சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுமார் 20 விநாடிகள் நீடித்து என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்தது. இந்த நிலநடுக்கத்தின் இழப்புகள் மற்றும் பாதிப்புகள்  பற்றி உடனடித் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Read More

ஈரானில் மிக பெரிய பூகம்பம் 100க்கு மேற்பட்ட மக்கள் பலி?.

துபாய்: பாகிஸ்தான் எல்லை அருகே ஈரானில் நில நடுக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அஞ்சபடுகிறது. 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டது. “இது 40 ஆண்டுகளில் ஈரானில் ஏற்பட்ட மிக பெரிய பூகம்பம் என ஈரானிய அதிகாரி தொலைபேசில் கூறினார். அமெரிக்க புவியியல் அலுவலகத்தின் படி நிலநடுக்கம் 15.2 கிமீ (9.4 மைல்) ஆழத்தில் 10:44 GMT மணிக்கு தாக்கியது என தகவல் வெளியிடப்பட்டது.

Read More