துபாயில் சாலை விபத்து : இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி

10 Indians killed in a Road Accident at Dubai துபாய் : துபாயில் நடைபெற்ற ஓர் கோரமான சாலை விபத்தில், இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரழந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் துபாயில், இந்திய தொழிலாளர்கள் ஏராளமான பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த, தொழிலாளர்கள் 27 பேர் , கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு, சிறிய பேருந்தில் பயணம் செய்தனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த உழவு வாகனம் (டிராக்டர்) மீது, கட்டுமான தொழிலாளர்கள் சென்ற பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில், தொழிலாளர்கள் 15 பேர், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில்10 பேர் இந்தியர்கள் குறிப்பாக எல்லோரும், பீகார் மாநிலத்தை…

Read More

இன்று அன்னையர் தினம்

Happy Mothers Day இன்று அன்னையர்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் சிறகுகள் வாசக அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள். அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும். விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை “ஹால்மார்க் விடுமுறை தினம்” என்று கருதினர். அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக்…

Read More

இலங்கை ராணுவத்தின் கெடுபிடிகளை தாங்க முடியாமல் மீண்டும் தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள்

Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் 10 இலங்கை தமிழ் அகதிகள் தனுஷ்கோடி வந்துள்ளனர். 2 குடும்பங்களை சேர்ந்த 10 இலங்கை அகதிகள் இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரிடம் அவர்கள் கூறும்போது, ”இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். எங்களை போல், சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர். மேலும் இலங்கையில், விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை ராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்” என்றனர். Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today. They say, more than 2 thousand…

Read More

கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் 116 வயது மூதாட்டி

116-year-old Peruvian stakes claim to title of world’s oldest woman உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழ்க் கிரீடம் விரைவில் வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், ஊடகங்களின் ஒளிமழை தன் மீது பாயப்போகும் அந்த பொன்னான நன்நாளுக்காக பெரு நாட்டை சேர்ந்த 116 வயதாகும் மூதாட்டியான ஃபிலோமெனா ட்டைபே மெண்டோசா ஆவலுடன் காத்திருக்கிறார். இந்த பட்டத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டிருக்கும் கின்னஸ் சாதனையாளரான ஜப்பான் நாட்டின் மிசாவொ வொக்காவா-வை விட வெறும் 3 மாதங்கள் மட்டுமே இளையவரான இவர், 20-12-1897 பிறந்துள்ளார். ’நான் போன நூற்றாண்டை சேர்ந்தவள் இல்லையப்பா… பேராண்டி, அதுக்கு முந்தைய நூற்றாண்டுக்காரி’ என்று பெருமிதம் பொங்க கூறும் இவர், தனது ஆரோக்கியத்தின் ரகசியமாக இயற்கை உணவுகளை குறிப்பிடுகிறார். உருளைக்கிழங்கு, ஆட்டுக்கறி, செம்மறியாட்டுப் பால் போன்றவை தனக்கு விருப்பமான…

Read More

ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் பலி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியவில்லை

Afghanistan landslide buries village, 2,000 missing ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 350 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. 2 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து உருண்டது. இதில் மண், கல் என அருகில் இருந்த வீடுகளை மூடிக்கொண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 350 பேர் இறந்திருக்கலாம் என ஆப்கனில் முகாமிட்டுள்ள ஐ.நா., அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்ணில் புதைந்த நபர்கள் மற்றும் உயிருக்கு போராடி வருவோரை உள்ளூர் அலுவலர்கள் உதவியுடன் ஐ.நா.,…

Read More

வயிற்றில் வளரும் சிசுவை காப்பாற்ற மாமியாரைக் கொன்ற இந்திய வம்சாவளிப் பெண்

Indian-American woman killed mother-in-law to save unborn daughter தன் கர்ப்பத்தில் இருந்த பெண் கருவை காப்பாற்ற மாமியாரைக் கொலை செய்ததாக கைது செய்யப் பட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணை விடுதலை செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண் பல்ஜிந்தர் கவுர்(39). ஏற்கனவே ஒரு பெண் குழந்தைக்கு தாயான பல்ஜிந்தர் இரண்டாவது முறையாக கருத்தரித்தார். அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பெண் தான் என்பதை அறிந்த அவரது 68 வயது மாமியார், அதை கலைத்து விடும் படி பல்ஜிந்தரை வற்புறுத்தியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பல்ஜிந்தர் அவரது மாமியாரைக் கொலை செய்து விட்டார்.  பல்ஜிந்தர் கடந்த 26-10-2012 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். அவரிடம்.போலீஸ் நடத்திய விசாரணையில், வயிற்றில் இருக்கும்…

Read More

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது..

Indian rupee opens higher at 60.59 per dollar இன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.60.59-ஆக ஆனது. உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து பிறநாடுகளின் கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் கண்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னதாக ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.60.64-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. Indian rupee opens higher at 60.59 per dollar The Indian rupee opened with marginal gains of 5 paise at Rs.60.59 per dollar on Tuesday as against previous day’s closing value of Rs.60.64 a dollar. Ashutosh Raina of HDFC Bank said that, “The…

Read More

அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி ஓர் விமானம் கடலில் விழுந்தது

A collision between 2 small planes that ended with one crashing into the San Francisco Bay அமெரிக்கா- சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டது. இதனால் அந்த இரு விமானங்களும் நடுவானில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது. இதில் ஓர் விமானம் சான்பிரான் சிஸ்கோ பகுதி கடலில் விழுந்தது. மற்றொரு விமானத்தில் இருந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நடு நிலைப்படுத்தி பத்திரமாக அருகே இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். இந்த 2 விமானங்களிலும் தலா ஓர் விமானி மட்டுமே பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் விழுந்த விமானத்தின் விமானியின் நிலை என்ன…

Read More

இங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களை விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை

Bang go the mangos as the EU bans 16million from India amid fears that they’re pest-ridden பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செயய் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கிட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இந்தி பூச்சிகளால் இங்கிலாந்து உருளைக் கிழங்கு மற்றும் வெள்ளரிச் செடிகளுக்கு ஆபத்து வரலாம் என்று ஐரோப்பிய யூனியன் சந்தேகிக்கிறதாம். இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 60 லட்சம் பவுண்டு வரையிலான மாம்பழங்களை இங்கிலாந்து இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை…

Read More

நடத்தையை உளவுபார்க்க மனைவியின் வயிற்றுக்குள் கண்காணிப்பு கருவி பொருத்திய கணவன்

Wife claims husband affixed tracker in her body ‘டிராக்கர்’ எனப்படும் கண்காணிப்பு கருவியை வயிற்றுக்குள் பொருத்தியதாக பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். லாகூரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் முகம்மது பயாஸ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஒரு நாள் இரவு மாஜிஸ்திரேட் அக்ரம் ஆசாத் என்பவருடன் குடி போதையில் வந்த என் கணவர் என்னை அந்த மாஜிஸ்திரேட்டுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்ததால், என் கணவரின் ஒத்துழைப்புடன் மாஜிஸ்திரேட் என்னை பலவந்தமாக கற்பழித்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்த அவர், தன் கண் முன்னால்…

Read More