அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி ஓர் விமானம் கடலில் விழுந்தது

A collision between 2 small planes that ended with one crashing into the San Francisco Bay அமெரிக்கா- சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டது. இதனால் அந்த இரு விமானங்களும் நடுவானில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது. இதில் ஓர் விமானம் சான்பிரான் சிஸ்கோ பகுதி கடலில் விழுந்தது. மற்றொரு விமானத்தில் இருந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நடு நிலைப்படுத்தி பத்திரமாக அருகே இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். இந்த 2 விமானங்களிலும் தலா ஓர் விமானி மட்டுமே பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் விழுந்த விமானத்தின் விமானியின் நிலை என்ன…

Read More

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது

Two war ships to Sri Lanka from India இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு 2 போர்க்கப்பல்களை இந்தியா வழங்க உள்ளது. இந்த கப்பல்களை கட்டும் பணி கோவாவில் நடக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இலங்கைக்கு நாட்டு ராணுவத்தினர் அங்குள்ள தமிழர்களையும், தமிழக மீனவர்களையும்தான் தாக்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ உறவை துண்டிக்க வேண்டுமென்றும், அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழர்களை தாக்கி வரும் இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவக்கூடாது என்ற தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இலங்கைக்கு 2…

Read More

கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல்கள்: இந்திய மீனவர்கள் அதிர்ச்சி.

srilankan navy in bay of bengal to warn Indian tamil fishermen தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையை மீறி மீன் பிடிக்க முடியாதபடி இலங்கை கப்பற்படை 4 பெரிய போர்க் கப்பல்களையும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களையும் நிறுத்தி வைத்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு, 45 நாள்கள் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து, தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க வியாழக்கிழமை சென்றுள்ளனர். வரும் சனிக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் நாளாக கடைபிடித்து வருவதால், எப்போதும் போல ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை முதல் மீன் பிடிக்க தயாரக இருக்கும்…

Read More