தென் அமெரிக்கவில் மலை உச்சியில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 43 பேர் பலி

Guatemala bus crash kills dozens, About 43 people killed and many other injured  தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவின் தலைநகரின் அருகே அமைந்துள்ள சான் மார்டின் ஜிலோட்பெக் எனும் மலைப்பாதை வழியே நிரம்பி வழிந்த பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.  சிமால்டனாங்கோ என்னும் இடத்தில இருந்து சான் மார்டின் ஜிலோட்பெக் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் சுமார் 90 பேர் பயணம் செய்தனர். அந்த மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்த போது, அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தாக்கில் பாய்ந்து ஆற்றின் கரையில் விழுந்தது. இதில்3 குழந்தை உள்பட 43 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நடந்த ஆற்றில் தண்ணீர் மிக வேகமாக சென்று கொண்டிருப்பதால், மீட்புப்பணிகளில் கால தாமதம் ஏற்பட்டு, பின்னர் ஆற்றின் கரையில்…

Read More

130 கிலோ தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு விசா புதுப்பிக்க மறுப்பு

Visa not extended just because of obesity. A South African chef facing threat of deportation from New Zealand due to his weight and has not granted visa extension.   உடல் எடை குறைய வேண்டும், குறையாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று நியூசிலாந்து அரசு தென் ஆப்பிரிக்கருக்கு 23 மாத இறுதி கெடு விதித்து இருக்கிறது.  இதில் குறிப்பிடத்தக்கது என்னெவென்றால் உலகத்திலேயே நிறைய குண்டான மனிதர்கள் உள்ள நாடு அமெரிக்க, இரண்டாவது மெக்சிகோ, மூன்றாவது  நியூசிலாந்து ஆகும். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் தென் ஆப்பிரிக்க நாட்டை சார்ந்தவர்,  இவரும் இவருடைய மனைவியும்  ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்தில் உள்ள கிரிஸ்ட்சர்ச் பகுதியில் குடியேறினர். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது  உடல் எடை மிக அதிகமாக இருந்துவந்தது. ஒவ்வொரு ஆண்டும் குடியேற்ற…

Read More

19 வயது வாலிபர் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி சாதனை

19 year old boy driving a solo flight alone around the world. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேயான் கேம்பல் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி வர திட்டமிட்டார். இவருக்கு  வயது 19. இவர்   ஒரே என்ஜீன் உள்ள குட்டி விமானத்தைதில் தனியே  ஓட்டி உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். ஜூன் 30ம் தேதி இலகு-ரக விமானத்தில் ஆஸ்திரேலியா, நியூ வேல்ஸ் பகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். விமானத்தில் 70 நாட்கள் தொடர்ந்து பயணித்து ரேயான் உலகின் அனேக  இடங்களையும் சுற்றி  தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். வுல்லான்காங் நகரில் இருந்து தொடங்கிய விமான பயணத்தை 14 நாடுகளுக்கு 200 மணி நேரம் விமானத்தில் சுற்றி 70 நாட்களில் 44,448 கி.மீட்டர் தூரம் பயணித்து இருக்கிறார். இதன் மூலம் விமானத்தை தனியாக இயக்கி உலகத்தை சுற்றிய மிகச் சிறிய வயது வாலிபர் என்ற சாதனையை செய்து இதற்கு முன் படைத்த சாதனையான அமெரிக்காவை சேர்ந்த  ஜேக் வீகன்ட் வயது  21  செய்த சாதனையை 19 வயதிலேயே செய்து முறியடித்தார். 19…

Read More

இலங்கை மனித உரிமை விரும்பிகள் மீது அச்சுறுத்தல்கள்: நவிபிள்ளை

Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தின் போது தன்னை சந்தித்த மனித உரிமை விரும்பிகள் மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தப்பட்டது தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.  ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பருவகால கூடதொடர் இன்று ஆரம்பமானது.  இலங்கை தொடர்பான தொடர்பில் கருத்து வெளியிடும் போது  நவநீதம்பிள்ளை மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka Advertisements: Buy quality African food products from Ponkam traders in Belgium Visit: www.ponkamtraders.com

Read More

இளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என நினைத்து கைது

Bad week at Buckingham Palace: Prince Andrew mistaken for intruder இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 2–வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ (32). இவர் எலிசபெத்தின் 3–வது குழந்தை ஆவார். சம்பவத்தன்று காலை பக்கிங்காம் அரண்மனையின் தோட்டத்தில் ‘வாக்கிங்’ சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த லண்டன் மெட்ரோ பாலிட்டன் போலீசார் அவரை துப்பாக்கி முனையில் திடீரென கைது செய்தனர். இதனால் சுமார் அரை நிமிடம் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே, அவரும் சிறிது நேரம் தடுமாற்றம் அடைந்தார். இதற்கிடையே, துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரை சுட முயன்றபோது அரண்மனை காவலர்கள் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இவர் இளவரசர் ஆண்ட்ரூ என்று விளக்கினர். இதனால் துப்பாக்கி சூட்டில் இருந்து அவர் தப்பினார். அதை தொடர்ந்து…

Read More

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின் விமான தாக்குதல் 15 பேர் பலி

NATO strike, militant attack kills 15 in Afghanistan தாலிபாகளை குறிவைத்து நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டு இறுதிக்குள் நேட்டோ படையினர் வெளியேறவுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரிடம் விட்டுக்கொடுத்து வருகின்றனர். 90 சதவிகித ராணுவ நடவடிக்கைகளை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் பெரும்பாலான விமானத்தாக்குலை நேட்டோ படையினரே நடத்துவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் கிழக்கில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள குனாரில் தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை குறிவைத்து நேட்டோ படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் 10 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நேட்டோ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பொதுமக்கள் இறப்பு…

Read More

விஷம் வைத்து 41 யானைகள் கொலை ஜிம்பாப்வே நாட்டில்

Zimbabwe elephants poisoned by poachers in Hwange ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் புகழ்பெற்ற வாங் தேசியப்பூங்கா உள்ளது. கலஹாரி பாலைவனம் அருகே அமைந்துள்ள இப்பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மருத்துவ பயன்பாட்டிற்காக வேட்டையாளர்களால் விலங்குகளின் தந்தங்கள் மற்றும் கொம்புகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைடு விஷம் வைத்து கொல்லப்பட்டு அதன் தந்தங்களை கொள்ளையர்கள் வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்று பூங்காவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விசாரணையில், 5 வன விலங்கு வேட்டையாளர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். சயனைடு விஷத்தால் இறந்துபோன விலங்குகளின் உடலை தொடும் விலங்குகள் மற்றும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த…

Read More

17 மாத குழந்தை 7வது மாடியிலிருந்து விழுந்த கவலைக்கிடம்

Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி பால்கனியிலிருந்து 17 மாத ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் குழந்தை இக்கட்டான இருந்தாலும், உயிர் பிழைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு சந்தேகப்படும்படியான காரணமெதுவும் தெரியவில்லை என்றும் ரொறொன்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தை நாற்காலியில் ஏறி பால்கனி கிராதியின் மேலாக விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடுமையான காயங்களுடன் சிறுவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளான். Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway A…

Read More

ஒரு வருடமாக விக்கிக் கொண்டே இருக்கும் மனிதர்!

Hangover leaves Irishman with hiccups for 14 months 14 மாதங்களாக விடாத விக்கலால் அவஸ்தைப்பட்டு வருகிறார் டேனியல் என்ற நபர். அயர்லாந்தை சேர்ந்தவர் டேனியல் கிளவ்(வயது 37). இவர் கடந்த 2012ம் ஆண்டு மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார். அத்துடன் பீர் மற்றும் ஸ்பிரிட்டை ஆசை தீர குடித்து மகிழ்ந்துள்ளார். அப்போது திடீரென விக்கல் ஏற்பட்டது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேரம் ஆக ஆக 7 நொடிக்கு ஒருமுறை விக்கல் தொடர்ந்து வந்தது. இதனால் பீதி அடைந்தவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார். இருப்பினும் குணமாகவில்லை, தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருப்பதால் மூச்சுவிட முடியாமல், சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறாராம். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும், மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டும் குணமாகாமல் அவஸ்தைப்படுகிறாராம். இவருக்கு…

Read More

விண்வெளியில் இருந்து பேசிய முதல் ரோபோட்

Robo-astronaut Kirobo utters first words in space   விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட ரோபோட், தனது முதல் வார்த்தையை பதிவு செய்தது. ஜப்பானால் உருவாக்கப்பட்ட கிரோபோ என்ற ரோபோட், தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. அகன்ற கண்களுடன் பெரிய காதுகளையும் கொண்ட இந்த ரோபோட், விண்வெளியில் இருந்த படியே பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு காலை வணக்கம் தெரிவித்தது. இந்த ரோபோட்டின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஜப்பான் மொழியில் பேசத் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைவருக்கும் குட்மார்னிங், நான் தான் கிரோபோ, நான் தான் உலகின் முதல் விண்வெளி ரோபோட் வீரர் என்று தெரிவித்தது. இதற்கு முன்னதாக நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும்…

Read More