மாஸ்கோ மருத்துவமனையில் தீ விபத்து 37 பேர் பலியாயினர்

37 dead after fire at Russian psychiatric hospital ரஷ்யாவில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 37 பேர் பலியாகினர். ரஷ்யாவின் நோவ்கோரோட் மாகாணத்தில் லூகா என்ற ஊரில் மனநோயாளிகளுக்கான மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு 60-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. அது பயங்கரமாக எரிந்து அடியோடு தரைமட்டமானது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு சிலரை மீட்டனர். இருப்பினும் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி 37 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் மருத்துவ ஊழியர் ஒருவர் ஆவார். மேலும் 27 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.…

Read More

உலகின் அதிபயங்கர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது கராச்சி

Karachi termed ‘most dangerous megacity’ in world உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது. அதில், பாகிஸ்தானின் கராச்சி நகரம், மக்களின் உயிருக்கு ஆபத்தான, “அதிபயங்கர நகரம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால், வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டு சதியால், மக்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றனர். உலகிலேயே, கராச்சியில் தான், மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். 2000 முதல், 2010ம் ஆண்டு வரை, கராச்சி நகரின் மக்கள் தொகை, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, கராச்சியில், ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே, பலத்த மோதல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை…

Read More

கணவரை மலை மேலிருந்து தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்

Honeymoon murder: woman charged with pushing husband off cliff அமெரிக்காவில் தேனிலவு சென்ற ஒரு புதுப்பெண் தனது கணவரை மலை மேலிருந்து தள்ளி கொலைச் செய்துள்ளார். திருமணமாக ஒரு வாரகாலமே ஆன நேரத்தில், ஜோர்டான் என்ற 22 வயது பெண்ணும், கோடி என்ற 25 வயது ஆணும் தேனிலவிற்கு செல்ல திட்டமிட்டு சென்றனர். இந்நிலையில், திருமணம் செய்துக்கொண்டது குறித்து ஜோர்டனுக்கு மாற்று கருத்து இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அன்று இரவு கிளேசியர் தேசிய பூங்காவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு முன் ஒரு நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய ஜோர்டான், நான் இது குறித்து எனது கணவரிடம் பேசவுள்ளேன், இன்று இரவுக்குள் நான் உனக்கு பதிலளிக்காவிட்டால் ஏதோ விபரீதமாக நடந்துள்ளது என புரிந்துக்கொள் என அனுப்பியிருக்கிறார். அன்று இரவு அந்த இடத்தில் ஜோர்டனுக்கும், கோடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.…

Read More

18 ஆண்டுகளாக இறந்த மகனின் உடலை பதபடுத்தி பாதுகாக்கும் தாய்

Women mummified son’s body with alcohol for 18 years 18 ஆண்டுகளுக்கு முன் ஜியார்ஜியாவில் இறந்த தனது மகனின் உடலைஅவரது தாய் இன்று வரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார். 1995-ஆம் ஆண்டு ஜியார்ஜியா நாட்டில் இறந்த தனது 22 வயது மகன் ஜோனி பகரத்ஸேஸின் உடலை கடந்த 18 வருடங்களாக அவரது தாய் சியுரி வரத்ஸ்கேலியா பாதுகாத்து கொண்டு வருகிறார். ஜோனி பகரத்ஸே கடந்த 18 வருடங்களுக்கு முன்பு, தனது 22 ஆம் வயதில் மரணமடைந்தார். இது வரை அவரது மரணதிற்குண்டன காரணம் அறியப்படவில்லை. எனினும் மகனை பிரிவதற்கு மனம் இன்றி தாய் திருமதி சியுரி வரத்ஸ்கேலியா, அவரது சடலத்தை பதபடுத்தி வீட்டிலேயே பாதுகாத்து வருகிறார்.   இதுகுறித்து தெரிவித்த அந்த தாய், என மகன் மிகவும் நல்லவன், எனது பேரன் அவனது தந்தையை இத்தகைய தோற்றத்தில் பார்க்கவேண்டுமென்ற ஆசை என் மகனுக்கு…

Read More

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் மோதல்:100பேர் பலி! 50பேர் படுகாயம்!

100 killed in Central African Republic clash மத்திய ஆப்பிரிக்க  குடியரசு நாட்டு அதிபராக பிரான்காய்ஸ் போசிசீ இருந்தார். கடந்த 2013 மார்ச் மாதம் மிகேல் ஜோடோடியா, அதிபர் பிரான்காய்ஸ் போசிசீ அரசை கவிழ்த்தார். அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி மிகேல் ஜோடோடியா இடைநிலை அரசின் புதிய அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இது சதி போன்று உள்ளது என கூறி கண்டனம் எழுந்து,  பிரான்காய்ஸின் ஆதரவாளர்களுக்கும், மிகேலின் ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் ஏற்பட்ட பயங்கர  மோதல்களில் 100க்கு மேற்பட்டோர் பலியாகினர், 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல்களினால் இந்நாட்டின் தலைநகர் பாங்குய்யின் வடமேற்கு பகுதியான பௌகா மற்றும் பொஸ்ஸாங்கோ உள்ளிட்ட பல பகுதிகள் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. முன்னால் அதிபர் பிரான்காய்ஸின்  ஆதரவாளர்கள் தங்களது  தலைவரை மறுபடியும் அதிபராக ஆக்க…

Read More

சீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட்

Empty Plastic bottles pay your metro rail pass சீனாவில் காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இலவச ரயில் டிக்கெட் பெற்று ரயில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் திட்டத்தை சீனாவின் பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்திருக்கிறது. சீனாவில் ரயில் பயணிகள் காலி தண்ணீர் பாட்டில்ளை  கண்ட இடங்களில் வீசி  சுற்றுசுழலில் ஏற்படும் மாசை கட்டுபடுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் சேகரித்த காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு மறு சுழற்சி முறையை பயன்படுத்தி புதிய பிளாஸ்டிக்  பாட்டில்களை தயார் செய்து பயன்படுத்த சீனா பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி காலி தண்ணீர் பாட்டில்கள் சேகரிக்கும் இயந்திரங்கள் தற்பொழுது இரண்டு ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் ஒரு காலி பாட்டில் போட்டால், 0.15 டாலர் மதிப்புள்ள தொகை பயணிகளுக்கு கிடைக்கும்.  15 பாட்டில் போடோமேயானால், கணிசமான தூரத்துக்கு…

Read More

ஈரானில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல் 44 பேர் பலி 39 பேர் படுகாயம்

Iran bus accident , 44 killed, 39 injured in collision ஈரானின் கோம் நெடுஞ்சாலையில், 2 பேருந்துகள் அதிவேகமாக ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டு தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த  பயங்கர விபத்தில் சிக்கி 44 பயணிகள் பரிதாபமாக கொல்லபட்டனர். படுகாயமடைந்த 39 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு, 11 மணியளவில் இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் – கோம் நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதற்கு முன் சென்றுகொண்டிருந்த காரில் மோதியது, அதனைத் தொடர்ந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் மீதும் அதிவேகமாக மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.   கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில் பயணம்…

Read More

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல மக்கள் விருப்பம்

People wish to go to Mars from Earth செவ்வாய் கிரகத்தில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க  மார்ஸ் ஒன் என்ற அமைப்பு ஒரு திட்ட குழுவை நியமித்துள்ளது . இவர்கள் 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்பது பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் .அதற்கான செலவு வர்த்தக அனுசரணைகள் மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் மூலம் பெறப்படவுள்ளன.இருப்பினும் செவ்வாய் கிரகத்தில்  மனிதர்கள் குடியேறும் வகையில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்துவதற்கு உண்டான தொழில்நுட்பம் இதுவரை இல்லை என்றும் விண்வெளி அமைப்புகள் கூறுகின்றன. இது நாள் வரை செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலன்களே அனுப்பப்பட்டுள்ளன என்றாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா இன்னும் இருபது ஆண்டுகளில் தமது விண்வெளி ஆய்வாளர்களை அங்கு அனுப்பும் திட்டம் உள்ளது என்று தெரிவித்தனர் . செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க  மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர்…

Read More

ஜப்பானில் 2 ஆவதுமுறையாக 2020-ல் ஒலிம்பிக் போட்டி

Japan conducts the olympic game 2 time in 2020 ஜப்பானில் 2 ஆவதுமுறையாக 2020-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை  கேட்டவுடன் ஜப்பான் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பல கொண்டாட்டங்கள் நடத்தினர் .ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் 125 வது கூட்டம் நடைபெற்றது. இதில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. 2020 -ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இஸ்தான்புல் (துருக்கி) மாட்ரிட் (ஸ்பெயின்)  டோக்கியோ (ஜப்பான்) ஆகிய நகரங்களில் நடத்த அந்தந்த நாடுகள் உரிமை கோரின.இதனால்  ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் சுற்றில் டோக்யோ 42 வாக்குகளும் இஸ்தான்புல், மாட்ரிட் தலா 26 வாக்குகளும் பெற்றன. வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காததால் இஸ்தான்புல், மாட்ரிட் ஆகிய நகரங்களில் எதனை வெளியேற்றுவது என்பதற்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . இதில் இஸ்தான்புல்…

Read More

விண்வெளிக்கு ஈரான் தொடர்ந்து குரங்குகளை அனுப்ப முடிவு

Iran to send another monkey into space  இரண்டாவது முறையாக விண்வெளிக்கு  ஈரான் விண்வெளி மையம் மீண்டும் குரங்கை அனுப்ப முடிவு செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையதின் சொந்த தயாரிப்பான பிஷ்கம் ராக்கெட்டில் ஒரு குரங்கை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.  ஈரான் விண்வெளி மையம் அனுப்பிய குரங்கு விண்வெளியில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பியது. இந்நிலையில், மற்றொரு குரங்கை இன்னும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-II ராக்கெட் மூலம் அனுப்பும் திட்டம் ஒன்று இருப்பதாக ஈரான் அரசின் முக்கிய அதிகாரி தெரிவித்தார்.  இது சம்பந்தமாக தகவல் தெரிவித்த, ஈரான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ஹமித் பசெலி முதலில் அனுப்பப்பட்ட ராக்கெட் திட எரிபொருளில் இயங்குவதாகும் என்றார்.  ஆனால் இப்போது அனுப்ப இருப்பது திரவ எரிபொருளை கொண்டு இயங்ககூடியதாகும். மேலும், ஈரான் விண்வெளி மையம் நஹித், தட்பிர், மற்றும் ஷரிப்…

Read More