பிரபல ரவுடிகள் இருவரை 20வது பேர் கொண்ட கும்பல் வெட்டி கொளை

Two Dalit brothers beheaded at Chidambaram சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே அண்ணன் தம்பியான இரண்டு ரவுடிகளை 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளியும், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் கொடூரமாகக் கொன்றது. பின்னர் இருவரின் தலைகளையும் அக்கும்பல் தனியாக வெட்டி எடுத்து வீசி எறிந்து விட்டுச் சென்ற செயல் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களஞ்சி மேடு என்ற பகுதியில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் ஆம்புலன்ஸ் குமார், ராஜேஷ் என்பதாகும். இவர்கள் இருவரும் அப்பகுதியில் ரவுடிகள். இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் அங்கு வந்த 20 பேர் கொண்ட கும்பல் குமாரையும், ராஜேஷையும் சரமாரியாக அரிவாள்கள்களால் வெட்டினர். வீடுகளில் வெடிகுண்டுகளையும வீசினர். இவர்களைத் தடுக்க குமார், ராஜேஷ் சகோதரர்களின் உறவினர்களும், நண்பர்கள் சிலரும்…

Read More

சிவகாசி அருகே பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தேங்கிய மழைநீரில் மூழ்கி பலி

Four school students drown in Viswanatham சிவகாசி அருகே மண் அள்ளியதில் ஏற்பட்ட பள்ளத்தில், மழை நீர் தேங்கிய நிலையில்,அதில் குளித்த பள்ளி மாணவர்கள் நான்குபேர், நீரில் மூழ்கி பலியாகினர். சிவகாசி அருகே உள்ளது விஸ்வநத்தம்.இங்குள்ள தெற்கு பகுதியில் தொடர்ந்து மண் அள்ளியதால் பெரும்பள்ளம் ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில், பள்ளத்தில் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால், தேங்கிய நீரில் குளிக்க, விஸ்வநத்தத்தை சேர்ந்த ஏழு மாணவர்கள், நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்றனர். இதில் நான்கு பேர் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மண் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கினர். இதை பார்த்த மற்ற மாணவர்கள், அருகில் உள்ள  பட்டாசு ஆலைக்கு சென்று தகவல் கொடுத்தனர். தொழிலாளர்கள், நீரில் மூழ்கிய மாணவர்கள் உடல்களை தேடினர்.விஸ்வநத்தத்தில் உள்ள்…

Read More

பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைது

Coimbatore school Teacher stabbed to death by her drunked husband after suspecting her கோவை : பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைது.. கோவை ஆவாரம்பாளையத்தில் இருக்கும் பட்டாளம்மன் கோவில் வீதியில் வசித்துவருபவர் தனியார் பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி (வயது 29) இவரது கணவரின் பெயர் சந்தோஷ்குமார் (வயது 30). சந்தோஷ் குமார் ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக பணிபுரிந்து வருபவர். இவரது மனைவி உமாமகேஸ்வரி அதே பகுதியில் இருக்கும் ஓர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, இவ்விருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாசினி (வயது 6) என்ற மகளும், விகாஷ் (வயது 5) என்ற மகனும், இருக்கின்றனர். முதலில் மனைவியின் மேல்…

Read More

தமிழகத்தில் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது : – மத்திய இணையமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன்

BJP minister Pon.Radha Krishnan said today that NDA alliance in tamilnadu is very strong enough and this will successfully continue in 2016 Tamilnadu assembly election. சென்னை : – தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்தின் பிறந்த நாளையோட்டி வாழ்த்து தெரிவிக்க, மத்திய இணை அமைசசர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு சென்றார்கள். அதன் பின், வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியில் வந்த, மத்திய இணை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி சார்பாகவும், பா.ஜ.க. சார்பாகவும், தனிப்பட்ட என் சார்பாகவும் தே.மு.தி.கத்தின் தலைவர் திரு.விஜயகாந்தை நேரில் சந்தித்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன் என கூறினார்.…

Read More

மரியாதை தராத கிராமத்து இளைஞனின் கை துண்டிப்பு.. மதுரையில் பஞ்சாயத்து தலைவியின் கணவர் ஆணைப்படி..

Youngster hand cut by village politician near Madurai for not greeting and respecting on arrival மதுரை: மதுரை அருகில் இருக்கும் ஓர் கிராமத்தினுடைய பஞ்சாயத்துத் தலைவியினுடைய கணவர் வந்தபொழுது மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று மரியாதை தராமல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார், அதற்காக 17 வயது மதிக்காத இளைஞரின் கையை துண்டித்துள்ளார். இந்த வெறித்தனமான செயலால் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே மாபெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் நரிக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உள்பட்ட சிறுவானூர் எனும் கிராமத்தைதில் இராஜதுரையின் மகன் கார்த்திக் என்பவர் தமது வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த போது, பஞ்சாயத்துத்தலைவி திருமதி.தேவியும், அவர்தம் கணவர் திரு.கிருஷ்ணன் அவர்களும் நடந்து வந்துதுகொண்டிருந்த போது உட்காந்திருந்த திரு.கார்த்திக் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் கூறாததால் மிகுந்த சினமடைந்த திரு.கிருஷ்ணன், தங்கள் வரும்போது…

Read More

8 நிமிடத்தில் 14 கி.மீ., தூரத்தைக் கடந்த இதயம்

Heart passed 14 Km distance within 8 minutes வங்கி பெண் ஊழியரின் மூளைச்சாவு நிலையை அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளுல்ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது. சென்னை மணப்பாக்கத்தில் இருந்து, அவரது இதயத்தை, 8 நிமிடங்களில்,14 கி.மீ., தூரத்தைக்கடந்து, முகப்பேருக்குகொண்டுச்செல்லப்பட்டது. மூளைச்சாவு நிலை: எப்சிபா, வயது 22, இவர் சென்னை பாடியைச் சேர்ந்த,தனியார் வங்கி ஊழியர். இவர், உதயம் தியேட்டர் அருகே, கடந்தஜூலை, 27ம் தேதி மாலை, விபத்தில் சிக்கி, பலத்த காயம் அடைந்து, சென்னை, ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையும்பலனின்றி, மூளைச்சாவு நிலையை அடைந்தார்.இதையடுத்து, அவரின்குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை, தானம் அளித்தனர். இதையடுத்து, அறுவைச் சிகிச்சை ‘மியாட்’ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, நடந்தது. இதில், இதயம், கண்கள்,சிறுநீரகங்கள், மற்றும் கல்லீரல் என, ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது.…

Read More

தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்

Sathish from Tamilnadu has won Gold Medal in Commonwealth Games தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின், எடைப்பிரிவில் 77 கி.கி., பளுதுாக்குதலில்,தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்கத்தைவென்று அசத்தினார். காமன்வெல்த் விளையாட்டு,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவிலிருந்து,சதீஸ் சிவலிங்கம் மற்றும்ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தகுதிச்சுற்றில் அசத்தி பைனலுக்கு முன்னேறினர். இதில் தமிழகத்தை சேர்ந்த,சதீஸ் சிவலிங்கம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும்’ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கி.கி., மற்றும் அதிகபட்சமாக 179 கி.கி., வரை ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் துாக்கினார். ஆக, சிவலிங்கம் ஒட்டுமொத்தம் 328 கி.கி., வரை துாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். சக வீரரானரவி,ஒட்டுமொத்தமாக 317 கி.கி., வரை துாக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். Sathish from Tamilnadu has won…

Read More

இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் உள்ள மாநிலம் ; தமிழகம் முதலிடம்

7 people commit suicide every day due failure examination இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாக தேசிய சுகாதார புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார விவரத் தொகுப்பை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் வெளியிட்டார். அதில், 2005-ம் ஆண்டுமுதல் தற்கொலைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகம்தான் தற்கொலைகள் அதிமாக நடந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 16,112 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 3-வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 14,957 கடந்த ஆண்டு…

Read More

செங்கோட்டை அருகே காரும் அரசுப் பேருந்தும் மோதி விபத்து ஐந்து பேர் பலி

5 killed 7 injured bus car collision திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே இலஞ்சி – கொட்டாகுளம் திருப்பத்தில் அரசுப் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், 5 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த பழனி, பச்சையப்பன், செல்வம், சவுகத் அலி, செல்வராஜ், ராஜ்குமார், பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர், குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு, நேற்று இரவு செங்கோட்டை- பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள புரோட்டா கடையில் உணவுண்டனர். பின்னர் இரவு 11 மணி அளவில் தங்கள் ஊருக்கு காரில் திரும்பினர். பார்டரில் இருந்து சிறிது தொலைவில், அவர்கள் சென்ற கார், செங்கோட்டை-திருமங்கலம் சாலையில் கொட்டாகுளம் கிராமத்தில்…

Read More

பெண்களின் தற்காப்பிற்க்கு மிளகாய்பொடி அவசியம் என போலீசார் அறிவுரை

Police advised Girls to use Chili Powder as a prevention tool பெண்களின் தற்காப்பிற்க்கு மிளகாய்பொடி அவசியம் என போலீசார் அறிவுரை. ”மதுரையில், பெண்கள் நகைபறிப்பு திருடர்களிடமிருந்து தப்பிக்க, எப்போதும் மிளகாய்பொடி கைவசம் வைத்திருக்க வேண்டும்” என்று குற்றப்பிரிவு போலீசார் அறிவுரை கூறியுள்ளார். மல்லிகை குடியிருப்பில், கே.கே.நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் ஏற்படும்நகை பறிப்பு மற்றும் வீடுகளில் திருட்டை நடக்காமல் தடுக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலைவாணி மாதர் சங்கம் மற்றும் ஸ்நேகா மாதர் சங்கம் உறுப்பினர்கள் பங்கேற்றனர். குற்றப்பிரிவு துணை கமிஷனர்  அறிவுரை ”வெளியே செல்லும் போழுது நகைக்கடை விளம்பரம் போன்று அதிக நகைகளை அணிந்து செல்ல கூடாது. பஸ் ஸ்டாண்டில், ரயில்வே ஸ்டேஷனில் திருடர்களைப் பற்றி எச்சரிக்கும்போது, உங்கள் பையை பயத்தில் நீங்களே…

Read More