பிலிப்பைன்சில் பயங்கர நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 பதிவு: 95 பேர் பலி

Deadly earth quake hits Philippine in Bohol and Cebu மணிலா:- பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் சுமார் 95 பேர் பலியானார்கள். அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின.  பிலிப்பைன்சில் சுற்றுலா மையமான சிபு மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. அதனால் பீதியும் பதட்டமும் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச்சென்று தஞ்சம் அடைந்தனர். இந்நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடுமையான சேதம் அடைந்துள்ளது. வீடுகள் மற்றும் ஏனைய  கட்டிடங்கள் யாவும் அதிர்ந்து சரிந்து  விழுந்ததில் 12 பேர் பலியானார்கள். இந்த நில அதிர்வினால் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் முன்னாள் சிட்டிஹால் உள்பட பல்வேறு புராதன சின்னங்கள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்தது. சிபு அருகே…

Read More

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது நில அபகரிப்பு புகார்

Land grabbing case against former Vice chancellor of Anna university Mr.Kalanidhi அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடம் ஒன்றை, பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் துணைவேந்தர் அபகரித்துக் கொண்டதாக இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் (ஐ.எஸ்.டி.ஏ.) நிர்வாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது பற்றி இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தினுடைய தலைவர் ஆர்.முருகேசன் (நேற்று) சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சென்ற 1992-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக கழகத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பாக தொழிற்ப்பயிற்சி மையம் ஒன்று கட்டப்பட்டது. இதற்காக தனியாக ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக திரு.நடேசன் என்பவர்…

Read More

2 மாதத்திற்கு பிறகு தமிழகம் ஆந்திரா இடையே பேருந்து இயக்கம்

Bus Transport started again between Andhrapradesh and Tamilnadu ஆந்திராவிற்கு கடந்த 2 மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுவதால் திருப்பதி திருமலை பிரமோற்சவத்துக்குச் சென்ற பக்தர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தெலங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆந்திர கடலோர மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பந்த் (வேலை நிறுத்தம்) அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் ஆந்திரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரதேசத்திற்கும்  இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாததிற்குப்பின் பதற்றம் சற்றே தணிந்து, தற்சமயம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில், சித்தூர் உள்பட்ட ஆந்திரபிரதேச எல்லை மாவட்டங்களுக்கு மட்டும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டன.…

Read More

இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்பு

The International journalist conference held at Srilanka Capital Colombo கொழும்பு: இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. வேலு பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் பிடித்து வைத்து படுகொலை செய்ததாக பிரபல இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கு: இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஈரான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், மலேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், பூடான், நேபால், மால தீவு, ஆகிய 12 நாடுகளை சார்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபெற்றனர். அப்பொழுது உலக அளவில் புகழ்பெற்ற தி எக்கனோமிஸ்ட் என்ற ஆங்கில  இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரை நிகழ்த்திய போது, ‘2009…

Read More

உ.பி.யில் 1000 டன் தங்க புதையல்! தொல்லியல் துறை ஆய்வு செய்யமுடிவு!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருக்கிறது என தகவல் வெளியானதால்  தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்ரப்பிரதேசத்தில் உன்னாவோ மாவட்டம் கேடா எனும் கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற அரசர் வாழ்ந்த கோட்டை ஒன்று உள்ளது. அந்த மன்னர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்து உயிர் துறந்தார். தற்சமயம் அந்த அரசரின் கோட்டை சிதிலமடைந்து இருக்கிறது. எனினும் மன்னரை அந்த பகுதி மக்கள் இன்னும் மறவாமல் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்குள்ள துறவி ஒருவர் தனது கனவில் அரசர் தோன்றி அந்த கோட்டையில் 1000 டன் தங்கப் புதையுண்டு உள்ளதாக கூறினார் என கூறினார். எனினும் இதை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. இருந்தாலும் மத்திய இணை அமைச்சர்…

Read More

தூத்துக்குடி அருகில் சுற்றி வளைக்கப்பட்ட தனியார் போர்க்கப்பல்!

American private war ship found near Indian sea area near Tuticorin port, Tamilnadu. The investigation is going on regarding the illegal entry of the American vessel தூத்துக்குடி: தூத்துக்குடி அருகில் தனியார் போர்க் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது என பரபரப்பான செய்திகள் வெளியாகிஇருக்கிறது. தூத்துக்குடி அருகே கடலில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றார்கள். அப்பொழுது ஒரு மர்ம கப்பல் நடுக்கடலில் நிலை கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே அந்த  தனியார் போர் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது.  தனியார் போர் கப்பல் என்பதால் பல்வேறு துறையில் உள்ள அரசு அதிகாரிகளும் தூத்துக்குடி நகரில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அங்கே இருந்து இந்திய கடற்பரப்புக்குள்…

Read More

மணல் கொள்ளை… நீதிமன்றம் கண்டனம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் இடைநீக்கம்

Shri. L.Sitherasenan I.A.S., District Collector Collectorate, Kanchipuram suspended சென்னை: மணல் கொள்ளை சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்தரசேனன் இடைநீக்கம் செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் உள்ள பல கிராமங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் அதை தடுக்க வற்புறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூந்தமல்லி வட்டார ஆற்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 19ந் தேதி நீதிபதி மணிகுமார் காஞ்சிபுரம் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு கண்டனங்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சித்திரசேனனை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Shri. L.Sitherasenan I.A.S., District Collector Collectorate, Kanchipuram suspended

Read More

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிஇட மாற்றம்

6 IAS officers transferred in Tamilnadu  தமிழ்நாட்டில் 6 ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை பணி இடம்  மாற்றப்பெற்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்ட உத்தரவுவில்: திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன்: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் இதற்கு முன்பு வகித்த பதவி: மக்கள் தொகை ஆணைய கணக்கெடுப்பு இயக்குநர் திரு.ஸ்வரண் சிங்: தொழில் துறை ஆணையர் – தொழிற்சாலைகள் மற்றும் வணிகம் இதற்கு முன்பு வகித்த பதவி: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.என்.எஸ்.பழனியப்பன்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர்(பஞ்சாயத்துராஜ்). இதற்கு முன்பு வகித்த பதவி: தொழில் துறை முதன்மைச் செயலர் திரு.சி.வி.சங்கர்: தொழில் துறை முதன்மைச் செயலாளர். இதற்கு முன்பு வகித்த பதவி:ஊரக வளர்ச்சி மற்றும்…

Read More

பாகிஸ்தானில் புதைத்த சடலத்தை தோண்டியெடுத்து வீசி கொடுமை

Religious gang Removed Hindu dalit dead Body From the Grave yard in Pakistan பாகிஸ்தான்: இஸ்லாமியருக்கு ஒதுக்கிய சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த தலித் வாலிபரின் சடலம் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு வெளியில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியில், இந்து தலித் இனத்தை சேர்ந்த புரோ பீல் எனும் நபர் சாலை விபத்து ஒன்றில் இறந்தார். இறுதி சடங்கு செய்து அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் எனும் சுடுகாட்டில் அடக்கம் செய்தார்கள். பின்னர், அடக்கம் செய்த சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கும்பல் ஒன்று அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வீசினார்கள். இஸ்லாமிய சமுதாயத்தினர் சுடுகாட்டில் ஒரு இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க…

Read More

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அமைச்சர் மொய்லி மெட்ரோ பயணம்

Indian Petroleum minister Veerappa Moily travled in Metro rail to his office எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று புது தில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோலிய விலை உயர்வை கட்டுபடுத்த ‘எரிபொருள் சிக்கனம்’ மிக அவசியம் எனும் கருத்தை பல சமயங்களில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார் அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த மாதம் ‘எரி பொருள் சிக்கனம்’ சம்பந்தமாக உரையாற்றும் போது அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மெட்ரோ இரயில் மற்றும் இதர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாக கூறியிருந்தார். அவரது அறிவிப்பின் படி இன்று காலை அவர் அலுவலகத்திற்கு கிளம்பி வீட்டிற்கு அருகில் உள்ள மெட்ரோ இரயில்…

Read More