மாணவரை கால் மசாஜ் செய்து விடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம்

A school teacher insisted to massage her leg was suspended in Maharashtra மகாராஷ்ட்ராவில் மாணவரை கால் அமுக்கிவிடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் : –  மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியில் இருந்துவரும் பெண்மணி திருமதி.ஷித்தல். மாணவன் ஒருவனை வகுப்பறையில் தனத்துக்கு மேசைக்கு கீழே சென்று தனது காலை பிடித்து மசாஜ் செய்யும்படி கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த மாணவன் தனது கைபேசியில் படம் மற்றும் வீடியோ மற்ற மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளான். 7ம் வகுப்பில் நடந்த இந்த சம்பவம் இந்த வீடியோ கட்சியினால் தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதை போலவே பலமுறை ஆசிரியர்…

Read More

மாலதீவில் இந்திய தூதரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

Indian High Commissioner of Maldives : The car of Mr.Rajeev Shahare who is the present Indian High Commissioner  of Maldives was attacked by unidentified persons in capital of Male with stones and weapons மாலத்தீவிற்க்கு உண்டான இந்தியவின் தூதரக அதிகாரியாக பணிபுரிபவர் திரு.ராஜீவ் சகாரே. அவரது காரின் மீது சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திஇருக்கின்றனர். இந்த தாக்குதலில் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மாலத்தீவில் மோட்டார் சைக்கிளில் காரை விரட்டி வந்த சில மர்ம நபர்கள் கற்கள் மற்றும் கூர்மையான பல ஆயுதங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதலில் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்திற்கு மாலத்தீவினுடைய இந்நாள் அதிபர் வஹீத் மற்றும் முன்னால் அதிபர் நஷீத்  ஆகியோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். The car of…

Read More

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீசி தாக்குதல்

stone pelting on Kerala Chief Minister Oomen Chandy in kannur , he suffered minor injuries கண்ணூர் :- கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஒரு காவல்துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் கண்ணூர் சென்றார். அங்கே அவர் வர  எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி ஜனநாயக முன்னணியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது போராட்டகாரர்களில் சிலர் திடீரென அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். காரில் அவர் வந்த போது எல்லா புறமும் போராட்டக்காரர்கள் அவரது காரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் காரினுடைய பின் கண்ணாடிகள் உடைந்தது. அப்பொழுது உடைந்த கார் கண்ணாடியினுடய தூள் தெறித்து உம்மன் சாண்டியின் நெற்றியில் பட்டு காயம் உண்டானது. அவர் மேல் மேலும் ஒரு கல் அடியும் பட்டது. இந்த கல்…

Read More

வன்புணர்வு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கைது!

Rajasthan minister Babu lal nagar of congress goverment arrested over rape charge on a 35 Year old women who approached him to get a Government Job ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பால்வளம் மற்றும் கதர்துறை அமைச்சராக இருந்த திரு.பாபுலால் நாகர் ஒரு பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் (வற்புறுத்தலின் பேரில்). பின்னர் பாபுலால் நாகரை காங்கிரஸ் கட்சியும் விலக்கி வைத்திருந்தது. 53 வயதாகும் அமைச்சர் திரு.பாபுலால் நாகர், தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக 35 வயது பெண்மணி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்கைப் பதிவு செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த மத்தியப் புலனாய்வு அமைப்பினர் நேற்று விசாரணை நடத்தினார்கள். அதற்கு…

Read More

மனைவியை தெருவில் தாக்கி நிர்வாணமாக்கிய குடிகார கணவன் கைது

police arrested a 30 year old drunken man for stripping and assaulting his 28 year old wife after suspecting her at  Bhiwandi in Maharashtra. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் குடிபோதை தலைக்கு ஏறி தனது மனைவியை தெருவுக்கு இழுத்து வந்து நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தினால் தாக்கிய குடிகார கணவன் காவல்துறையினரால் கைது செய்யபட்டான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் பிவான்டியைச் சேர்ந்த குடிகாரன் கமால் அன்சாரி(வயது 30). அவனுக்கு  தனது 28 வயது மனைவியின் நடத்தை மேல் திடீரென சந்தேகம் உண்டானது. இந்த நிலையில் குடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அன்சாரி தனது மனைவியை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தான். பின்னர் தெருவிலே, அவரை நிர்வாணமாக்கி கூர்மையான ஓர் ஆயுதத்தை வைத்து அவருடைய உடலில் பல இடங்களில் குத்தி…

Read More

தவறான மருத்துவ சிகிச்சையினால் பெண் சாவு: ரூ. 6 கோடி நஷ்டஈடு

Rupees 6 crores compensation for Medical Negligence கடந்த 1998ம் ஆண்டு கோல்கட்டா தனியார் மருத்துவமனையில் தவறான மருத்துவ சிகிச்சையினால் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அந்த பெண்ணின் கணவருக்கு 5.96 கோடி ருபாய் நஷ்டஈடு வழங்க உச்ச நீதிமன்றம், மருத்துவம் அளித்த தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாதயா,வி.கோபால கவுடா ஆகியவர்கள் அடங்கிய அமர்வு, மருத்துவமனையினுடைய தவறான மருத்துவ சிகிச்சையால் அனுராதா உயிரிழந்ததற்காக, அவருடைய கணவர் குணால் சஹாவுக்கு 5.96 கோடி ருபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குமாறு உத்தரவு பிரபிக்கபட்டது. இந்த தொகையை எட்டு வாரங்களுக்குள், 6% வட்டியுடன் கொடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். இந்த நஷ்டஈட்டுத் தொகையில் மருத்துவர்கள் சுகுமார் முகர்ஜியும் பல்ராம் பிரசாத்தும் தலா 10 லட்சம் ருபாய் வழங்க வேண்டும்; மற்றொரு…

Read More

புதுடெல்லியில் திடீர் என்கவுண்டர்!! 3 ரவுடிகள் சுட்டுக்கொலை.

3 Rowdies killed in a police encounter at Delhi புதுடெல்லி: டெல்லியில் 3 பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் அதனால் டெல்லி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. டெல்லி நகரின் மிகப்பிரபலமான பெரிய கூலிப்படைத் தலைவனாக உள்ளவன் நீது தபோடியா. கொலை, கடத்தல், கொள்ளை மற்றும் கற்பழிப்பு என அவன் மீது டெல்லியில் சுமார் 50–க்கும் மேற்பட்ட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. அவனைப் பிடித்த்தால் மிகப்பெரும் ரவுடி கூட்டங்கள் பலவற்றை ஒடுக்கி விடமுடியும் என்ற கண்ணோட்டத்தோடு டெல்லி காவல்துறை ரவுடி நீது தபோடியா பற்றிய தகவல் கொடுப்பவருக்கு 7 லட்சம் ருபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவித்திருந்தனர். எனினும் அவன் காவல்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து தப்பி வந்தான். இந்நிலையில் அவன் டெல்லிக்குள் வந்து பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ஒரு…

Read More

மாநாட்டை இந்தியா புறக்கணித்தால்!!! இலங்கை தூதர் எச்சரிக்கை

prime minister Manmohan singh may not participate in common wealth summit காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால்!!! இந்தியாவுக்கு இலங்கை தூதர் எச்சரிக்கை இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கையில் நடக்கபோகும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுகையில் தமிழக மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து  பிரதமர் மன்மோகன் சிங் நல்ல ஒரு முடிவை எடுப்பார் என்று கூறினார். இதனிடையில் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தொலைக்காட்சி நிருபரின் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கையில், தமிழ்நாடு  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களுடைய  தற்போதைய நிலை பற்றி எந்த ஒரு…

Read More

ஓடும் ரயிலில் பிறந்து கழிவறை வழியே விழுந்த குழந்தை உயிரோடு மீட்பு

The Baby born in train toilet and fell down in Track saved by passengers ஓடும் இரயில் கழிவறையில் பிரசவிக்கப்பட்டு, கழிவறை துளை வழியே தண்டவாளத்தில் விழுந்த பச்சை குழந்தை எந்த ஒரு காயமும் இன்றி மீட்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகில் ஜூம்கா கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அப்ரோஜா பிபி, தன் நிறைமாத கர்ப்பிணி மகளான திருமதி.ரெஹானி பிபியை இரயிலில் அழைத்துக் கொண்டு போனார். அப்போது இரயில் நாடியா மாவட்டம் பலாஷி இரயில் நிலையத்தில் நின்றது. நிறை மாத கர்பிணியான திருமதி.ரெஹானி பிபி கழிவறைக்குச் போனார். அங்கே திடீர் என்று அவருக்கு பிரசவம் வேதனை வந்து குழந்தையை பிரசவித்தார். பிறந்த குழந்தை கழிவறையின் துளை வழியே தண்டவாளத்தில் விழுந்தது. குழந்தை கீழே விழுந்தவுடன் அவர் கதறினார். அவரது கதறல் சத்தம் கேட்டு…

Read More

இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த நகரம் பெங்களூர்: புதிய ஆய்வு

Bangalore tops as business hub, Chennai a close second இந்தியாவிலேயே தொழில் ஒன்றை தொடங்கி நடத்த சிறந்த நகர பட்டியலில் பெங்களூர் நகரம் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குஅடுத்தபடியாக சென்னை, மும்பை, புனே ஆகிய நகரங்கள் அந்த சிறப்பை பெற்றுள்ளன. இந்த சிறப்பு  பட்டியலில், இந்தியாவின் தலைநகரமான டெல்லி இடம்பெறவில்லை எனினும், டெல்லியின் பிராந்தியத்தில் அமைந்து இருக்கும் நொய்டா, குர்கான் ஆகிய நகரங்கள்  17-ம் இடம் மற்றும் 19-ம் இடம் ஆகிய வரிசையில் வருகின்றன. மனிதவளம், அடிப்படை வாழ்க்கைத் தரம், உட்கட்டமைப்பு வசதிகள், நகர கலாச்சாரம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பெங்களூர் தான் தொழில் தொடங்க பெரிதும் உகந்ததாக உள்ளது. மேலும் இங்கு தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடு இல்லாத குடிதண்ணீர் விநியோகம்,  எதிதான போக்குவரத்து வசதி மற்றும் குடியிருப்பு வசதி, அலுவலக இடங்கள் மற்றும்…

Read More